Thursday, June 27, 2019

Windows whatsapp

அடுத்த ஆண்டு முதல் வாட்ஸ்அப் வேலை செய்யாது!

இந்தாண்டு இறுதியில் விண்டோஸ் போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இயங்குதளத்திலும் வாட்ஸ்அப் வேலை செய்யாது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் விண்டோஸ் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு 2.3.7 மற்றும் iOS 7 இயங்குதளத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாட்ஸ்அப் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்அப்பின், சமீபத்திய கேள்வி பதில்கள் (FAQ) பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட்போன்கள் மூலமாக புதிதாக வாட்ஸ்அப் கணக்கு எதுவும் தொடங்க முடியாது. ஏற்கனவே, வாட்ஸ்அப் இருக்கும் பட்சத்தில், அதுவும் வேலை செய்யாது.
இதையும் பாருங்க: வாட்ஸ்அப் குரூப்பில் சேராமல் இருப்பது எப்படி? இப்படி..!
பயனாளர்கள் ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ் பகுதிக்குள் சென்று, தங்களுடைய போன் எந்த வெர்ஷனில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு Settings பிரிவுக்குள் சென்று Phone>About என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில், ஸ்மார்ட்போன் எந்த இயங்குதளத்தில் இயங்குகிறது என்பது காட்டப்படும். ஆண்ட்ராய்டு 2.3.7 வெர்ஷன் இருந்தால், அந்த போனில் அடுத்த வருடம் வாட்ஸ்அப் வேலை செய்யாது.

ஆண்ட்ராய்டு 4.03 வெர்ஷன் அல்லது அதற்கு மேல் உள்ள ஸ்மார்ட்போனில் தான் வருங்காலத்தில் வாட்ஸ்அப் வேலை செய்யும். வாட்ஸ்அப்பை புதிய தொழில்நுட்ப வசதிகள் கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்கள் இருந்தால், அதற்கு ஏற்றவாறு ஆண்ட்ராய்டு வெர்ஷனும் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டே அப்டேட் செய்யப்படுகிறது.
(2020 முதல் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்யலாம்!)

இப்போது உள்ள காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அனைவரிடத்திலும் வாட்ஸ்அப் உள்ளது. வாட்ஸ்அப் இல்லாத தினசரி வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. எனவே, பயனாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனை அடுத்த வெர்ஷனுக்கு மாற்றுவதன் மூலம் வாட்ஸ்அப்பின் இந்த கெடுபிடியில் இருந்து தப்பிக்கலாம்.

Saturday, June 8, 2019

Form 16 file

சம்பளம் வாங்குவோர் கவனத்துக்கு.. வருமான வரி தாக்கல் செய்ய Form 16.. கெடு நீட்டிப்பு

வருமான வரி என்பது, தங்கள் அதிகார எல்லைக்குள் தனிநபர்களாலும் வணிகர்களாலும் உருவாக்கப்பட்ட வருவாய்க்கு, அரசு விதிக்கும் வரி ஆகும். இந்த வருமான வரிகள் அரசாங்கங்களுக்கான வருவாய் ஆதாரமாக உள்ளன. இப்படி விதிக்கப்படும் வருமான வரியானது மக்கள் நேரடியாக அரசாங்கத்திற்கு அளிக்கும் வரியாகும்.

இந்த வரி ஒவ்வொருவருக்குமான கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்து மாறுபடும். அதில் மாத சம்பளம் வாங்குவோர் ஆண்டுதோறும் ஜூலை31ம் தேதிக்குள் அபராதம் இன்றி வருமான வரி கணக்கை தாக்கல் செய்து கொள்ளலாம் என்ற நிலையே இருந்து வந்தது.

ஆனால் இந்த ஆண்டு, கடந்த 2018 - 2019 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய தேவைப்படும் படிவமான 16 (Form 16) வழங்குவதற்கான கெடு தேதியை வரும் ஜீன் 15ம் தேதியில் இருந்து ஜீலை 10ம் வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

TDS தாக்கலுக்கான அவகாசம் நீட்டிப்பு
அதோடு கடந்த 2018 - 2019 ஆண்டுக்கான டி.டி.எஸ் (TDS) தாக்கலுக்காக ஜீன் 30 வரையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது டேக்ஸ் டிடெக்டட் அட் சோர்ஸ் (Tax Deducted at Source) என்பர். இது ஒரு ஊழியருக்கு, அவரின் நிறுவனம் அளிக்கும் சான்றிதழாகும். இந்த ஆவணத்தில் வேலை செய்பவருக்கு அளிக்கப்படும் மாதச் சம்பளம் மற்றும் TDS ஆகியவை பற்றிய விளக்கமான தகவல்கள் இருக்கும்.

இதையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்
கடந்த ஏப்ரல் மாதம், புதிய நிதியாண்டுக்கான 2019 - 2020 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தபோது, முந்தைய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வருமான வரி குறித்துப் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். குறிப்பாக பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரம்பிற்குள் வருபவர்களுக்கு முழு வரி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிதி ஆண்டுக்கான வருமான வரியை அடுத்த ஆண்டு தாக்கல் செய்யும் போது 5 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருவாய்க்கு வரி செலுத்தத் தேவையில்லை. ஆக பலருக்கு இதன் மூலம் வருமான வரி என்பதே இருக்காது.

வருமான வரிச்சலுகை
அதோடு சம்பளம் பெறும் ஊழியர்களோ அல்லது ஓய்வூதியம் பெறும் நபர்களோ மருத்துவச் செலவுகள் மற்றும் பயணப் படி போன்றவற்றுக்கான வரி கழிவு (standard deduction) ரூ.40,000யிலிருந்து ரூ.50,000 உயர்த்தப்பட்டிருந்தது. முன்பு வங்கி கணக்கில் உள்ள இருப்புத் தொகை மற்றும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் செய்துள்ள முதலீடுகளின் மூலம் வரும் வட்டி வருவாய் ரூ.10,000 அதிகமாக இருந்தால் அதற்கு வரி செலுத்த வேண்டும். நடப்பு நிதியாண்டு ரூ.40,000 உயர்த்தப்பட்டிருந்தது.

வீட்டு வாடகை வருமானத்தில் சலுகை
வீடு வாடகை மூலம் ஆண்டுக்கு 1.80 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஆண்டு வருமான வருகிறதென்றால் கூடுதல் தொகைக்கும் வரி செலுத்த வேண்டும் என்று முன்னர் இருந்தது. அது நடப்பு நிதியாண்டில் 2.40 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தது.

தேசிய வரியில் சலுகை
ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீடு உள்ளது என்றால் அதற்கு தேசிய வரி செலுத்த வேண்டும் என்ற விதியை நடப்பாண்டு முதல், இரண்டாவது வீட்டை சொந்த பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் போது வரி செலுத்தத் தேவையில்லை என்றும் அரசு இடைக்கால பட்ஜெட்டில் கூறியிருந்தது. அதோடு சொந்த ஒரு ஊரில் ஒரு வீடும், வேலைக்கு சென்ற இடத்தில் ஒரு வீடும் என்று மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், வாடகைக்கு விடாமல் சொந்த பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தினால் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிப்பதாக பட்ஜெட்டின் போது பியூஷ் கோயல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக மக்கள் வருமான வரி தாக்கல் செய்யும் போது இதையும் கொஞ்சம் கவனித்து செய்வது நல்லது.

வருமான வரி தாக்கல் செய்ய பான் – ஆதார் இணைப்பு
இந்த நிலையில் மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2019 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த நிதி ஆண்டுக்கான வரியை தாக்கல் செய்ய வேண்டுமெனில், பான் கார்டுடன் ஆதாரை இணைத்தால் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்ய முடியும்.

Sunday, June 2, 2019

TRB New policy

ஆசிரியர் தேர்வு முறையில் மாற்றம்' - புதிய கல்வி கொள்கை

ஆசிரியர்களை தேர்வு செய்வது, இடமாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என புதிய கல்வி கொள்கை கூறுகிறது. இதன்படி கிராமப்புற பள்ளிகளில் பணிக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு அருகிலேயே முறையான தங்கும் வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும், இதற்காக ஊக்கத்தொகை வழங்குவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆசிரியர்கள் இருக்கும் பள்ளிகளில் இருந்து அவர்களை இடமாற்றம் செய்வது கூடாது என்கிறது புதிய கல்வி கொள்கை. அடிக்கடி இடமாற்றத்தால் மாணவர் ஆசிரியர் இடையிலான நீண்ட கால உறவு கெடுவதோடு கற்றல் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டு மாணவரின் வளர்ச்சி பாதிக்கப்படுவதால் பணியிடமாற்றங்களை நிறுத்த வேண்டும் எனக் கூறுகிறது.

குடும்பச் சூழல், பணிமூப்பு உள்ளிட்ட அரிதான காரணங்களுக்காக மட்டுமே பணியிட மாற்றம் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான தகுதித் தேர்வு முறையை இன்னும் வலுவானதாக மாற்ற வேண்டும், தேர்வு தவிர ஆசிரியர்கள் வகுப்பறையில் டெமோ செய்து காட்டுவது, நேர்காணலில் பங்கேற்பது போன்றவற்றையும் சேர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வரும் காலங்களில் 4 ஆண்டுகால இன்டகிரேடட் பிஎட் படிப்பே ஆசிரியர் பணிக்காக அடிப்படை தகுதி வாய்ந்த படிப்பாக மாறும் என்றும் அந்த கொள்கை கூறுகிறது. அதேவேளையில் பணியில் இருக்கும் ஆசிரியர்களை, தேர்தல் பணி உள்ளிட்ட கற்றலுடன் தொடர்பில்லாத பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமில்லாத, தன்னிச்சையான ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் விரைவில் மூடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.