Saturday, November 15, 2014

tnpsc 2

TNPSC : ஆன் - லைன் வழி தேர்வு திட்டம்: ரத்து செய்ய தேர்வாணையம் முடிவு

கடந்த 8ம் தேதி, 'ஆன் - லைன்வழியில் நடந்த குரூப் 2 முதன்மைதேர்வில்பெரும் குளறுபடி ஏற்பட்டதன் எதிரொலியாகஆன்-லைன்வழி தேர்வை ரத்து செய்யஅரசுப் பணியாளர் தேர்வாணையமான,

டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.

தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர்நட்ராஜ்ஆன்-லைன் வழிதேர்வை அமல்படுத்தினார்குறைந்த தேர்வர்கள் பங்கேற்கும் தேர்வில்மட்டும்புதிய திட்டத்தை அமல்படுத்தினார்இந்த வகை தேர்வு,தேர்வாணைய அலுவலகத்தில் மட்டும் நடந்து வந்ததுஇதனால்எந்தபிரச்னையும் ஏற்படவில்லைகடந்த 8ம் தேதிகுரூப் 2 முதன்மைத்தேர்வுமாநிலம் முழுவதும், 44க்கும் மேற்பட்ட மையங்களில் நடந்தது. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த தேர்வுஇருதாள்களாக நடத்தப்பட்டதுகாலையில்ஆன்-லைன் வழியிலானதேர்வும்பிற்பகலில்விரிவாக விடை அளித்தல் முறையிலானதேர்வும் நடந்தது

இதில்ஆன்-லைன் வழியிலான தேர்வில்பெரும் குளறுபடிஏற்பட்டதுபல இடங்களில் மின்சாரம் இல்லாததாலும்சிலமையங்களில், 'சர்வர்முடங்கியதாலும்குறித்த நேரத்தில்தேர்வுதுவங்கவில்லைமறைமலை நகர் அருகே உள்ள ஒரு மையத்தில்,ஒரு அறையில், 'சர்வர்கோளாறால்தேர்வெழுத முடியாத 43தேர்வர்கள்போராட்டம் நடத்தினர்கடைசியில்இவர்களுக்கு,மறுநாள் புதிய தேர்வு நடத்தப்பட்டதுசென்னை செங்குன்றத்தில்அமைக்கப்பட்ட மையத்திலும், 'சர்வர்பிரச்னை ஏற்பட்டதுஇப்படி,பல மையங்களில் குளறுபடி ஏற்பட்டதன் காரணமாகஆன்-லைன் வழிதேர்வுதேவைதானா எனதேர்வாணையம் ஆலோசித்து வருகிறது.மின்சார பிரச்னையையும்தொழில்நுட்ப பிரச்னையை யும்தவிர்க்கமுடியாது என்பதால்ஆன்-லைன் வழி தேர்வை ரத்து செய்ய,தேர்வாணையம் முடிவு செய்துள்ளதுஇது குறித்துவிரைவில், 'போர்டுகூட்டத்தில் ஆலோசித்துமுடிவு எடுக்கப்பட உள்ளது.

சரியாக திட்டமிடாததால் தோல்வியில் முடிந்த திட்டம்பெரிய அளவில்நடத்தப்படும் எந்தத் திட்டத்தையும்அரசு அதிகாரிகள் திறம்படக்கையாள்வதில்லை என்ற குற்றச்சாட்டுஅடிக்கடி எழுகிறதுஅரசுசெயல்படுத்தும் இலவச திருமணமானாலும்நலத் திட்டஉதவிகளானாலும்எப்போதும் குழப்பமே மிஞ்சுகிறதுதாலிக்குத்தங்கம் திட்டத்தில் கூடபயனாளிகளுக்குதிருமணமாகிகுழந்தைபிறந்த பிறகேஅரசின் தங்கத் தாலி கொடுக்கப்படுகிறது.டி.என்.பி.எஸ்.சி., தேர்வில்அதிக அளவில் தேர்வர்கள் கலந்துகொள்வர் என்பதுஅரசு அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிந்தும்,போதுமான அளவு ஏற்பாடுகள் செய்திருக்கவில்லைதேர்வுமையங்களைத் தேர்ந்தெடுக்கும்போதேஅவற்றில்மின் வசதி,கம்ப்யூட்டர் சர்வர் வசதிகள் உள்ளனவா என்பதைச் சரிபார்க்கவேண்டியதுதேர்வு நடத்தும் அமைப்பின் கடமை. 'ஏற்பாடுகளைதுல்லியமாகச் செய்யாமல்மேம்போக்காக கடமையாற்றும்அதிகாரிகளின் போக்கேஇத்தகைய குழப்பங்களுக்குக் காரணம்என,தேர்வர்கள் கூறுகின்றனர்.

No comments: