Saturday, September 23, 2023

ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்குகள்.

 ஆ. மிகாவேல்    ஆசிரியர் , மணப்பாறை 

     ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களுக்கு 1000 க்கும் மேல் மனு எழுதி கொடுத்துள்ளேன்.

என்னை அணுகி நான் வழக்கு தொடர உதவிய வழக்குகள் 500 ஐ தொடும் .பதவி உயர்வு வழக்கு மேல் முறையீடு செய்ய வேண்டாம் என கூறிய வழக்குகள் 50 ஐ தாண்டும் .Audit வழக்குகளில் , தேர்வு நிலை வழக்குகள் , இளையோர் மூத்தோர் ஊதிய நிர்ணய வழக்குகள் ,ஒழுங்கு நடவடிக்கை வழக்குகள், பணி வரன்முறை வழக்குகள் பங்களிப்பு செய்து வருகிறேன் . பழைய ஓய்வூதிய திட்டம் நீதி மன்ற தீர்ப்பின் மூலம் 20 பேருக்கு பெற்றுக் கொடுத்துள்ளேன் .

01.06.2009க்கு பிறகு பணியில் சேர்ந்த 30 பேருக்கு Fitment 1.86 நீதிமன்றம் மூலம் பெற்றுக் கொடுத்துள்ளேன் . அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பெற்ற ஊதியத்தை அரசுப் பள்ளியில் பெற்றுக் கொடுத்துள்ளேன்

* வழக்குகளில் இரண்டு வாய்ப்புகள் தான் . வழக்கில் வெற்றி பெறுவது , வெற்றிகாக சரியான முறையில் போராடினோம் என்பது .

* ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பதவி உயர்வு என்று வெவ்வேறு வழக்குகளில் இதுவரை 10 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர் .

* சீராய்வு Review பயன் தராது என்று பதிவு செய்துள்ளேன் . வழக்கு உச்ச நீதிமன்றம் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் Review பற்றி விரிவாக பதிவு தவிர்க்கிறேன் 

* ஒரு குறிப்பிட்ட சங்கம் உச்ச நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது சரி . வழக்கு சார்ந்த எனக்கு உள்ள நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் கூறுகின்றேன் . 

* உயர் நீதிமன்ற தீர்ப்பில் மாநில  அரசின் உரிமை தொடர்பாக விரிவாக ஆராய பட்டுள்ளது .எனவே இந்த வழக்கில் அரசியல் சாசன வழக்கில் அனுபவமுள்ள உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வாதம் அவசியமாகிறது 

.மற்ற சங்கங்கள் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரை அமர்த்துவது அவசியமாகும் .

* முதுகலை ஆசிரியர் , உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் PG பணியாற்றி பதவி உயர்வு பெற்றோரை பணி இறக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது . தற்போது இவர்கள் மூத்த வழக்கறிஞர் மூலம் உயர் நீதிமன்ற  Review செய்துள்ளனர் . வழக்கு தள்ளுபடி செய்ய அதிக வாய்ப்பு உண்டு ஆனால் உச்ச நீதிமன்றம் இவர்களின் கோரிக்கையை ஏற்க வாய்ப்பு உண்டு .

* வழக்கை சரியான திசையில் நடத்தவில்லையெனில் தகுதித் தேர்வின்றி பதவி உயர்வு பெற்ற றோருக்கும் மேற்கண்ட பத்தியில் சுட்டிக்காட்டிய பிரச்சனை எழ வாய்ப்பு உண்டு .ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த வாரம் ஒரு தீர்ப்பில் பாதுகாப்பு செய்துள்ளது .உயர் நீதிமன்ற , உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முன்பே Uதவி உயர்வில் சென்றோரை பணி இறக்கம் செய்ய கூடாது .

* ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தீர்ப்பு வந்தவுடன் எனது பதிவை பார்த்து , யூ டியூப் தளம் ஒன்று என்னை பேட்டி எடுக்க கேட்டனர் . விடுமுறை நாளில் தொடர்பு கொள்கின்றேன் என்று கூறி தொடர்பு கொள்ளவில்லை .இதை குறிப்பிட காரணம் பரபரப்பு காக பதிவு செய்வது எனது நோக்கம் அல்ல .

* வழக்கில் உள்ளதை உள்ளபடி பேசினால் தான் வெற்றி பெற முடியும் . பொய்யான நம்பிக்கை வெற்றி தராது .

* இந்த வழக்கோடு தொடர்புடைய 42 ஆசிரியர்களுக்கு வழக்கில் வெற்றி பெற எழுதி கொடுத்துள்ளேன் .மூத்த வழக்கறிஞரிடம் கொடுத்துள்ளனர் .

* அரசாணைகளை நீதிமன்ற தீர்ப்பின் வழியாக எப்படி புரிந்து கொள்வது , துறையால் வழங்க முடியாதவற்றை , வழங்க மறுப்பவற்றை நீதிமன்றம் மூலம் பெற்று தருவது என்ற காலமும் இயற்கையும் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணிப்பேன் .

ஆ. மிகாவேல்

ஆசிரியர் ,

மணப்பாறை

9047191706

DA TN Govt



ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா - பணி

 ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) 


அப்ரெண்டிஸ் விண்ணப்ப சாளரம் 

இன்று செப்டம்பர் 21, 2023 அன்று இரவு 11:59 மணிக்கு முடிவடைகிறது. இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் 20-28 வயதுடைய விண்ணப்பதாரர்களுக்கு 6160 பதவிகளை வழங்குகிறது. வெற்றிபெறும் விண்ணப்பதாரர்கள் மாதந்தோறும் ரூ. 15,000 உதவித்தொகையுடன் ஒரு வருட பயிற்சித் திட்டத்தில் ஈடுபடுவார்கள். தேர்வு செயல்முறை ஆன்லைன் எழுத்துத் தேர்வையும் உள்ளடக்கியது, மேலும் தேர்வு அக்டோபர்/நவம்பரில் திட்டமிடப்பட்டுள்ளது. விலக்கு பெற்ற SC/ST/PwBD வேட்பாளர்களைத் தவிர, விண்ணப்பதாரர்கள் ரூ.300 விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

எஸ்பிஐ அப்ரண்டிஸ் 2023: 6160 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 

www.sbi.co.in

நேரடி இணைப்பு

எஸ்பிஐ அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு 2023: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) இன்று, செப்டம்பர் 21, 2023, இரவு 11:59 மணிக்கு அப்ரண்டிஸ் பதவிக்கான பதிவு சாளரத்தை மூடும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் sbi.co.in இல் உள்ள அதிகாரப்பூர்வ SBI ஆட்சேர்ப்பு போர்டல் மூலம் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.


Monday, September 18, 2023

யானை முகம் வந்த கதை

 


யானை முகத்தோர் ஐந்து கரத்தோர் விக்னேஸ்வரர் மூஷிக வானர் என்று பல பெயர்களால் வழிப்படும் விநாயகர்  ஹிந்துக்களின் முழு
 முதல் கடவுள்.

வினை தீர்க்கும் விநாயகர் எப்படி பிறந்தார் அவருக்கு மனிதர்களில் முகம் இல்லாமல் ஏன் யானை முகம் உள்ளது என்று புராணக்கதை மூலம் அறியலாம்.

விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. தேவர்களுக்கு இடையூறு செய்த அரக்கர்களை ஒடுக்க பரமசிவன் பார்வதியால் விநாயகர் யானை முகத்தோடு மனித உடலோடு படைக்கப்பட்டார் அரக்கன் கஜமுக அசுரனை அழித்து தேவர்களை மீட்டார்.

கைலாயத்தில் ஒரு நாள் பார்வதி தேவி நீராடுவதற்காக செல்லும் பொழுது நிகழ்ந்த உரையாடலை காண்போம்.

பார்வதி தேவி நீராடும் சமயம் சிவபெருமான் பார்வதி தேவியை காண வருகிறார், சிவனைக் கண்ட பார்வதி சினம் கொண்டார்.

மறுநாள் பார்வதி தேவி தன் மீது உள்ள சந்தனத்தால் அழகிய உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்தார். மீண்டும் சிவபெருமான் வந்தார் அங்கு நிற்கும் பாலகன் யாராக இருப்பான் என்று எண்ணியவாறு உள்ளே செல்ல முயன்றார்.

கோபம் அடைந்த சிவன் அங்குள்ள காவலர்களை அழைத்து பாலகனை அங்கிருந்து அகற்றுங்கள் என்று கூறி சென்று விட்டார். தோல்வியுற்ற வீரர்கள் சிவனிடம் முறையிட்டனர் இதை அறிந்த சிவபெருமான் விநாயகரை அங்கிருந்த சூலாயத்தால் அவர் தலையை கொய்தார்.

விநாயகரின் சத்தம் கேட்டு அங்கு வந்த பார்வதி பிள்ளையாருக்கு தலை இல்லாததை பார்த்து கோபமடைந்தார் தான் செய்த பிள்ளையாரை சிவனே சிதைத்ததை அறிந்து அவர் காளியாக மாறி உருவம் எடுத்து வெளியேறி அவரது கண்களில் பட்ட சகலத்தையும் அழிக்க தொடங்கினார்.

அங்கிருந்த தேவர்கள் அனைவரும் சிவனிடம் முறையிட்டனர், அதாவது பார்வதி தேவி காளியாக உருவம் கொண்டு ஆக்ரோஷத்துடன் இருக்கிறார் என்றனர், சிவன் சமாதானம் செய்ய முடிவெடுத்தார்.

சிவபெருமான் பிற தேவர்களை அழைத்து வடதிசையில் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவ ராசியில் தலையை வெட்டி எடுத்து வர ஆணையிட்டார், கூறியவாறு வட திசையில் முதலில் தென்பட்ட யானையை கொண்டு வந்தனர்.

யானையின் தலையை வெட்டி எடுத்து சிவனிடம் கொடுத்தனர் யானையின் தலையை வெட்டி எடுத்து தலையை வெட்டப்பட்டு கிடந்த பிள்ளையாரின் முகத்தில் வைத்து உயிர் கொடுத்தார் சிவபெருமான்.

பார்வதிதேவி சமாதானம் கொண்டு விநாயகரை கட்டி அணைத்தார், அதன் பிறகு சிவபெருமான் விநாயகருக்கு கணேசன் என்று பெயர் சூட்டினார், மற்றும் சிவபெருமான் கணேசனை தேவனுக்கு தலைவராக நியமித்தார் என்று நாரத புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜமுக சூரனை அழிக்க விநாயகர் படைத்துள்ளனர் அதோடு முழு முதல் கடவுளாக விளங்குவார் எங்கு பூஜை செய்தாலும் முதல் பூஜை கணபதிக்கு தான் என்று வரம் கொடுத்தார்.

Monday, September 11, 2023

இல்லம் தேடி கல்வி




அடுப்படி பட்டதாரி

மாலை நேரம், முல்லை வயல் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பினாள். வயல் காட்டில் இருந்த விறகுகளை சேகரித்து அதை தன் தலையில் சுமந்து கொண்டு வந்தாள். 

வரும் வழியில் ஒரு வீட்டில் குழந்தைகள் ஆடிப்பாடி விளையாடிக் கொண்டிருந்தார். அதை கண்ட முல்லை, என்ன இங்கு கடந்த வாரம் வரை இந்த குழந்தைகள் கூட்டம் இங்கு இல்லை,ஆனால் சில நாட்களாக ஆங்காங்கே குழந்தைகள் கூடி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், என்று யோசனை செய்தபடிநடந்து சென்றாள். 

அங்கு அவள் வீட்டுக்கு அருகில் ஒரு மரத்தடியில் குழந்தைகள் கூட்டமாய் இருந்ததை கண்டாள். அதில் தனது மகள் பூவிழியும்,இருந்ததை பார்த்த அவள் பூவிழி இங்கு என்ன செய்கிறாய், எனக் கேட்டவாறு பூவிழியை நோக்கி நகர்ந்தாள்.

அங்கு ஒரு பெண், தனது கையில் வண்ண, வண்ண புகைப்படங்கள் வைத்துக் கொண்டு மாணவர்களுக்கு கதை ஒன்றை சொல்லிக் கொடுத்தாள். அங்கு சென்ற முல்லை அந்த பெண்ணிடம், நீங்கள் யார் இங்கு என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டாள். 

அதற்கு அந்த பெண் இது இல்லம் தேடிக் கல்வி திட்டம். இந்த திட்டம் த‌மிழக‌ முதல்வர் அவர்களால் உருவாக்கப்பட்டு,பல உயர் அதிகாரிகள் மற்றும் என்னை போன்ற தன்னார்வலர்களாலும்,செயல் பட்டு வருகிறது. 

இங்கு மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை, ஆடல், பாடல், கதைகள் மூலமாக நாங்கள் சரி செய்து வருகிறோம்.அதுவே எனது பணி. இன்று முதல் இங்கேயும் ஒரு மையம் செயல் படத் தொடங்கியுள்ளது. அதனால் தான் உங்கள் மகளும் இங்கே வந்துள்ளாள்,என அந்த பெண் கூறினாள். 

பின்னர் அந்த பெண்ணின் அனுமதியுடன் சற்று நேரம் அங்கேயே அமர்ந்து குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு, தானும் ஒரு குழந்தையை போல் மெய் மறந்து போனாள்.திடீரென அருகில் உள்ள கோவிலில் மாலை மணி 6 என ஓசை ஒலித்தது. 

துடித்து  எழுந்த முல்லை, நேரம் போனதே தெரியவில்லை, மணி ஆகிவிட்டது. நான் முன்னர் செல்கிறேன், பூவிழி  நீ வகுப்பை முடித்து விட்டு வா என்று கூறியவாறு  விறகை சுமந்து கொண்டு தன் வீட்டில் கொண்டு போய் இறக்கி வைத்தாள். அங்கே இறக்கி வைக்கப்பட்டது விறகு சுமை மட்டுமல்ல, தன்னைப் போல்  தனது குழந்தையின் கல்வியும் எண்ணாகுமோ என்று நினைத்த மனச் சுமையும் தான்.....

கை, கால்களை கழுவிக் கொண்டு, இரவு உணவாக என்ன சமைப்பது என்று நினைத்தபடி சமையலறையில்  நுழைந்தாள், அங்கு அவளும் ஒரு பட்டதாரி தான். 
அவள் வீட்டு அடுப்படியில்......