Thursday, October 24, 2019

Pallikudam


பள்ளிக்கல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பயோமெட்ரிக் மற்றும் வருகை பதிவிற்கான மொபைல் செயலியின் பயன்பாட்டால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வருகை பதிவில் தொய்வு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, நாள்தோறும் பிற்பகல் ஒரு மணியளவில் வருகைப்பதிவு விவரத்தை அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு  உத்தரவிட்டுள்ளது. தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர், மாணவர்கள் வருகை விவரத்தை, E.M.I.S.,எனப்படும் கல்வி தகவல் மேலாண்மை பக்கத்தில்  பதிவேற்றம் செய்ய, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது .

Monday, October 14, 2019

Pallikudam

பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் பற்றி பார்ப்போம்.
(அ) ஆண்டுதோறும் வழக்கம்போல் 3% ஊதிய உயர்வு வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. (அடிப்படை விதி 24) (FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)
(ஆ) ஒரு ஊழியர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலும் கூட ஊதிய உயர்வு வழங்கலாம். (அடிப்படை விதி 24-ன் துணை விதி (8) அரசு கடித.எண் 41533/பணி என்37-9, பணியாளர், நாள் 8.4.1988)
(இ) ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் முதல் தேதியில் ஊதிய உயர்வு வழங்கப்படும். FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)
(ஈ) புதியதாக பணி ஏற்கின்ற அல்லது பதவி உயர்வில் பணி ஏற்கின்ற ஒருவருக்கும் முதல் ஊதிய உயர்வு, இணையான காலாண்டின் துவக்கத்தில் வழங்கப்படும். இவர்கள் விஷயத்தில் ஓராண்டு பணி முடிக்க வேண்டிய அவசியமில்லை. (G.O.Ms.No.41 Finance Dept, Dated 11.1.1977 மற்றும் Govt Letter No.171550அவி173 Finance Dept, Dated 1.10.an1991)
(உ) ஊதிய உயர்வு நிலுவை இருப்பின், அதற்கான சான்று கையொப்பமிட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் வழங்கப்பட வேண்டும். தவறின், அடுத்த உயர் அலுவலரின் முன் தணிக்கை பெற வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலும் நிலுவையாக உள்ள இனங்களுக்குத் துறைத் தலைவரின் அனுமதி தேவை. (G.O Ms No.1285, Finance department Dated 11.10.1973 மற்றும் G.O Ms No.349, Finance department, Dated 21.5.1981)
(ஊ) தேர்வுகள் தேர்ச்சி பெறுவதற்காக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டியிருப்பின், தேர்வுகள் நடந்த கடைசி நாளுக்கு (பிரிவுகளாக நடந்திருப்பின், பிரிவுத் தேர்வு நடந்த கடைசி நாளுக்கு) மறுநாள் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் (அடிப்படை விதி 26(எ)ன் துணை விதி (2)
தற்காலிக மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு ஊதிய உயர்வு
(அ) தற்காலிக ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆனால், அவர் வசிக்கும் பதவியில் தகுதிகாண் பருவக்காலத்தில் தேர்வுகள் ஏதேனும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்படும். இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும். (அரசாணை எண். 1087, நிர்வாகத்துறை, நாள் 10.11.1982 அரசாணை எண். 231, P&AR,சி.16383 மற்றும் அரசு க.எண் 35068DOFIP&AR,நாள் 1.1.1994) தற்காலிகமாக பதவி உயர்வு பெற்றவருக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter. No. 15285/FR.1746, Finance dated. 16.8.1975)
(ஆ) தகுதிகாண் பருவத்தினருக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். தகுதிகாண் பருவக் காலத்தில் தேர்வுகள் வரையறை செய்யப்பட்ட பதவிகளுக்கு இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் வழங்கப்படும். தகுதிகாண் பருவம் முடிந்து ஆணை வழங்கிய பின்னர் தான் இரண்டாவது ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் என்பது இனி இல்லை (G.O Ms No. 618, P&A.R., Dated 6.7.1987)
பணி அமர்த்தப்பட்டால், முந்தையப் பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு சேராது. இருப்பினும் அதே பதவியில் அதே துறையிலோ வேறு துறையிலோ பணி அமர்த்தப்பட்டால் அதே ஊதியம் வழங்குவதுடன் முந்தைய பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். (Govt. Letter. No.76362874, P&AR Dated 27.7.1988)

Thursday, September 26, 2019

Pallikudam

ஒரே தலைமை ஆசிரியர் கண்காணிப்பதால் கல்வித் தரம் உயரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''ஒரே வளாகமாக இருக்கும் பள்ளியில், ஒற்றைத் தலைமை ஆசிரியர் கண்காணிப்பதால் கல்வித்தரம் உயரும். அங்கே நடைபெறும் கல்விப் பணிகளைக் கண்காணித்து, அறிவுரை வழங்க, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வரின் அனுமதியோடு, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்தை ஒருங்கிணைக்கவும் ஆய்வு செய்து ஆசிரியர்கள் வராதபோதும் கல்வித் தரத்தை ஆய்வு செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதனை மக்களும் கல்வியாளர்களும் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர்.

நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பது மட்டுமே பள்ளிக் கல்வித்துறையின் நடவடிக்கை. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை மேற்படிப்புக்கு அனுப்புவது, மருத்துவத் துறையில் உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் ஆளுகைக்கு உட்பட்டது. அவர்தான் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் குறித்துப் பதிலளிக்க முடியும்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில், நீட் நுழைவுத் தேர்வு பயிற்சிக்காக 412 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களைக் கொண்டு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தானில் உள்ள நிறுவனம் மூலம் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் கல்விச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பு, உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது. இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tuesday, September 24, 2019

Pallikudam

அக்., 3க்கு பின், காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடத்த, பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

அக்., 3க்கு பின், காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடத்த, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், காலாண்டு தேர்வுகள் முடிந்து, இன்று முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும், 3ம் தேதி, மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதுவரை, பள்ளிகளில் வகுப்புகள் இயங்காது; ஆனால், நிர்வாகப் பணிகள் மட்டும் நடக்கும். இந்நிலையில், காந்தியடிகளின், 150வது பிறந்த நாளை, மத்திய அரசு விமரிசையாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு, அக்., 2 வரை, காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தை நடத்த, கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது, பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், மீண்டும் திறந்ததும், அக்., 3 முதல், காந்தி ஜெயந்தி விழாவை நடத்த, பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. விடுமுறைகளில், காந்தியை ஓவியமாக வரையவும், காந்தி குறித்த பொன்மொழிகளை எழுதவும், காந்தியின் போராட்ட வாழ்க்கை குறித்து கட்டுரை எழுதவும், மாணவர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Pallikudam

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான்.  இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கொண்டது.

Pallikudam


அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு நவம்பர் மாதத்தில் பயோ-மெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தப்படும்!!



Saturday, September 21, 2019

Pallikudam

வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் கிடைக்கும் பலன்கள்!!
நல்லெண்ணெய் குளியல் எடுத்து வாருங்கள். இப்படி எடுப்பதால், நோய்களின் தாக்கம் குறைவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். நல்லெண்ணெய் குளியலின் மூலம் மயிர்கல்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும்.
நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும்.
வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் எடுத்து வந்தால், உடலில் உள்ள நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.எண்ணெய் குளியல் என்று சொல்லும்போது, தலைக்கு மட்டுமன்றி உடலுக்கு நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு மென்மையாக இருக்கும்.
பொடுகு தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால் பொடுகுத் தொல்லை நீங்கும்.
கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், கண்கள் சிவப்பாகி அதன் ஆரோக்கியம் கெடும். எனவே வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்வதன் மூலம், பார்வை மற்றும் கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.
முடி உதிர்தல் அதிகம் இருந்தால் நல்லெண்ணெய் குளியலை வாரம் ஒருமுறை மேற்கொண்டு வாருங்கள். இதனால் முடி நன்கு ஊட்டம் பெற்று வலிமை பெறும்.
தூக்கமின்மையால் அவதிபடுபவர்கள் வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட்டு நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்

Saturday, September 14, 2019

Aadhar

ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்ட் எப்படி பெறுவது.
நாம் நிறைய நேரங்களில் நமக்கு முக்கியமாக உதவும் டாக்யூமென்ட்டிகளை நாம் சில நேரங்களில் வைத்த இடம் தெரியாமல் தேடுவது வழக்கம், மேலும் ஒரு சில டாக்யூமென்ட்கள் தொலைந்து போய் இருக்கலாம் உதாரணத்துக்கு ஆதார் கார்ட் தொலைந்து போய் விட்டது மேலும் அதில் உங்களின் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் நீங்கள் ஏதோ ஒரு காரணத்தால் மாற்றி விட்டிர்கள் இப்பொழுது நீங்கள் ஆதரிக்கார்டில் ரெஜிஸ்டர் செய்து வைத்த ஆதார் கார்ட் நம்பர் உங்களிடம் இல்லை , இப்பொழுது நீங்கள் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்ட் எப்படி பெறுவது வாருங்கள் பார்க்கலாம்
இப்பொழுது உங்களிடம் உங்களின் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லாமலே இப்பொழுது உங்களூக்கு எளிதாக ஆதார் கார்ட் கிடைக்கப்போகிறது, எப்படி என்பதை நீங்கள் எளிதாக தெரிந்து கொல்லம் சரி வாருங்கள் பார்ப்போம்
1 இந்த வெப்சைட்டில் சென்ற பிறகு உங்களின் ஆதார் ரிபிரிண்ட் நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்,இங்கு உங்களுக்கு இந்த வெப்சைட்டில் சென்று Order Aadhaar Reprint’ Service யில் க்ளிக் செய்ய வேண்டும்
2 இதன் பிறகு இங்கு உங்களுக்கு 12 இலக்கு ஆதார் நம்பர் (UID அல்லது 16 இலக்கு உள்ள வரஜுவல் ஐடென்டிபிகேஷன் நம்பர் போடா வேண்டும்
3 இதற்குப் பிறகு நீங்கள் இங்கு காணக்கூடிய பாதுகாப்பு குறியீட்டை தொடர்பு கொள்ளும்படி கேட்கப்படும் , நீங்கள் இங்கே பாக்சில் உள்ளிட வேண்டும்
4 இதன்பிறகு அங்கு கொடுக்கப்பட்டிருக்க பாக்சில் டிக் செய்ய வேண்டும் உங்களிடம் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லை என்றால்.
5 இதன் பிறகு நீங்கள் உங்களின் ரெஜிஸ்டர் செய்யப்படாத மொபைல் நம்பரை உள்ளிட்ட வேண்டும்
6 இப்பொழுது நீங்கள் உள்ளிட்ட அந்த மொபைல் நம்பரில் ஒரு OTP வரும்
7 இப்பொழுது நீங்கள் சப்மிட் பட்டனை அழுத்தியதும் உங்களின் OTP வெரிஃபிகேஷன் ஆரம்பம் ஆகிவிடும்
8 இதன் பிறகு இப்பொழுது உங்களிடம் பேமண்ட்க்கு கேக்கும் செயல்முறை முடிக்க நீங்கள் 50 ரூபாய்களை செலுத்த வேண்டும் என்று உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம் , அதற்குப் பிறகு உங்கள் புதிய நகல் ஒன்றைப் பெறுவீர்கள்.
9 பேமண்ட் பக்கத்திற்கு சென்ற பிறகு இப்பொழுது உங்களின் க்ரெடிட் கார்ட்/ டெபிட் கார்ட்/ நெட் பேங்கிங் மூலம் அல்லது UPI பேமண்ட் செய்ய வேண்டும்
10 பேமண்ட் வெற்றிகரமாக முடித்த பிறகு உங்களுக்கு ஒரு டிஜிட்டல் கையொப்பம் ரசீதைப் பெறுவீர்கள், அதை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், இது உங்களுக்கு SMS வழியாக தகவல் வழங்கப்படும்.
11 . இப்போது நீங்கள் ஆதார் ரீப்ரின்ட் வேலை ஆரம்பமாகிவிடும் இப்பொழுது உங்களின் வேலை சரியாக நடக்கிறதா என்று நீங்கள் ட்ராக் செய்து பார்த்து கொள்ளலாம் இதை தவிர உங்களுக்கு டெலிவரி ஸ்டேட்டஸ் கிடைத்துவிடும் மேலும் 5 நாட்களில் உங்கள் ஆதார் கார்ட் உங்களுக்கு கிடைத்துவிடும்.

Tuesday, September 10, 2019

சளி இருமல் விரட்டிட வீட்டு வைத்தியம்

சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி?

உப்புநீரில் வாயைக் கொப்பளித்தல்
தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்;  தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும்.

இஞ்சி
இஞ்சி, வறண்ட இருமலை எளிதில் நீக்கக்கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும்.  இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

பூண்டு
நான்கு அல்லது ஐந்து  பூண்டுப் பற்களை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும். சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இயற்கைவழியில் நீக்கும்.

ஆளி விதை
சிறிது ஆளி விதையை நீரில் கொதிக்கவைத்தால் பசை மாதிரி ஆகிவிடும். இதனுடன் இயற்கை ஆன்டிபயாடிக்குகளான (Antibiotics) எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்துப் பருகிவர தொண்டை வீக்கம் குறையும்.

கருமிளகு டீ
கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும்.  ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன்  தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும்.  15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.

பால் மற்றும் மஞ்சள்
சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன. பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது மஞ்சள் பால்.

எலுமிச்சை சிரப்
ஒரு வாணலியில் 100 மி.லி தேனை ஊற்றி, அதன் அடர்த்தி குறைகிற வரை சூடாக்கவும்.  இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு, லவங்கப்பட்டை சேர்த்துப் பயன்படுத்திவர சளி குறையும்.

வெங்காய சிரப்
ஒரு வெங்காயத்தை உரித்து நன்றாக நசுக்கிக்கொள்ளவும்.  அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். இதனுடன்  ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளவும். சூடு ஆறிய பிறகு இதனைக் குடிக்கலாம். வெங்காயம் சளி, இருமலுக்கு மிக நல்ல மருந்து. வெங்காயத்தில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் நிறமி, சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டது.

எளிய வீட்டு மருந்து
சளி, இருமலைப் போக்கும்  இனிப்பான மிட்டாய்களை கடைகளில் வாங்கிச் சாப்பிட்டிருப்பீர்கள். இவற்றை நாம் வீட்டிலேயே தயாரித்துவிட முடியும்.
ஒரு சிறிய துண்டு இஞ்சியைச் சாறாகப் பிழிந்துகொள்ளவும்.  சிறிதளவு கருமிளகை வறுத்து, பொடியாக்கிக்கொள்ளவும். இஞ்சிச் சாறு, கருமிளகுப்பொடி இவற்றுடன் கொஞ்சம் மஞ்சள், தேன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் மாதிரி  தயாரித்துக்கொள்ளவும். இதை பந்து மாதிரி உருட்டி வைத்துக்கொள்ளலாம். 10 முதல் 15 நிமிடங்களுக்கு இதை வாயிலேயே வைத்திருந்து பின் விழுங்கிவிட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதைச் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு.  இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். எனவே, சளி வந்தால் வெந்நீர் அருந்தவேண்டியது கட்டாயம். அதோடு மேலே சொன்ன வழிமுறைகளில் ஒன்றையும் பின்பற்றினால் சளியும் இருமலும் வந்த இடம் தெரியாமல் ஓடிப்போவது உறுதி.

Monday, September 2, 2019

Pallikudamnews

Dinu

வருமானவரித்துறை தொடர்பாக சில முக்கிய மாற்றங்கள் வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன.

வழக்கமாக வருமான வரி தொடர்பான மாற்றங்கள், ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும். ஆனால், இந்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால், அதற்க்கு முந்தைய நிதிநிலை அறிக்கை முழு பட்ஜெட்டாக அமையவில்லை. இதனால் மத்தியில் புதிய அரசு அமைந்த பின் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவியக்கப்பட்டபடி,இந்த மாற்றங்கள் செப்டம்பர் 1 முதல் அமலாகின்றன.

1. அசையா சொத்துக்களை வாங்கும் போது, அதற்கான சொத்தின் மதிப்புக்கு மட்டுமே டி.டி.எஸ் செய்யப்படும் என்றவிதிமுறையில் இருந்து வந்தது. ஆனால்,வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஒரு சொத்தை வாங்கும்போது, சொத்தின் மதிப்புடன், கிளப் ஹவுஸ்,கார் பார்க்கிங், மின்சாரம், நீர் வசதி கட்டணம், மற்றும் ஆடம்பர தேவைகளுக்கான வசதிகளுக்குசேர்த்து கட்டும்தொகையோடு அதற்கும்டி.டி.எஸ்-யை செலுத்த வேண்டும்.

2. ஓர் நிதியாண்டில் ஒருவங்கிக் கணக்கில் இருந்து ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்-க்கு மேல் பணத்தை எடுக்கும் பட்சத்தில், அதற்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். ஆன்லைன் பணபரிவர்த்தனையை அதிகரிக்கவும், பணமில்லா பரிவர்த்தனையை குறைக்கவும்இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.செப்டம்பர் 1 முதல், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ .50 லட்சத்திற்கு மேல் பணம் செலுத்தும் தனிநபர்கள் மற்றும் HUF எனப்படும் இந்து கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் 5% டி.டி.எஸ் செலுத்த வேண்டும்.

வீடு புதுப்பித்தல், திருமண விழாக்களின் போது ஒரு குறிப்பிட்ட துறையை சேர்ந்த நபருக்கோ நிறுவனத்திற்கோ, 50 லட்சத்திற்கு மேல் பணம் செலுத்த நேர்ந்தால் அதில்,டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்பட வேண்டும்.

4.நீங்கள் பெற்ற ஆயுள் காப்பீட்டின் முதிர்வு தொகைக்குவரி விதிக்கப்படுமானால், நிகர வருமானப் பகுதியில் இருந்து 5%டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்படும்.

5. செப்டம்பர் 1 முதல், வங்கிகள் மற்றும் எஃப்ஐக்கள் சிறிய பரிவர்த்தனைகளை கூட வரித் துறைக்கு தெரிவிக்கும்படி கேட்கலாம், இதன் மூலம் உங்கள் வருமானவரிதாக்கலை சரிபார்க்க இதனை பயன்படுத்தலாம்.

6. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி,குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ஆதார் உடன் பான் இணைக்கப்படாவிட்டால் அந்த பான் எண் செயல்பாடற்றதாக கருதப்படும். எனினும் அது முடக்கப்பட்டதாக கருத முடியாது. இவ்வகை பான் என் உடையவர்கள் அதை மீண்டும் புதுப்பிக்க என்ன வழி என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

7.பரிவர்த்தனைகளுக்கு ஏற்ப பான் அல்லது ஆதாரை பயன்படுத்தலாம்.குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டுக்கு பதிலாக ஆதார் கார்டை மேற்கோள் காட்ட முடியும்

Pallikudam

2  வருஷம் இதையெல்லாம் செய்யாதீங்க ! Middle Class - ஐ எச்சரிக்கும் Anand ...

Saturday, August 3, 2019

Amaravathi Cynic School

அமராவதிநகர் சைனிக் பள்ளி மாணவர் சேர்க்கை அறிவிப்பு: விண்ணப்பங்கள் பதிவிறக்கம்.  

உடுமலை:உடுமலை, அமராவதிநகர் சைனிக் பள்ளியில், 2020-21 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் 'ஆன்லைனில்' நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில், ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.வரும், 2020-21 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு 2020, ஜன., 5ம் தேதி நடக்கிறது.

ஆறாம் வகுப்பு சேர்க்கைக்கு, அங்கீகாரம் பெற்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்; 2008, ஏப்., முதல், 2010 மார்ச் மாதத்திற்குள் பிறந்திருக்க வேண்டும்.அதேபோல், ஒன்பதாம் வகுப்பு சேர்க்கைக்கு, 2005, ஏப்., முதல், 2007 மார்ச் மாதத்திற்குள் பிறந்திருக்க வேண்டும். ஆறாம் வகுப்பில், 90 மற்றும் ஒன்பதாம் வகுப்பில் 6 இடங்களுக்கும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். உடுமலை, புதுச்சேரி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப் படுகிறது. சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 'ஆன்லைன்' மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

'ஆன்லைன்' மூலம் விண்ணப்பங்கள் பெறுவதற்கும், கட்டணம் மற்றும் சேர்க்கை குறித்த கூடுதல் விபரங்களுக்கும், www.sainikschool amaravathinagar.edu.in , www.sainikschooladmission.in என்ற இணையதளங்களிலும் பார்வையிடலாம்.விண்ணப்பங்களை, நாளை (ஆக., 5ம்தேதி) முதல், செப்., 23ம்தேதி வரை சமர்ப்பிக்கலாம். நுழைவுத்தேர்வு குறித்த கூடுதல் தகவல்களுக்கு, 04252 256246 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை, பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Thursday, June 27, 2019

Windows whatsapp

அடுத்த ஆண்டு முதல் வாட்ஸ்அப் வேலை செய்யாது!

இந்தாண்டு இறுதியில் விண்டோஸ் போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இயங்குதளத்திலும் வாட்ஸ்அப் வேலை செய்யாது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் விண்டோஸ் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு 2.3.7 மற்றும் iOS 7 இயங்குதளத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாட்ஸ்அப் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்அப்பின், சமீபத்திய கேள்வி பதில்கள் (FAQ) பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட்போன்கள் மூலமாக புதிதாக வாட்ஸ்அப் கணக்கு எதுவும் தொடங்க முடியாது. ஏற்கனவே, வாட்ஸ்அப் இருக்கும் பட்சத்தில், அதுவும் வேலை செய்யாது.
இதையும் பாருங்க: வாட்ஸ்அப் குரூப்பில் சேராமல் இருப்பது எப்படி? இப்படி..!
பயனாளர்கள் ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ் பகுதிக்குள் சென்று, தங்களுடைய போன் எந்த வெர்ஷனில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு Settings பிரிவுக்குள் சென்று Phone>About என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில், ஸ்மார்ட்போன் எந்த இயங்குதளத்தில் இயங்குகிறது என்பது காட்டப்படும். ஆண்ட்ராய்டு 2.3.7 வெர்ஷன் இருந்தால், அந்த போனில் அடுத்த வருடம் வாட்ஸ்அப் வேலை செய்யாது.

ஆண்ட்ராய்டு 4.03 வெர்ஷன் அல்லது அதற்கு மேல் உள்ள ஸ்மார்ட்போனில் தான் வருங்காலத்தில் வாட்ஸ்அப் வேலை செய்யும். வாட்ஸ்அப்பை புதிய தொழில்நுட்ப வசதிகள் கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்கள் இருந்தால், அதற்கு ஏற்றவாறு ஆண்ட்ராய்டு வெர்ஷனும் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டே அப்டேட் செய்யப்படுகிறது.
(2020 முதல் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்யலாம்!)

இப்போது உள்ள காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அனைவரிடத்திலும் வாட்ஸ்அப் உள்ளது. வாட்ஸ்அப் இல்லாத தினசரி வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. எனவே, பயனாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனை அடுத்த வெர்ஷனுக்கு மாற்றுவதன் மூலம் வாட்ஸ்அப்பின் இந்த கெடுபிடியில் இருந்து தப்பிக்கலாம்.

Saturday, June 8, 2019

Form 16 file

சம்பளம் வாங்குவோர் கவனத்துக்கு.. வருமான வரி தாக்கல் செய்ய Form 16.. கெடு நீட்டிப்பு

வருமான வரி என்பது, தங்கள் அதிகார எல்லைக்குள் தனிநபர்களாலும் வணிகர்களாலும் உருவாக்கப்பட்ட வருவாய்க்கு, அரசு விதிக்கும் வரி ஆகும். இந்த வருமான வரிகள் அரசாங்கங்களுக்கான வருவாய் ஆதாரமாக உள்ளன. இப்படி விதிக்கப்படும் வருமான வரியானது மக்கள் நேரடியாக அரசாங்கத்திற்கு அளிக்கும் வரியாகும்.

இந்த வரி ஒவ்வொருவருக்குமான கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்து மாறுபடும். அதில் மாத சம்பளம் வாங்குவோர் ஆண்டுதோறும் ஜூலை31ம் தேதிக்குள் அபராதம் இன்றி வருமான வரி கணக்கை தாக்கல் செய்து கொள்ளலாம் என்ற நிலையே இருந்து வந்தது.

ஆனால் இந்த ஆண்டு, கடந்த 2018 - 2019 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய தேவைப்படும் படிவமான 16 (Form 16) வழங்குவதற்கான கெடு தேதியை வரும் ஜீன் 15ம் தேதியில் இருந்து ஜீலை 10ம் வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

TDS தாக்கலுக்கான அவகாசம் நீட்டிப்பு
அதோடு கடந்த 2018 - 2019 ஆண்டுக்கான டி.டி.எஸ் (TDS) தாக்கலுக்காக ஜீன் 30 வரையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது டேக்ஸ் டிடெக்டட் அட் சோர்ஸ் (Tax Deducted at Source) என்பர். இது ஒரு ஊழியருக்கு, அவரின் நிறுவனம் அளிக்கும் சான்றிதழாகும். இந்த ஆவணத்தில் வேலை செய்பவருக்கு அளிக்கப்படும் மாதச் சம்பளம் மற்றும் TDS ஆகியவை பற்றிய விளக்கமான தகவல்கள் இருக்கும்.

இதையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்
கடந்த ஏப்ரல் மாதம், புதிய நிதியாண்டுக்கான 2019 - 2020 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தபோது, முந்தைய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வருமான வரி குறித்துப் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். குறிப்பாக பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரம்பிற்குள் வருபவர்களுக்கு முழு வரி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிதி ஆண்டுக்கான வருமான வரியை அடுத்த ஆண்டு தாக்கல் செய்யும் போது 5 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருவாய்க்கு வரி செலுத்தத் தேவையில்லை. ஆக பலருக்கு இதன் மூலம் வருமான வரி என்பதே இருக்காது.

வருமான வரிச்சலுகை
அதோடு சம்பளம் பெறும் ஊழியர்களோ அல்லது ஓய்வூதியம் பெறும் நபர்களோ மருத்துவச் செலவுகள் மற்றும் பயணப் படி போன்றவற்றுக்கான வரி கழிவு (standard deduction) ரூ.40,000யிலிருந்து ரூ.50,000 உயர்த்தப்பட்டிருந்தது. முன்பு வங்கி கணக்கில் உள்ள இருப்புத் தொகை மற்றும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் செய்துள்ள முதலீடுகளின் மூலம் வரும் வட்டி வருவாய் ரூ.10,000 அதிகமாக இருந்தால் அதற்கு வரி செலுத்த வேண்டும். நடப்பு நிதியாண்டு ரூ.40,000 உயர்த்தப்பட்டிருந்தது.

வீட்டு வாடகை வருமானத்தில் சலுகை
வீடு வாடகை மூலம் ஆண்டுக்கு 1.80 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஆண்டு வருமான வருகிறதென்றால் கூடுதல் தொகைக்கும் வரி செலுத்த வேண்டும் என்று முன்னர் இருந்தது. அது நடப்பு நிதியாண்டில் 2.40 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தது.

தேசிய வரியில் சலுகை
ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீடு உள்ளது என்றால் அதற்கு தேசிய வரி செலுத்த வேண்டும் என்ற விதியை நடப்பாண்டு முதல், இரண்டாவது வீட்டை சொந்த பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் போது வரி செலுத்தத் தேவையில்லை என்றும் அரசு இடைக்கால பட்ஜெட்டில் கூறியிருந்தது. அதோடு சொந்த ஒரு ஊரில் ஒரு வீடும், வேலைக்கு சென்ற இடத்தில் ஒரு வீடும் என்று மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், வாடகைக்கு விடாமல் சொந்த பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தினால் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிப்பதாக பட்ஜெட்டின் போது பியூஷ் கோயல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக மக்கள் வருமான வரி தாக்கல் செய்யும் போது இதையும் கொஞ்சம் கவனித்து செய்வது நல்லது.

வருமான வரி தாக்கல் செய்ய பான் – ஆதார் இணைப்பு
இந்த நிலையில் மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2019 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த நிதி ஆண்டுக்கான வரியை தாக்கல் செய்ய வேண்டுமெனில், பான் கார்டுடன் ஆதாரை இணைத்தால் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்ய முடியும்.