Tuesday, February 20, 2024

உலக தாய்மொழி தினம்.

உலக தாய்மொழி தினம்

✍ ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்மொழி தினம் பிப்ரவரி 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது உலகெங்கிலும் உள்ள பல்வேறு தாய்மொழிகளையும், பன்மொழித்தன்மையையும் கொண்டாடுவதற்கான ஒரு தினமாகும்.

✍ தாய்மொழி என்பது ஒரு மனிதனின் அடையாளம், கலாச்சார வெளிப்பாடு, எண்ணம் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான கருவி, சமூக ஒற்றுமை மற்றும் அறிவு வளர்ச்சிக்கு முக்கியமானது.

வரலாறு:

✍ 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி வங்காள மொழிக்காக போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

✍ 1999ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.

✍ பன்மொழித்தன்மை உலகத்தை சுவாரஸ்யமாக்குகிறது. வெவ்வேறு கலாச்சாரங்களை பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது. புதிய யோசனைகள் மற்றும் கருத்துகளை உருவாக்க உதவுகிறது. உலகளாவிய புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்புக்கு வழிவகுக்கிறது.

✍ உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில், பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தை கொண்டாடுவதற்கான சில வழிகள்:

✍ உங்கள் தாய்மொழியில் ஒரு புத்தகம் அல்லது கவிதையை எழுதுங்கள் அல்லது படியுங்கள்.

✍ உங்கள் தாய்மொழியில் ஒரு பாடலைப் பாடுங்கள்.

✍ உங்கள் தாய்மொழியைப் பேசும் மற்றவர்களுடன் உரையாடுங்கள்.

✍ உங்கள் தாய்மொழியின் முக்கியத்துவம் பற்றி பிறரிடம் கூறுங்கள்.

இந்த தினத்தை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு உங்கள் தாய்மொழியைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அதைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் உதவுங்கள்.

 

ஒரு ஊரில் ஒரு விவசாயி நெல் பயிரிட்டான்.

நல்ல விளைச்சல் கண்டது அந்த நிலம், ஒரு நாள் நிலத்தை சுற்றி பார்த்தவன்.

ஒரு வரப்பின் ஓரம் நின்று தனக்குள்ளே பேசி கொண்டான்.

ஆ! நல்ல விளைச்சல் நாளை ஆட்களை அழைத்து வந்து எப்படியும் அறுவடை செய்துவிட வேண்டும், என கூறினான்.

இதை அந்த விளைச்சலில் கூடு கட்டி கூட்டில் இருந்த குருவி குஞ்சுகள் கேட்டுகொண்டு இருந்தது.

அந்த குஞ்சிகளின் தாய் வந்தவுடன் அம்மா! நிலத்தின் உரிமையாளர் வந்தார், நாளை ஆட்களை கூட்டி வந்து அறுவடை செய்ய போவதாக சொன்னார், அம்மா! என்று கூறியது.

உடனே தாய் குருவி நாளை அறுவடை செய்யமாட்டார் கவலை பட வேண்டாம் என கூறியது.

மறுநாள் அறுவடை நடைபெறவில்லை.

மறுநாள் வந்த விவசாயி அதே இடத்தில் நின்றுகொண்டு எப்படியாச்சும் வெளியூரில் இருந்து ஆட்களை கொண்டுவந்தாவது நாளை அறுவடை செய்துவிட வேண்டும் என் கூறினான்.

மீண்டும் அந்த குஞ்சிகளின் தாய் வந்தவுடன் அம்மா! நிலத்தின் உரிமையாளர் வந்தார், நாளை வெளியூரில் இருந்தாவது ஆட்களை கூட்டி வந்து அறுவடை செய்ய போவதாக சொன்னார், அம்மா! என்று கூறியது.

உடனே தாய் குருவி நாளையும் அறுவடை செய்யமாட்டார் கவலை பட வேண்டாம் என கூறியது.

அது போலவே மறுநாளும் அறுவடை நடக்கவில்லை.

மறுநாள் வந்த விவசாயி அதே இடத்தில் நின்றுகொண்டு எப்படியாச்சும் நாளை நாமே இறங்கியாவது அறுவடை செய்துவிட வேண்டும் என் கூறினான்.

மீண்டும் அந்த குஞ்சிகளின் தாய் வந்தவுடன் அம்மா! நிலத்தின் உரிமையாளர் வந்தார், நாளை அவரே இறங்கி அறுவடை செய்ய போவதாக சொன்னார், அம்மா! என்று கூறியது.

உடனே தாய் குருவி நாளையும் அறுவடை கட்டாயம் நடைபெறும்,வாருங்கள் நாம் வேறு இடத்திற்கு பத்திரமாக சென்றுவிடலாம் என கூறியது.

உடனே குஞ்சுகள் ஏன் அம்மா நாளை கட்டாயம் நடைபெறும் என்று கூறுகின்றீர்கள் என கேட்டன,

அதற்கு தாய் குருவி கூறியது

இதுநாள் வரை விவசாயி அடுத்தவர் மீது நம்பிக்கை வைத்திருந்தான்,

ஆனால் இன்றோ தன் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறான். என கூறியது.

*தன்னம்பிக்கை வெல்வது உறுதி*

என் தம்பிகளின் வெற்றி உறுதி👍👍👍

Tuesday, February 13, 2024

வலுவிழக்கும் ஜாக்டோஜியோ போராட்டம்

 *243 ரத்து கோரிக்கை இடம்பெற்றதால் வலுவை இழக்கும் 

ஜாக்டோ-ஜியோ போராட்டம்*



*CPS ஒழிப்புக்காக நாம் எப்போதும் போராட தயார்*

🩸

*நம்முடைய வாழ்வாதார கோரிக்கை பங்களிப்புத் திட்டத்தை ரத்து செய்வது & நம்முடைய பதவி உயர்வு கோரிக்கையும் புறந்தள்ளி விட முடியாது.*

 *ஆனால் ஜாக்டோ ஜியோ முரண்பாடான கோரிக்கைகளை வைக்காமல் பொது கோரிக்கைகளுக்காக போராட வேண்டும்.*

*243 ரத்து செய்ய வேண்டும் என்பதை மாற்றி திருத்தங்களை செய்ய வேண்டும்.*

*என்கிற கோரிக்கை வைத்தால்  உடன்பாடு உண்டு.* 

*இல்லையேல் நடுநிலைப்பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொள்வதில் பெரும் சிக்கல் உள்ளது.

CPS ஐ காட்டி 243 ரத்து செய்ய நினைப்பதை தடுக்கவேண்டும்.*

*ஆகவே பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு என்ற இரண்டு கோரிக்கைகளை வைத்து மட்டுமே போராட வேண்டும்.*

*243 ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை இடம் பெறக் கூடாது.*