Saturday, August 29, 2015

pallikudam

அரசு பள்ளி மாணவர்களுக்குஇலவச அறிவியல் சுற்றுலா

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் பாட விழிப்புணர்வை செய்முறை பயிற்சி வழியே ஏற்படுத்த, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' திட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச அறிவியல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: புதிய அணுகுமுறை கல்வித் திட்டத்தின் கீழ் மாணவியர், சிறுபான்மை, பட்டியலின மாணவ, மாணவியர் மற்றும் நகர்ப்புற நலிவடைந்த குழந்தைகளின் அறிவியல் அறிவை வளப்படுத்த, இலவசமாக அறிவியல்சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும். அரசுப் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, இந்த சுற்றுலாவில் அழைத்துச் செல்லலாம். ஆராய்ச்சி மையங்கள், அறிவியல் மையங்கள், விவசாய ஆராய்ச்சி நிலையங்கள், அரசு தோட்டப் பண்ணைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஒரு நாள் சுற்றுலாவுக்கு, காலைச் சிற்றுண்டி, மதிய உணவு, பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும், 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' நிதி வழங்கும். அரசு பேருந்துகளை மட்டுமே வாடகைக்கு அமர்த்திச் செல்ல வேண்டும். தனியார் பேருந்துகளில் செல்லக் கூடாது. மாணவர்களுடன் உடல்நலன் மிக்க, சுற்றுலா தகவல்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கக் கூடிய ஆசிரியர்கள், ஐந்து மாணவருக்கு ஒருவர் என, பாதுகாப்புக்கு செல்ல வேண்டும். அனைத்து பாதுகாப்பு விதிகளையும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

Monday, August 17, 2015

pallikudam

கணிதம், அறிவியல் பாடங்களுக்கு 1,400 பள்ளிகளில் ஆசிரியர் இல்லை

        தமிழகம் முழுவதும், 1,500 நடுநிலைப் பள்ளிகளில்கணிதம்,ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாட ஆசிரியர்களுக்குபற்றாக்குறைஏற்பட்டு உள்ளது. 'இந்த காலியிடங்களுக்குபட்டதாரிகள் அல்லதுஉபரி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்எனஆசிரியர்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

           தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளிகள் உள்ளனஇவற்றில், 7,500 பள்ளிகள் அரசு கட்டுப்பாட்டில்உள்ளவைஅதிலும், 6,100 பள்ளிகள்மத்திய அரசின்அனைவருக்கும்கல்வி இயக்ககமான - எஸ்.எஸ்.., திட்டத்தில்தொடக்க பள்ளியாகஇருந்துநடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டவை.

50 ஆண்டுக்கு முன்...:
இந்த பள்ளிகளுக்குமத்திய அரசு நிதியுதவியால், 6, 7 மற்றும் 8வகுப்புகளுக்குகணிதம்ஆங்கிலம் மற்றும் அறிவியல்பாடங்களுக்குதலா ஒரு பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டுஉள்ளார்மீதமுள்ள, 1,400 பள்ளிகள், 25 முதல், 50 ஆண்டுகளுக்குமுன்நேரடியாக நடுநிலைப் பள்ளிகளாகத் துவங்கப்பட்டதால்,மத்திய அரசு உதவித் திட்டத்தில் இடம் பெறவில்லை.

பற்றாக்குறை:
நடுநிலைப் பள்ளிகளுக்கு, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்;வகுப்புக்கு ஒரு ஆசிரியர்கணிதம்,
ஆங்கிலம் மற்றும் அறிவியலுக்குதலா ஒரு பட்டதாரி ஆசிரியர்கண்டிப்பாக இருக்க வேண்டும்ஆனால்எஸ்.எஸ்.., உதவிஇல்லாத பள்ளிகளில்இந்த விதிகள்கடைபிடிக்கப்படாமல்,ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறதுஒன்று முதல் 8ம்வகுப்பு வரையிலான வகுப்புகளுக்குஆசிரியர் பயிற்சி டிப்ளமோமுடித்தஇரு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

சில பள்ளிகளில்பட்டதாரி ஆசிரியர்கள் இருந்தாலும்ஒரே பாடத்தைமுடித்தவர்களாக உள்ளதால்ஆசிரியர்களை நியமித்தும்பலனில்லைஅதனால்கணிதம் முடித்தவர்கள்தங்களுக்கு தெரிந்தஆங்கிலத்தையும்அறிவியலையும் கற்றுக் கொடுக்கின்றனர்சிலபள்ளிகளில்மூன்றுமேதமிழ் ஆசிரியர்களாகவும்சில இடங்களில்,மூன்று பேருமே வரலாறு

ஆசிரியர்களாகவும் உள்ளதால், 'குண்டக்கமண்டக்கஎன்றநிலையில்பாடம் எடுக்கப்படுகிறது.

கலந்தாய்வு:
இப்பள்ளி மாணவர்கள், 9ம் வகுப்பு படிக்க வேறு பள்ளிக்கு மாறும்போதுகணிதம்ஆங்கிலம் மற்றும் அறிவியல் போன்ற முக்கியப்பாடங்களின்
அரிச்சுவடி கூடத் தெரியாமல் தவிக்கின்றனர்இதுகுறித்து,அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பணி நிரவல் அல்லது கலந்தாய்வுமூலம்தீர்வு காண முயற்சிக்கிறோம்என்றனர்.

இதுதொடர்பாகதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற கழகதலைவர் சிங்காரவேல் கூறும்போது, ''எஸ்.எஸ்.., திட்டத்தில் வராதபள்ளிகளிலும்ஒவ்வொரு பாடங்களுக்கும் தனித்தனி ஆசிரியர்;வகுப்புக்கு தலா ஒரு ஆசிரியர் எனநியமிக்க வேண்டும்அப்போதுதான்உபரி ஆசிரியர் பிரச்னை தீருவதோடுமாணவர்களும்பாதிக்கப்படாத சூழல் ஏற்படும்,'' என்றார்.

நமது நிருபர் -thanks padasalai

Monday, August 10, 2015

Pallikudam

ஏ.டி.எம்., கார்டில் ஆன்--லைன் மோசடி அரசு ஊழியர்களை குறி வைக்கும் கும்பல்
ஏ.டி.எம்.,கார்டு காலாவதி ஆகிவிட்டது,கார்டின் பின்புறம் உள்ள 'சி.வி.வி.' எண்ணை கூறுங்கள் என கேட்டு விட்டு, அதன் பிறகு போனில் வரும் 'ஓ.டி.பி.' எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டை கேட்டு ஆன்-லைனில் பொருட்களை வாங்கும் கும்பல் அரசு ஊழியர்களை குறிவைத்துள்ளது.வங்கியில் கணக்கு துவங்கி ஏ.டி.எம்., கார்டு பெறும்போது, கார்டை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் அடங்கிய விபர குறிப்பும் சேர்ந்தே வரும்.
ஏ.டி.எம்., கார்டை மட்டும் எடுத்து பாக்கெட்டில் வைத்து அதன் பின்புறம் கையெழுத்து போட வேண்டும் என்பது கூட தெரியாமல் இன்னும் எண்ணற்றோர் உள்ளனர். வீட்டில் இருந்தபடியே பிறருக்கு பணத்தை அனுப்புவது, மின்கட்டணம் செலுத்துவது, மிகப்பெரிய கம்பெனிகளின் பொருட்களை வாங்குவது என அனைத்தும், நம் ஏ.டி.எம்., கார்டு மூலம் ஆன்-லைனில் நடக்கிறது.
ஆன்-லைனில் பொருட்களை வாங்கும்போது நம் கார்டின் எண்ணை பதிவேற்றம் செய்த பிறகு பின்புறம் உள்ள சி.வி.வி., (கார்டு வெரிபிகேஷன் வேல்யூ) எண்ணை கேட்கும். அதை கொடுத்தவுடன் நம்முடைய மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பாஸ்வேர்டு குறுஞ்செய்தியாக வரும். அந்த பாஸ்வேர்டு மூலம் நமக்கு தேவையான பொருளை தெரிவு செய்து தொகையை ஆன்-லைனிலேயே செலுத்தி வருகிறோம்.
சமீப காலமாக அடையாளம் தெரியாத மொபைல் எண் மூலம் பேசும் மர்ம நபர்கள், குறிப்பிட்ட வங்கியின் பெயரையும், கார்டுதாரரின் பெயரையும் கூறி, 'ஏ.டி.எம்., கார்டு காலாவதி ஆகிவிட்டது,' என கூறி முன்புறம் உள்ள கார்டின் நம்பரை கேட்கின்றனர். ஒரு சில ஏ.டி.எம்.களில் நம் கார்டுக்கு பணம் வந்திருக்காது. இதனால், கார்டின் நம்பரை கொடுக்கிறோம். அதன் பிறகு பின்புறம் உள்ள சி.வி.வி., எண்ணை கேட்டு, தொடர்ந்து வரும் பாஸ்வேர்டையும் கேட்டு பொருட்களை 'ஆன்-லைனில்' வாங்கி விடுகின்றனர்.
ஒரு சில வேளைகளில் பாஸ்வேர்டை பெற்று விட்டு “மொபைலை ஆப் செய்து ஆன் செய்யுங்கள்” என கூறி அந்த கால இடைவெளியில் ஆன்-லைனில் பொருட்களை வாங்கி மோசடி செய்கின்றனர். காரைக்குடி அரசு  அலுவலர் ஒருவரின் வங்கி கணக்கில், கடந்த மாதம் இதே போன்று பேசிய நபர்கள், ரூ.49 ஆயிரத்தை மோசடி செய்துள்ளனர்.
வங்கி மேலாளர் ஒருவர் கூறும்போது: வங்கி முன்பு ஏ.டி.எம்., கார்டு எண்ணை வழங்காதீர்கள் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைத்துள்ளோம். அதை யாரும் பார்ப்பது இல்லை. ஏ.டி.எம்.,கார்டு அனுப்பும் போதும் அதனுடன் விபர குறிப்பும் அனுப்புகிறோம் அதையும் வாசித்து பார்ப்பது இல்லை.படித்தவர்கள் இதில் ஏமாறுவது தான் ஆச்சரியமளிக்கிறது.
ஒடிசா,நொய்டா,குர்கான் உட்பட வட மாநிலத்தில் உள்ள பிரவுசிங் சென்டர் மூலம், இங்குள்ளவர்களை தொடர்பு கொண்டு ஏமாற்றுகின்றனர். ஆன்-லைனில் பொருட்களை வாங்கும் நிறுவனங்களை நாம் இணையத்தில் தேடி பார்த்து கடிதம் அனுப்பினாலும் அதில் பதில் இருப்பதில்லை. வாடிக்கையாளர்கள் தான் உஷாராக இருக்க வேண்டும், என்றார்.

Wednesday, August 5, 2015

Pallikudam

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 19 கடைசி நாள்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு ஆகஸ்ட் 19}ஆம் தேதி வரை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களை நியமிப்பதற்கு சி.டி.இ.டி. தேர்வு நடத்தப்படுகிறது.மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப, உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணிக்கு, சி.டி.இ.டி. தேர்வு அடிப்படையில் நியமிக்கப்படுகிறது.
இந்தத் தேர்வில் தாள்-1, தாள்-2 என இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும். பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மட்டும் ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் தாள்-1 இல் மட்டும் பங்கேற்றால் போதுமானது.
இதுபோல் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை மட்டும் ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் தாள்-2 இல் பங்கேற்றால் போதுமானது.
இரண்டு நிலைகளிலும், அதாவது 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புபவர்கள் இரண்டு தாள்களும் எழுத வேண்டும். இந்தத் தேர்வானது 20-9-2015 அன்று நடத்தப்பட உள்ளது. காலையில் 9.30 மணி முதல் 12 மணி வரையிலும் தாள்-2 தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரை தாள்-1 தேர்வும் நடத்தப்படும்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ctet.nic.in  என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க 19-8-2015 கடைசியாகும். தேர்வறை அனுமதிச் சீட்டை 4-9-2015 அன்று இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.கல்வித் தகுதி: பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
8-ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் பட்டப் படிப்புடன், 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும்.
அல்லது பட்டப் படிப்புடன், பி.எட். படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ஒரு தாள் மட்டும் எழுதும் ஓபிசி பிரிவினருக்கு ரூ. 600, முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டையும் எழுதுபவர்களுக்கு ரூ. 1000. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ஒரு தாள் மட்டும் எழுத ரூ. 300 கட்டணம். இரண்டு தாள்களையும் எழுத ரூ. 500 செலுத்தினால் போதுமானது.
மேலும் விவரங்களுக்கு சி.டி.இ.டி. இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.