Sunday, December 28, 2014

Pallikudam

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை - கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு

           கடந்த சில நாட்களுக்கு முன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. இந்த அட்டவணை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

           பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 19ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டடுள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட 15 நாட்கள் முன்னதாகவே தேர்வுகளை தொடங்குவது மாணவர்களுக்கு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் அதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டிய அவசியம் என்ன என கல்வியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இதனால் செலவு குறையும் என  கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், தேர்வு விவகாரங்களில் இது போன்ற நடவடிக்கை தவறென என குறிப்பிடுகின்றனர். ""தமிழக அரசு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்களை மாணவர்கள் நலனுக்காக பள்ளிகள் தொடங்குவதிலும், விலையில்லா திட்டங்களை நிறைவேற்றுவதிலும் செலவிடுகிறது. இதனை ஒப்பிடுகையில் 10ம் வகுப்பு தேர்வை முன்கூட்டியே நடத்துவதன் மூலம் மிக சொற்பமான தொகையையே மிச்சப்படுத்த இயலும். மாணவர்களின் எதிர்கலத்தை பாதிக்கக்கூடிய தேர்வு விஷயத்தில் கல்வித்துறை கவனமாக இருக்க வேணடும்,'' என்று குறிப்பிடுகின்றனர். மேலும் தேர்வை முன்கூட்டியே நடத்துவதால், பட்டதாரி ஆசிரியர்கள் கண்காணிப்பு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு முன்னதாகவே சென்றுவிடுவர். இதனால் 6 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாதிப்பு எற்படும்.

           தேர்வு அட்டவணையில் ஆங்கிலத்தேர்வுக்கு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை. தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர்கள் ஆங்கில வழி கல்வி கற்பதால் அவர்கள் ஆங்கிலத் தேர்வை எளிதில் எதிர்கொள்ள இயலும். ஆனால் கிராமப்புறங்களில் அரசுப்பள்ளி மாணவர்களின் நிலையோ பரிதாபமானது. இது குறித்து அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஒருவர் குறிப்பிடும் போது, ""9ம் வகுப்பு வரை முப்பருவ கல்விமுறையில் பயின்ற மாணவர்கள் இந்த ஆண்டு தான் 100 மதிப்பெண் தேர்வுகளை எதிர்கொள்ள உள்ளனர். குறிப்பாக ஆங்கில பாடத்தில் கேள்வித்தாள் முற்றிலுமாக மாறியிருக்கும். இந்நிலையில் ஆங்கிலத்தேர்வுக்கு விடுமுறை இல்லை என அறிவித்திருப்பது கண்டிப்பாக தேர்ச்சி விகிதத்தை பாதிக்கக்கூடிய நடவடிக்கை. இதனால் தேர்ச்சி விகிதம் குறைந்தால் ஆசிரியர்களே பலிகடா ஆக்கப்படுவர்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் ஆய்வுக்கூட்டங்களில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளிடம் காரணம் கேட்கும் போது, பொதுத்தேர்வு அட்டவணையை காரணமாக கூறக்கூடாது என அறிவுறுத்தப்படும். இந்த அட்டவணை ஆங்கில ஆசிரியர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களிடையே கடுமையான குழப்பத்தை எற்படுத்தியுள்ளது, '' என்று குறிபிடுகிறார்.

          பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் வருமா என மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Pallikudam

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை - கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு

           கடந்த சில நாட்களுக்கு முன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. இந்த அட்டவணை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

           பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 19ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டடுள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட 15 நாட்கள் முன்னதாகவே தேர்வுகளை தொடங்குவது மாணவர்களுக்கு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் அதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டிய அவசியம் என்ன என கல்வியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இதனால் செலவு குறையும் என  கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், தேர்வு விவகாரங்களில் இது போன்ற நடவடிக்கை தவறென என குறிப்பிடுகின்றனர். ""தமிழக அரசு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்களை மாணவர்கள் நலனுக்காக பள்ளிகள் தொடங்குவதிலும், விலையில்லா திட்டங்களை நிறைவேற்றுவதிலும் செலவிடுகிறது. இதனை ஒப்பிடுகையில் 10ம் வகுப்பு தேர்வை முன்கூட்டியே நடத்துவதன் மூலம் மிக சொற்பமான தொகையையே மிச்சப்படுத்த இயலும். மாணவர்களின் எதிர்கலத்தை பாதிக்கக்கூடிய தேர்வு விஷயத்தில் கல்வித்துறை கவனமாக இருக்க வேணடும்,'' என்று குறிப்பிடுகின்றனர். மேலும் தேர்வை முன்கூட்டியே நடத்துவதால், பட்டதாரி ஆசிரியர்கள் கண்காணிப்பு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு முன்னதாகவே சென்றுவிடுவர். இதனால் 6 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாதிப்பு எற்படும்.

           தேர்வு அட்டவணையில் ஆங்கிலத்தேர்வுக்கு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை. தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர்கள் ஆங்கில வழி கல்வி கற்பதால் அவர்கள் ஆங்கிலத் தேர்வை எளிதில் எதிர்கொள்ள இயலும். ஆனால் கிராமப்புறங்களில் அரசுப்பள்ளி மாணவர்களின் நிலையோ பரிதாபமானது. இது குறித்து அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஒருவர் குறிப்பிடும் போது, ""9ம் வகுப்பு வரை முப்பருவ கல்விமுறையில் பயின்ற மாணவர்கள் இந்த ஆண்டு தான் 100 மதிப்பெண் தேர்வுகளை எதிர்கொள்ள உள்ளனர். குறிப்பாக ஆங்கில பாடத்தில் கேள்வித்தாள் முற்றிலுமாக மாறியிருக்கும். இந்நிலையில் ஆங்கிலத்தேர்வுக்கு விடுமுறை இல்லை என அறிவித்திருப்பது கண்டிப்பாக தேர்ச்சி விகிதத்தை பாதிக்கக்கூடிய நடவடிக்கை. இதனால் தேர்ச்சி விகிதம் குறைந்தால் ஆசிரியர்களே பலிகடா ஆக்கப்படுவர்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் ஆய்வுக்கூட்டங்களில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளிடம் காரணம் கேட்கும் போது, பொதுத்தேர்வு அட்டவணையை காரணமாக கூறக்கூடாது என அறிவுறுத்தப்படும். இந்த அட்டவணை ஆங்கில ஆசிரியர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களிடையே கடுமையான குழப்பத்தை எற்படுத்தியுள்ளது, '' என்று குறிபிடுகிறார்.

          பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் வருமா என மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Saturday, December 27, 2014

Pallikudam

JAN DIARY -Tentative,
*2.1.15-Reopens ,
*3.1.15- Greiv. day, Pri CRC Enriching Values,
*4.1.15-sun Miladi Nabi,
*5.1.15-Mon R.L Aruthra Darisanam,
*6.1.15 to 8.1.15 - upp pri BRC Training Science, 
*14.1.15- R.L Bhogi festival,
*15.1.15- Thai Pongal holiday,
*16.1.15- Thiruvalluvar day holiday,
*24.1.15- CRC Upp pri EVS, 26.1.15- Republic day.

Pallikudam

"ஆதிதிராவிடர் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்'
               ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

             ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதில் திட்டமிட்டே, தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆதிதிராவிடர் அல்லாத இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி, அதனடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இதன் பின்னணியில் அதிகார வர்க்கத்தைச் சார்ந்தவர்களும், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் உள்ளதாகத் தெரிகிறது.

தற்போது, நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதைக் காரணம் காட்டி, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தைத் தமிழக அரசு முற்றிலும் நிறுத்தி வைத்துள்ளது. அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிப்பதுடன், உடனடியாக ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் கடந்த காலத்தில் இருந்த நடைமுறையையே பின்பற்றி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Pallikudam

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கிடையில் பிளவு ஏற்படுத்த கல்வித்துறை முயற்சி - நாகை பாலா
           தமிழக அரசு ஊழியர்களின் பணித்திறனை (Performance) மதிப்பிடுவது எந்தவொரு துறையிலும் நடைமுறையில் இல்லை. பணி நியமனம் செய்வது போட்டித்தேர்வின் மூலமாகவோ அல்லது வேலைவாய்ப்பு பதிவு மூப்பின்படியோ நியமிக்கப்படுகிறார்கள்.

             பதவி உயர்வு மற்றும் ஊக்க ஊதிய உயர்வு என்பது கூடுதல் கல்வித்தகுதி துறைத்தேர்வு மற்றும் பணிமூப்பு அடிப்படையில் அளிக்கப்படுகிறது. ஓர் ஆண்டு முழுவதும் நீண்ட விடுப்போ அல்லது துறை நடவடிக்கையோ இல்லாமல் இருந்தாலே ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற பலன்கள்.

தனியார்துறையில் மட்டுமே பிரிட்டிஷ் நடைமுறையை பின்பற்றி தனிபட்ட ஊழியரின் பணித்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

தற்போது 12 பக்கங்களை கொண்ட திறன் அறியும் படிவம் (PINDICS)  ஒன்று அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் தொடக்க்க்கல்வித்துறைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.  இந்தப்படிவத்தின் 10 ஆம் பக்கத்தில் உள்ள ஒரு மதிப்பீட்டு படிவத்தில் தலைமையாசிரியர் ஆசிரியரைப்பற்றி மதிப்பிடுவதாக உள்ளது.      
இந்தப் படிவத்தில் ஆசிரியரின் பாடம் பற்றிய அறிவு தொழிற்வளர்ச்சி உள்ளிட்ட 8 செயல்நிலைகளை தலைமையாசிரியர் நான்கு தரநிலைகளில் மதிப்பிடுவதாக உள்ளது.
இந்தப்படிவத்தில் தலைமையாசிரியரும் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் கையொப்பமிடுவதாக உள்ளது,
இதனால் ஏற்படும் விளைவுகள்
• இது ஒரு அரசு ஊழியரை மற்றொரு சக அரசு ஊழியர் வெளிப்படையாக மதிப்பிடப்படுவதற்கான ஒரு மோசமான தொடக்கம்.
• ஒரு தலைமையாசிரியருக்கும் அந்தப்பள்ளியில் உள்ள ஆசிரியருக்கும் நல்ல புரிதல் இல்லாத நிலையில் அவருடைய பணித்திறன் நன்றாக இருந்தாலும் ”எதிர்பார்த்த நிலையை அடையவில்லை” என உள்நோக்கத்தோடு குறிப்பிட வாய்ப்புள்ளது.
• ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளில் ஓரு ஆசிரியரை உயர்வாகவும் மற்றொரு ஆசிரியரை குறைவாகவும் தலைமையாசிரியர் மதிப்பீடு செய்யும் பட்சத்தில் ஆசிரியர்களுக்கிடையே கருத்து வேறுபாடும் பள்ளியில் சுமூகமற்ற சூழ்நிலை ஏற்படும். இது கற்றல் கற்பித்தல் பணியை பாதிக்கும்.

எனவே இது போன்று மற்ற துறைகளில் உள்ள அரசு ஊழியர்கள் மதிப்பீட்டுக்கு  உட்படுத்தப்படாத நிலையில் ஆசிரியர்களை மட்டும்  மதிப்பீடு செய்வதை தொடக்க்க்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் எதிர்க்கின்றனர்.

அல்லது தலைமைச் செயலர் முதல் இரவுக்காவலாளி வரை இது போன்ற வெளிப்படையான மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுவார்களா?  நாகை பாலா....
Pada Salai

Wednesday, December 24, 2014

Pallikudam

இருபதுகளில்...

எழு!

உன் கால்களுக்கு

சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!

ஜன்னல்களைத் திறந்து வை!

படி! எதையும் படி!

வாத்சாயனம் கூடக்

காமமல்ல, கல்விதான்..

படி!

பிறகு

புத்தகங்களை எல்லாம்

உன்

பிருஷ்டங்களுக்குப்

பின்னால் எறிந்துவிட்டு

வாழ்க்கைக்கு வா..

உன் சட்டைப் பொத்தான்,

கடிகாரம்,

காதல்,

சிற்றுண்டி,

சிற்றின்பம்

எல்லாம்

விஞ்ஞானத்தின் மடியில்

விழுந்து விட்டால்,

எந்திர அறிவு கொள்!

ஏவாத ஏவுகணையினும்

அடிக்கப்பட்ட ஆணியே பலம்.

மனித முகங்களை

மனசுக்குள் பதிவு செய்!

சப்தங்கள் படி!

சூழ்ச்சிகள் அறி!

பூமியில் நின்று

வானத்தைப் பார்!

வானத்தில் நின்று

பூமியைப் பார்!

உன் திசையைத் தெரிவு செய்!

நுரைக்க நுரைக்க காதலி!

காதலைச் சுகி!

காதலில் அழு!

இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்

மணம் புரி!

பூமியில் மனிதன்

இதுவரை துய்த்த இன்பம்

கையளவுதான்..

மிச்சமெல்லாம் உனக்கு!

வாழ்க்கையென்பது

உழைப்பும் துய்ப்புமென்று உணர்!

உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!

இன்னும்... இன்னும்...

சூரியக் கதிர்கள்

விழமுடியாத ஆழத்தில்...

**

முப்பதுகளில்...

சுறுசுறுப்பில்

தேனீயாயிரு!

நிதானத்தில்

ஞானியாயிரு!

உறங்குதல் சுருக்கு!

உழை!

நித்தம் கலவி கொள்!

உட்கார முடியாத ஒருவன்

உன் நாற்காலியை

ஒளித்து வைத்திருப்பான்..

கைப்பற்று!

ஆயுதம் தயாரி..

பயன்படுத்தாதே.

எதிரிகளைப் பேசவிடு!

சிறுநீர் கழிக்கையில் சிரி!

வேர்களை,

இடிபிளக்காத

ஆழத்துக்கு அனுப்பு..

கிளைகளை,

சூரியனுக்கு

நிழல் கொடுக்கும்

உயரத்தில் பரப்பு..

நிலை கொள்.

**

நாற்பதுகளில்...

இனிமேல்தான்

வாழ்க்கை ஆரம்பம்..

செல்வத்தில் பாதியை

அறிவில் முழுமையை

செலவழி..

எதிரிகளை ஒழி!

ஆயுதங்களை

மண்டையோடுகளில் தீட்டு!

ஒருவனைப் புதைக்க

இன்னொருவனைக்

குழிவெட்டச் சொல்!

அதில்

இருகையால் ஈட்டு..

ஒரு கையாலேனும் கொடு..

பகல் தூக்கம் போடு.

கவனம்!
இன்னொரு காதல் வரும்!

புன்னகைவரை போ..

புடவை தொடாதே.

இதுவரை இலட்சியம் தானே

உனக்கு இலக்கு!

இனிமேல்

இலட்சியத்துக்கு நீதான்

இலக்கு..

**

ஐம்பதுகளில்...

வாழ்க்கை, வழுக்கை

இரண்டையும் ரசி..

கொழுப்பைக் குறை..

முட்டையின் வெண்கரு

காய்கறி கீரைகொள்!

கணக்குப்பார்!

நீ மனிதனா என்று

வாழ்க்கையைக் கேள்..

இலட்சியத்தைத் தொடு

வெற்றியில் மகிழாதே!

விழா எடுக்காதே!

**

அறுபதுகளில்...

இதுவரை

வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..

இனியேனும்

வாழ்க்கையை நீ வாழ்..

விதிக்கப்பட்ட வாழ்க்கையை

விலக்கிவிடு..

மனிதர்கள் போதும்.

முயல் வளர்த்துப் பார்!

நாயோடு தூங்கு!

கிளியோடு பேசு!

மனைவிக்குப் பேன் பார்!

பழைய டைரி எடு

இப்போதாவது உண்மை எழுது..

**

எழுபதுக்கு மேல்...

இந்தியாவில்

இது உபரி..

சுடுகாடுவரை

நடந்து போகச்

சக்தி இருக்கும்போதே

செத்துப்போ...

ஜன கண மண...

**நன்றி:கவிப்பேரரசு

Thursday, December 18, 2014

pallikudam

சமையல் எரிவாயு மானியம் பெற இனி ஒரு விண்ணப்பம் மட்டும் போதும்

           சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கு இனி ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய அறிவிப்பு குறித்து இந்திய எண்ணெய் நிறுவனத்தின் (ஐ.ஓ.சி.) செயல் இயக்குநர் யு.வி.மன்னூர் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

              சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் (DBTL) நாடு முழுவதும் நவம்பர் மாதம் 15-ஆம் தேதி, 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் கட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தில் சேர்ந்து, வங்கிக் கணக்கு மூலம் மானியத் தொகையைப் பெறும் நுகர்வோர்கள் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.

அதேநேரத்தில், மானியத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பதை www.mylpg.in என்ற இணையதளம் மூலம் நுகர்வோர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. நேரடி மானியத் திட்டத்தில், நுகர்வோரை இணைப்பதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஒரே விண்ணப்பம்: இந்தத் திட்டத்தில், தற்போது நுகர்வோர் இணைவதற்காக வழங்கப்படும் பல்வேறு படிவங்களைப் பூர்த்தி செய்து அளிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதைக் கருத்தில் கொண்டு, நுகர்வோர் அனைத்து விவரங்களையும் ஒரே விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து வழங்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்.

இதுவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத நுகர்வோர் இனி தனித் தனியாக விண்ணப்பப் படிவங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆதார் அட்டை இருப்பவர்கள், இல்லாதவர்கள், மானியம் பெற விரும்பாதவர்கள் என அனைவரும் ஒரே விண்ணப்பத்தில் அனைத்து விவரங்களையும் தெரிவிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விண்ணப்பம் எரிவாயு விநியோகஸ்தரிடமும், இணையதளத்திலும் கிடைக்கும்.

இதற்கென எந்தவித கட்டணமும் கிடையாது. விண்ணப்பங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் விநியோகஸ்தர்கள் பற்றிய முழுவிவரங்களுடன் நுகர்வோர் புகார் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

ஆதார் எண் கிடைத்தவுடன் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்: ஆதார் எண் இல்லாதவர்களும் நேரடி மானியம் பெறும் வகையில், இந்தத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஆதார் எண் இல்லாத நுகர்வோர்கள் வங்கிக் கணக்கு மூலம் மானியத் தொகையை நேரடியாகப் பெறலாம்.

இருப்பினும், அந்த நுகர்வோர் ஆதார் எண் கிடைக்கப் பெற்றவுடன் அதைப் பயன்படுத்தி மானியத்தைப் பெறுவது அவசியம். எனவே, ஆதார் எண் கிடைத்தவுடன் கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும்.

என்ன மாற்றம்?

புதிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது குறித்து இந்திய எண்ணெய் அதிகாரிகள் அளித்த விளக்கம்:

ஆதார் எண் இருந்தால்... புதிய படிவத்தை இரண்டு நகல் எடுத்து, ஒரு நகலில் இடம்பெற்றிருக்கும் பகுதி ஏ, பகுதி பி-ஐ பூர்த்தி செய்து சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடம் வழங்க வேண்டும்.

மற்றொரு நகலை எடுத்து, அதில் இடம்பெற்றிருக்கும் பகுதி ஏ, பி, சி ஆகியவற்றை பூர்த்தி செய்து விநியோகஸ்தர் அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் போடலாம் அல்லது வங்கியில் நேரடியாகவும் சமர்ப்பிக்கலாம். வங்கியில் சமர்ப்பித்தால் உரிய ஆவணம் கிடைக்கும். அதாவது படிவம் சமர்ப்பித்தலுக்கான ஆவணம் வழங்கப்படும்.

ஆதார் எண் இல்லாவிட்டால்... படிவத்தில் இடம் பெற்றிருக்கும் பகுதி ஏ, பகுதி சி-ஐ பூர்த்தி செய்து எரிவாயு விநியோகஸ்தரிடமோ அல்லது வங்கியிலோ சமர்ப்பிக்கலாம்.

மானியம் பெற விரும்பாவிட்டால்... படிவத்தில் பகுதி ஏ-ஐ மட்டும் பூர்த்தி செய்து, எரிவாயு விநியோகஸ்தரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

முன்பு இருந்தது போல பல்வேறு விண்ணப்பங்களை நுகர்வோர் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. அனைத்துக்கும் ஒரே விண்ணப்பத்தைப் பயன்படுத்தி, நேரடி மானியத் திட்டத்தில் நுகர்வோர் இணையலாம்

Friday, December 12, 2014

Pallikudam

சியோமி ஃபோன்களை இந்தியாவில் விற்க டெல்லி நீதிமன்றம் தடை
எரிக்சன் நிறுவனத்தின் தொழில்நுட்பம் கொண்ட சியோமி செல்ஃபோன்களை இந்தியாவில் விற்க டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஃப்ளிப்கார்ட் வலைதளம் மூலமாக இந்த ஃபோன்களை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.எரிக்சன் நிறுவனத்தின் தொழில் நுட்பத்தை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதான புகாரின் பேரில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எரிக்சன் நிறுவன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சியோமி ஃபோன்கள் இந்தியாவுக்குள் இறக்குமதி ஆகாதவாறு பார்த்துக்கொள்ளுமாறு சுங்கத் துறை அதிகாரிகளுக்கு நீதிபதி ஜி.பி.மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவில் இதுவரை விற்கப்பட்ட சியோமி ஃபோன்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைத்த வருவாய் குறித்த விவரங்களை அளிக்குமாறும் சியோமி, மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நீதிபதி மிட்டல் உத்தரவிட்டார்.முன்னதாக ஏஎம்ஆர், எட்ஜ், 3ஜி ஆகிய 3 தொழில்நுட்பங்கள் தொடர்பாக தான் பெற்றிருந்த 8 காப்புரிமைகளை சியோமி தனது அனுமதியின்றி பயன்படுத்தியதாக எரிக்சன் நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

Wednesday, December 10, 2014

Pallikudam

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்(CPS) இணைய அவகாசம் தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள
அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசுத் துறைகளிலும், ஆசிரியர் பணியிலும் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்குப் பிறகு சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சேரும்போது முகப்பு (இண்டக்ஸ்) எண் வழங்கப்படும்.

தமிழ்நாடு தரவு மையத்தின் (டேட்டா செண்டர்) இணையதளத்தில் இருந்து இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த எண்ணை ஊழியர்கள் பெற்றுள்ளார்களா என்பதை சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உறுதி செய்து கொள்வது அவசியம். உறுதி செய்யப்பட்டதை, கணக்குத் துறை மற்றும் கருவூல அதிகாரியிடம் இதை தெரிவிக்க வேண்டும்.

முகப்பு எண் வழங்கப்படாமல் இருந்தாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். என்றாலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் முகப்பு எண் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான பிப்ரவரி மாதம் வரையில் காலக்கெடு தற்போது நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

முகப்பு எண் பெறாத மற்றும் அதற்கு விண்ணப்பிக்காதவர்களின் சம்பள பட்டியல் பிப்ரவரி மாதம் வரை ஏற்றுக் கொள்ளப்படும். அதன் பிறகு ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே, பிப்ரவரிக்குள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர விண்ணப்பித்து அதற்கான முகப்பு எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Pallikudam

ஏ.இ.இ.ஓ.,க்கள் 63 பேருக்கு தொடக்க கல்வித்துறை 'மெமோ'
ஆசிரியர் சேமநலநிதி கணக்கு தணிக்கை விவரங்களை சமர்பிக்காததால், தமிழகம் முழுவதும், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, 'மெமோ' வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தொடக்க மற்றும் நகராட்சி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின், வருங்கால சேம நலநிதி கணக்கு மற்றும் ஐந்தாவது ஊதியக்குழு முடிவு இருப்பு தொகை தணிக்கை ஆகியவை, ஆண்டு தோறும், தமிழக தகவல் தொகுப்பு விவர மைய கமிஷனரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆண்டு, 63 உதவிதொடக்கக் கல்வி அலுவலகங்கள், தணிக்கை விவரங்களை சமர்பிக்கவில்லை. இதனால், தமிழக தொடக்கக் கல்வி இயக்குனரகம், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், அந்த அலுவலக பணியாளர்கள் மீது, நன்னடத்தை விதிமீறல் படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

Pallikudam

CRC:தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு வருகைச்சான்று
அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு ஈடுசெய்யும் விடுப்புகளாக சிறப்பு தற்செயல் விடுப்பு அளிப்பது போலவே
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசாணை வர உள்ளதால் குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு வருகைச்சான்று அனைவருக்கும் வழங்க இயக்குநர் வாய்மொழி உத்தரவு.

Pallikudam

படிப்புக்களும் அதன் தமிழ்ப்பெயர்களும்..(Ology) 1. Anthropology - மானுடவியல்/ மானிடவியல்
2. Archaeology - தொல்பொருளியல்
3. Astrology - சோதிடவியல் (சோதிடம்)
4. Astrology - வான்குறியியல்
5. Bacteriology பற்றுயிரியல்
6. Biology - உயிரியல்
7. Biotechnology - உயிரித்தொழில்நுட்பவியல்
6. Climatology - காலநிலையியல்
7. Cosmology - பிரபஞ்சவியல்
8. Criminology - குற்றவியல்
9. Cytology - உயிரணுவியல்/ குழியவியல்
10. Dendrology - மரவியல்
11. Desmology - என்பிழையவியல்
12. Dermatology - தோலியல்
13. Ecology - உயிர்ச்சூழலியல்
14. Embryology - முளையவியல்
15. Entomology - பூச்சியியல்
16. Epistemology - அறிவுநெறியியல்/ அறிவாய்வியல்
17. Eschatology - இறுதியியல்
18. Ethnology - இனவியல்
19. Ethology - விலங்கு நடத்தையியல்
20. Etiology/ aetiology - நோயேதியல்
21. Etymology - சொற்பிறப்பியல்
22. Futurology - எதிர்காலவியல்
23. Geochronology - புவிக்காலவியல்
24. Glaciology - பனியாற்றியியல்/ பனியியல்
25. Geology - புவியமைப்பியல்/ நிலவியல்
26. Geomorphology - புவிப்புறவுருவியல்
27. Graphology - கையெழுத்தியல்
28. Genealogy - குடிமரபியல்
29. Gynaecology - பெண்ணோயியல்
30. Haematology - குருதியியல்
31. Herpetology - ஊர்வனவியல்
32. Hippology - பரியியல்
33. Histrology - இழையவியல்
34. Hydrology - நீரியல்
35. Ichthyology - மீனியியல்
36. Ideology - கருத்தியல்
37. Information Technology - தகவல் தொழில்நுட்பவியல்
38. Lexicology - சொல்லியல்
39. Linguistic typology - மொழியியற் குறியீட்டியல்
40. Lithology - பாறையுருவியல்
41. Mammology - பாலூட்டியல்
42. Meteorology - வளிமண்டலவியல்
43. Metrology - அளவியல்
44. Microbiology - நுண்ணுயிரியல்
45. Minerology - கனிமவியல்
46. Morphology - உருவியல்
47. Mycology - காளாம்பியியல்
48. Mineralogy - தாதியியல்
49. Myrmecology - எறும்பியல்
50. Mythology - தொன்மவியல்
51. Nephrology - முகிலியல்
52. Neurology - நரம்பியல்
53. Odontology - பல்லியல்
54. Ontology - உளமையியல்
55. Ophthalmology - விழியியல்
56. Ornithology - பறவையியல்
57. Osteology - என்பியல்
58. Otology - செவியியல்
59. Pathology - நொயியல்
60. Pedology - மண்ணியல்
61. Petrology - பாறையியல்
62. Pharmacology - மருந்தியக்கவியல்
63. Penology - தண்டனைவியல்
64. Personality Psychology - ஆளுமை உளவியல்
65. Philology - மொழிவரலாற்றியல்
66. Phonology - ஒலியியல்
67. Psychology - உளவியல்
68. Physiology - உடற்றொழியியல்
69. Radiology - கதிரியல்
70. Seismology - பூகம்பவியல்
71. Semiology - குறியீட்டியல்
72. Sociology - சமூகவியல்
73. Speleology - குகையியல்
74. Sciencology - விஞ்ஞானவியல் (அறிவியல்)
75. Technology - தொழில்நுட்பவியல்
76. Thanatology - இறப்பியல்
77. Theology - இறையியல்
78. Toxicology - நஞ்சியல்
79. Virology - நச்சுநுண்மவியல்
80. Volcanology - எரிமலையியல்
81. Zoology - விலங்கியல்