Sunday, November 20, 2022

உலகத் தொலைக்காட்சி நாள்.

 நவம்பர் 21 - உலகத் தொலைக்காட்சி நாள். World Television Day



1936-ல் கருப்பு வெள்ளை ஒளிபரப்பு

தொலைக்காட்சி புரட்சிக்கு 1925-ல் வித்திட்டவர் இங்கிலாந்து நாட்டின் ஜான்லோகி பெயர்டு என்ற அறிவியலாளர். 27.01.1926-ல் தான் கண்டறிந்த கருவியைபுகழ்பெற்ற அறிவியல் அறிஞர்கள் மத்தியில் இயக்கிக் காட்டினார்.

அவரைத் தொடர்ந்து அறிஞர்கள் பலரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டதன் விளைவாக, 1936-ம்ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தொலைக்காட்சியில் கருப்பு வெள்ளை ஒளிபரப்பு நடைமுறைக்கு வந்தது.

'Television' என்பதற்கு தமிழில் பட ரேடியோ, வானொளி என்று பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இச்சொல் தொலைவில் உள்ளதை காண்பது என்ற பொருள் தந்ததால், தொலைக்காட்சி என்பதே நிலைபெற்றது.

நவீன தொலைக்காட்சி பெட்டிகள்

உலக நிகழ்வுகளை வீடுகளுக்குள் கொண்டு வந்து காட்சிப்படுத்திய, தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பானது ஆன்டெனாவில் தொடங்கி, தற்போது டிஷ், கேபிள், இணையம் என பல்வகை ஊடகங்களில் நிலைபெற்று விட்டது.

அறிவியல், தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப நெகிழ்வுதன்மையுடன் காணப்படுவதால், ஒளிபரப்பு பல்வகை ஊடகங்களுக்குள் ஊடுருவி நிலை நிறுத்திக்கொண்டுள்ளது. சிறிய பெட்டி வடிவில்கருப்பு வெள்ளை திரையுடன் தயாரிக்கப்பட்டு, பின்னர் பெரிய அளவிலும், வண்ணத்திரையுடனும் தயாரிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேலாக காட்சியளித்த தொலைக்காட்சிகள், 2010-க்கு பிறகு எல்இடி,எல்சிடி என அதிநவீன தொழில்நுட்பத்தில் சிறியது முதல் பெரிய திரைகளுடன்தயாரிக்கப்பட்டு, வீடுகளை அலங்கரித்து வருகின்றன.

பிரம்மாண்ட திரைகள்

திரையரங்கத்தின் திரையைப் போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும், பிரம்மாண்ட திரை கொண்ட தொலைக்காட்சிகளும் தற்போது தயாரிக்கப்படுகின்றன. அதேநேரத்தில் ஆரம்ப காலத்தில் பயன்படுத்தி வந்த பெட்டியைப் போன்ற தொலைக்காட்சி பெட்டிகளில் பெரும்பாலும் விடைபெற்று விட்டன.


24 X 7 செய்திச் சேனல்கள்

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் வருகைக்குப் பிறகான காலக்கட்டத்தில் ஏற்பட்ட போட்டியானது நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் மக்களுக்கு அதிகளவில் கொண்டு சேர்க்கத் தொடங்கின. நாள்தோறும் சில மணி நேரங்கள் மட்டுமே அளிக்கப்பட்ட ஒளிபரப்பானது, பின்னாளில் 24 X 7 என்ற 24 மணி நேரமாக மாறி நிற்கிறது. 24 மணி நேர செய்தி தொலைக்காட்சிகள் பெருகி விட்டன.

இணையத்தில் தொலைக்காட்சி

நவீன தகவல் தொடர்புச் சாதனங்களில் இணையம் இன்றியமையாததாகி விட்டது. அனைத்து தகவல் தொடர்புச் சாதனங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது இணையம். பொதுமக்கள் தொலைக்காட்சி பெட்டிகளில் பல்வேறு சேனல்களைப் பார்த்து வரும் வேளையில், இணையம் என்ற ஊடகத்தின் வழியாகவும் பல்வேறு சேனல்களை காணும் வாய்ப்பை இன்று நாம் பெற்றுள்ளோம்.

இணைய பயன்பாட்டை ஏற்றுக்கொள்ளும் கணினி, ஆண்ட்ராய்டு செல்போன், டேப்லாய்டு போன்ற மின்னணு சாதனங்கள் மூலமாக தொலைக்காட்சிகளைக் கண்டுகளிக்க முடியும். 

அதேநேரத்தில் வீடியோ பதிவுகளை, பல டாட்.காம் மூலமாக பதிவேற்றம் செய்து, ‘வெப். டி.வி.’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் இணையத்தில் உலவவிடப்படுகின்றன. இதை தொலைக்காட்சியாக அங்கீகரிக்கலாமா என்பதை காட்சித் தொடர்பியல், தகவல் தொடர்பியல் ஆய்வாளர்கள்தான் நிரூபிக்க வேண்டும்.

தொலைக்காட்சி வரலாற்று தகவல்கள்

1. 1976 ஜனவரி 1 - வானொலியில் இருந்து தொலைக்காட்சி பிரிந்து, தனித் தகவல் தொடர்பு சாதனமானது.

2. 1977 ஆகஸ்ட் 17 - தொலைக்காட்சிக்கு தன்னாட்சி அந்தஸ்து கொடுப்பதற்கான வாய்ப்புகளை ஆராய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 1978-ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

3. 1981 நவம்பர் 17 - சோதனை முறையிலான வண்ண ஒளிபரப்பு தொடங்கி, இன்சாட்-1 ஏ செயற்கைக்கோள் வண்ண ஒளிபரப்பைத் தொடங்கியது. அதே ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி இச்செயற்கைக்கோள் செயலிழந்தது.

4. 1983 மார்ச் - தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தரத்தை உயர்த்துவதற்கு குழு ஏற்படுத்தப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் இன்சாட் 1-பி செயற்கைக்கோள் மூலம் நிகழ்ச்சிகள் அதிக நேரம் ஒளிபரப்பப்பட்டன.

5. 1984 ஏப்ரல் 2 - பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியுதவியுடன் தினமும் முற்பகல் 1 மணி நேரமும், பிற்பகல் 1 மணி நேரமும் கல்வி ஒளிபரப்பு தொடங்கியது.

6. 1988 ஜூலை 6 - சென்னை தொலைக்காட்சியின் 2-வது அலைவரிசை அறிமுகப்படுத்தப்பட்டது.

7. 1989 பிப்ரவரி 6 - தூர்தர்ஷன் மத்திய நிகழ்ச்சி தயாரிப்பு மையம் டெல்லியில் உள்ள ஆசிய விளையாட்டு அரங்கில் நிறுவப்பட்டது.

8. 1990 செப்டம்பர் 6 - தொலைக்காட்சிக்கும் வானொலிக்கும் தன்னாட்சி அந்தஸ்து வழங்க வகை செய்யும் ‘பிரச்சார் பாரதி’ மசோதா மக்களவையில் நிறைவேறியது.

9.1996-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைக்காட்சிக் கருத்தரங்கின் பரிந்துரையின்படி, ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21-ம் தேதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது.

நாடு முழுவதும் ஒளிபரப்பான நிகழ்ச்சி

இந்திய அரசு திட்டமிட்டவாறு தொலைக்காட்சியில் சிறுவர் கல்வி, உடல் நலம், தாய்சேய் நலம் தொடர்பான நிகழ்ச்சிகள் 'சைட்' செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்பப்பட்டன. காலை 10 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 6.30 மணி முதல் 8.50 மணி வரையிலும் ஒளிபரப்பு நேரம் அதிகரிக்கப்பட்டது. இவற்றில் 40 நிமிடம் கன்னடம் அல்லது தெலுங்கு நிகழ்ச்சிகளும், 20 நிமிடங்கள் இந்தி நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பட்டன. 

1975-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய நிகழ்வும், 1976-ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியும் நாடுமுழுவதும் ஒளிபரப்பப்பட்டது.

இந்தியாவில் தோற்றம் - வளர்ச்சி

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உதவியுடனும், யுனெஸ்கோவின் ஆதரவுடனும் இந்தியாவில் முதல் முறையாக 1959-ம் ஆண்டு அக்டோபர் 15-ம்நாள், இந்திய அரசு டெல்லியில் தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியது.

தொடக்க காலத்தில் வாரம் இரு நாட்களும், பின்னர் நாள்தோறும் 20 நிமிடங்களும் என 40 கி.மீ. சுற்றளவில் மட்டுமே தெரியும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. முதலில்சமுதாய மேம்பாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய இந்திய அரசு, அதன் பின்னர் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்க முடிவு செய்தது.

மக்கள் ஆதரவு பெருகவே தொலைக்காட்சி பெட்டிக்கான உதிரி பாகங்களைதயாரிப்பதற்கு, 1965-ல் இந்திய அரசு

உற்பத்தியாளர்களுக்கு அனுமதியளித்தது. இது இந்திய தொலைக்காட்சியின் வளர்ச்சியில் ஓர் மைல்கல்லாகஅமைந்தது. 1967 ஜனவரி மாதம்விவசாய நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர் நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது.

நிகழ்ச்சிகளைத் தடையின்றி பார்க்கும் வகையில் ஒளிபரப்பின் ஆற்றல்அதிகரிக்கப்பட்டது. 

1970-ல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு 3 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டது.

குறுகிய காலத்தில் வேகமாக வளர்ச்சி கண்ட தொலைக்காட்சி ஒளிபரப்பானது, 1972-ல் மும்பையிலும், 1975-ல் கொல்கத்தா மற்றும் சென்னையிலும் விரிவுபடுத்தப்பட்டது.

1975-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் தொலைக்காட்சி பெட்டிகள் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது. அகில இந்திய வானொலி நிலையத்துடன் இணைந்து செயல்பட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பு 1976 ஜனவரியில், தூர்தர்ஷன் என்ற தனித்த அடையாளத்துடன் இயங்கத் தொடங்கியது.

1980-ல் இந்தியாவில் 9.5 லட்சம் தொலைக்காட்சி பெட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் வேளைகளில், தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சலுகை விலையிலும், தவணைத் திட்டங்களிலும் விற்க ஆரம்பித்ததன் விளைவு, தொலைக்காட்சி பெட்டிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது. 

தொலைக்காட்சி வர்த்தகத்தில் கிரிக்கெட் போட்டி ஏற்படுத்திய தாக்கம் மிகவும் அதிகம்.

செயற்கைக்கோள் வழி ஒளிபரப்பு

செயற்கைக்கோள் வழி தொலைக்காட்சி ஒளிபரப்பு திட்டம், இந்தியாவில் தொலைக்காட்சியின் வளர்ச்சியில் அடுத்தகட்ட நகர்வாக இருந்தது. யுனெஸ்கோ குழு, துணைக்கோள்களின் வழி ஏற்படும் தகவல் தொடர்பு வளர்ச்சியால் இந்தியாவின் கிராமங்கள் வளர்ச்சி அடையும் என்று கருதியது.

அதன் அடிப்படையில் இந்திய அரசின் அணு ஆற்றல் துறை, அமெரிக்க தேசிய வான்வழி மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி, 1975 ஆகஸ்ட் மாதம் ஏடிஎஸ்-6 என்ற துணைக்கோள் ஆப்பிரிக்காவின் தென்கோடி முனைக்கு மேல் நிலைநிறுத்தப்பட்டது.

இது மகாராஷ்டிர மாநில நிலையத்தில் இருந்து ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளை கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைத்ததில், சுமார் 2,500 கிராமங்கள் பயனடைந்தன.

கூடுதல் செயற்கைக்கோள்கள்

தொலைக்காட்சி நிலையங்களால் 80 கி.மீ. வரை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடியும் என்பதால், இந்தியாவில் உள்ள 5.6 லட்சம் கிராமங்கள் பயன்பெற அதிக செலவில் ஒளிபரப்பு நிலையங்கள் அமைக்க வேண்டியிருந்தது. இதனால் 1982-ல் இன்சாட்-1 ஏ செயற்கைக்கோளை இந்தியா செலுத்தியது. 

அதைத்தொடர்ந்து பல்வேறு செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன.

Saturday, November 19, 2022

ஊடகம்

பள்ளிக்கூடம்: ஊடகம் என்பது சமுதாய வளர்ச்சியில் சனநாயகத்தின் நான்...:  ஊடகம் என்பது சமுதாய வளர்ச்சியில் சனநாயகத்தின்  நான்காம் தூண்.  மக்களுக்கும், அரசாங்கத்துக்கும்  உள்ள இடைவெளியில் கண்ணாடி போல  நின்று அனைத்த...

ஊடகம் என்பது சமுதாய வளர்ச்சியில் சனநாயகத்தின் நான்காம் தூண்.

 ஊடகம் என்பது

சமுதாய வளர்ச்சியில் சனநாயகத்தின் 

நான்காம் தூண்.

 மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் 

உள்ள இடைவெளியில் கண்ணாடி போல 

நின்று அனைத்து 

செய்தி களையும் உலகிற்குச் சொல்லும் மிகப்பெரிய சாதனம் 

இந்த ஊடகம் ஆகும்.

 ஊடகம் என்பது பல வகைகளாகும் பழங்காலத்தில் செய்தி தொடர்பாகவும் 

வானொலி 

கைபேசி 

தொலைபேசி தொலைக்காட்சி செய்தித்தாள்

 வார மாத இதழ்கள் கட்டுரைகள் பத்திரிக்கைகள்

 போன்றவைகள் அனைத்தும் 

ஊடகத்தின் கீழ் வரும்

இந்தியா என்கிற

 இந்த தேசம் மிகப்பெரிய சனநாயக நாடு; 

உலகின் மூன்றாம் இராணுவத்தை கொண்ட நாடு; மக்கள் தொகையில் இரண்டாம் இடம் கொண்டுள்ள நாடு. அத்தகைய நாட்டில் 

ஊடகம் எத்தகைய செயல்பாடுகள் செய்ய வேண்டுமோ, 

அத்தகைய ஆக்கப்பூர்வ

சமுதாய வளர்ச்சிக் காண செயல்பாடுகளை இந்தியாவில் ஊடகங்கள் செய்துகொண்டிருக்கிறது.

காட்சி ஊடங்களின் செயல்பாடுகள்

பல இலட்சம் மைல் தொலைவிலுள்ள செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோள் அனுப்பியதை பெரும்சாதனையாக  தொலைக்காட்சியிலும், செய்தித்தாள்களிலும் சொல்லி சமுதாயத்தில் அறிவியல் வளர்ச்சியை  வெளிப்படுத்துகின்றனர்.

 பல கோடி செலவு 

செய்து செயற்கைகோள் அனுப்ப முடிந்த அரசியல்வாதிகளால் 

ஒரு கிராமத்திற்கு 

பேருந்து அனுப்ப 

முடியாத இயலாமையை 

ஊடகம் வெளிப்ப்டுத்தி

சமுதாய வளர்ச்சியில் பங்கு கொள்கிறது

வியட்நாம் போரின்

போது 1974-ஆம் ஆண்டு போர்க்களத்தில், பாஃன் தி கிம் என்ற வியட்நாம் சிறுமி ஒருவள் உடலில் தீக்காயங்களோடு நிர்வாணமாக ஓடி வரும் அந்த ஒரு காட்சி உலகையே உறைய வைத்தது. அந்தப்படம் போருக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்ட பேருதவி  செய்தது. அதனை செய்ததும் இதே போன்ற ஊடகங்கள்தான்.

இதனைவிட

மிகப்பெரிய மனித பேரவலங்கள் 2009-ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்தது. உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு  அவ்வளவு பெரிய கொடுமைகள்  அங்கு அரங்கேர

சனநாயகத்தை

ஒரு சமுதாயத்தைத் காப்பாற்றும் நிலையில்

ஊடகம் செயல்பட்டது 

 அச்சு ஊடகங்களில் அதிகளவில் வரும் 

கள்ள உறவு, 

கற்பழிப்பு,

தகாத குடும்ப உறவுகள் போன்ற செய்திகள் 

தினசரி நாளிதழ்களில் கைது என அறிவித்தும்

விழிப்புணர்வும் செய்து வருவதால் அதனைப் 

படிக்கும் சமுதாயம்

 திருந்த வாய்ப்பு அளிக்கிறது

ஒரு சமுதாயம் வளர்ச்சி பெற வேண்டுமானால் அந்த சமுதாயத்தில்

 கல்வி வளர்ச்சி வேலைவாய்ப்பு 

 தனிமனித வளர்ச்சி இருந்தால் தான் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு அந்த சமுதாயமானது 

வளர்ச்சி அடையும் 

ஒரு சமுதாயம் முன்னேறுவதற்கு அடிப்படையான காரணம் அங்கு வாழக்கூடிய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும்

 எங்கோ நடக்கும் நிகழ்ச்சிகளை 

நம் கண் முன்னே கொண்டு வந்து ஒலி ஒளியாக காட்டுவது சிறப்பு

 காட்டுமிராண்டியாக வாழ்ந்த மனிதன் 

நவ நாகரிக உலகில் வளர்ச்சி பெற்று உள்ளான் என்றால் அதற்கு அடிப்படை காரணம் ஊடகங்களின் பங்கு தான் 

மக்கள் மனதில் 

உள்ள தீய கருத்துக்களை தீய எண்ணங்களை அகற்றி நல்வழி காட்டிய பெரியோர்களின் சிந்தனைகளை 

அவரின்  கருத்துக்களை அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறியை மக்களிடம் கொண்டு சேர்த்து சமுதாயத்தில்

 ஒரு மறுமலர்ச்சி உண்டாக்க செய்தது ஊடகங்கள் தான்

மக்கள் உலகெங்கும் இருக்கும் வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை ஊடகங்கள் 

கிராமப்புற 

நகர்புற 

பட்டணத்தில் உள்ள மாணவர்களிடையே கொண்டு சேர்த்து தனிமனித வளர்ச்சி தினசரி நாளிதழ்களின் பங்கு பெரும் பங்கு வகிக்கிறது

 நாட்டு நடப்புகளை தினமும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை ஊடகங்கள் செய்கின்றன 

கிராமத்து டீக்கடையில் குப்பனும் 

சொக்கனும் எழுந்தவுடன் டீக்கடைக்கு சென்று

டீ குடித்துக் கொண்டே தினசரி நாளிதழ்களை படித்தவாறு  தனது அறிவை பெருக்கிக் கொள்கிறார். உலக அறிவோடு தொடர்பு கொள்கிறார் என்றால் காரணம் பத்திரிக்கை என்ற

ஊடகம்.

கிராமத்து  டீக்கடையில்

தினத்தந்தி, தினமணி, தினகரன் நாளிதழ்களை

படித்து சமுதாயம்

விழிப்புணர்வு பெற்றது என்றால்  தினசரி செய்திதாள் என்ற ஊடகம்

இன்றைக்கு உலகம் சுருங்கி விட்டது அதற்கு அடிப்படை காரணம் ஊடகங்களின் 

வளர்ச்சியே ஆகும் இன்றைய காலகட்டத்தில் கைபேசியில் மிகப்பெரிய வளர்ச்சியையும் மாற்றத்தையும் கண்டுள்ளோம் 

கிராமத்தில் இருந்தவாறு தனது வங்கி கணக்கை நடைமுறைப்படுத்துகிறான் பணத்தை வங்கிக் கணக்கை கையாள்கிறார்

 பேரழிவு ஏற்படக்கூடிய காலங்களில் 

புயல் மழை பூகம்பம் மற்றும் இயற்கை சீற்றங்களை பற்றிய செய்திகளை முன்கூட்டியே ஊடகங்கள் அறிவித்து சமுதாயத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றுகிறது

 மாணவர்கள் விளையாட்டு துறையில் இன்றைக்கு ஆர்வம் அதிகமாக உள்ளதன் காரணம் ஊடகத்தின் பங்கு தான்

 தமிழ்நாடு மிகப் பெரிய ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடத்த உதவியது கைபேசி எண்ணும் ஊடகம் தான் ஒரு மாற்றத்தை உருவாக்கியது 

ஒரு புரட்சியை உருவாக்கியது 

ஒரு சமுதாயத்தை பண்பாட்டை

நாகரிகத்தை

கலாச்சாரத்தை

வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றது ஊடகங்கள் தான்

 ஊடகங்களில் நன்மை தீமை இருந்தாலும் கூட நாம் நன்மையையே எடுத்துக் கொள்ள வேண்டும் தீமை என்பது புறந்தள்ளி நன்மையை மட்டுமே ஆராய வேண்டும்

திரைப்படம் என்பது கூட ஒரு ஊடகம் தான் 

ஆன்மீக கருத்து 

சமுதாய சிந்தனைக் கருத்துக்களை 

சமுதாய சீர்திருத்த கருத்துக்களை பாரதியாரின் பாடல்களை காமராஜரின் பண்புகளை அண்ணாவின் பேச்சினை பெரியாரின் 

 சீர்திருத்த கருத்துக்களை விவேகானந்தரின்

ஆன்மீக சிந்தனையை

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களை விழிப்புணர்வு கருத்துக்களை நம் கண் முன்னே காட்டியது திரைப்படம் என்ற ஊடகம்

ஒரு நாடு முன்னேற வேண்டும் என்று சொன்னால் ஒரு சமுதாயம் முன்னேற வேண்டும் அந்த சமுதாயத்தில் உள்ள மக்கள் விழிப்புணர்வை பெற வேண்டும் கல்வி வேலைவாய்ப்பு 

அறிவில் முன்னேற்றம் விளையாட்டு துறை மருத்துவ துறை பொருளாதார துறை போன்ற இன்னும் 

பல துறைகளையும் கிராமத்திற்கு கொண்டு சேர்த்ததில் ஒரு சமுதாயத்தை மேம்படுத்தியதில் 

சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படை காரணமாக இருந்ததில் பெரும் பங்கு ஊடகங்கள் தான் 

என்று சொல்வது 

முற்றிலும் உண்மையான கருத்து 

ஊடகங்களை 

நல்வழியில் பயன்படுத்தினால் சமுதாயம் முன்னேற்றமடையும் சமுதாயம் முன்னேற்றம் அடைந்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வலுவடையும் 

ஆகவே 

மரத்தின் கீழ் 

முடங்கிக் கிடந்த 

கூரை வீட்டில் கூனி குறுகி கிடந்த மக்கள் பலரை 

தட்டி எழுப்பி 

இன்றைக்கு முன்னேற்றம் பெற்ற மனிதனாக உருவாக்கியிருக்கிறது என்று சொன்னால் 

அதற்கு அடிப்படையான காரணம் 

ஊடகங்களே ஆகும்

தேவையானயிடங்களில் தேவையானதை தேவையான நேரத்தில் சொல்ல ஊடகம் கட்டாயம் தேவை. 

சமூகப் பொறுப்பு ஊடகங்களுக்கு மிக அதிகம். அதன் செயல்பாடுகள் சமூகத்தில் பெரும்மாற்றங்களை உண்டாக்கும். 

அதனை உணர்ந்து உணர்ந்து ஊடகவியலாளர்கள் செயல்பட்டாலே சமூகம் நற்பாதையில் பயணிக்கும்

Thursday, November 10, 2022

வாக்காளர் அட்டை சிறப்பு முகாம்

 வாக்காளர் அட்டை சிறப்பு முகாம்- வாக்காளர் பெயர் சேர்ப்பு , நீக்கம் & திருத்தம் பணிகளுக்கு 12.11.22 & 13.11.22 தேதிகளில் நடைபெறுகிறது.... தேவையான ஆவணங்கள்



SNA Account Login Details

SNA Account Login Details

 Canara Bank - SNA Account Login Details - Maker ID Vendor Creation - Checker ID Vendor Approval -  Vendor Payment - Payment Approval


see       Click here

Wednesday, June 22, 2022

ஆரம்ப பள்ளிக்கும் இனி பட்டதாரி ஆசிரியர் பணியிடம்

தொடக்கக் கல்வி துறையில் 

1-5 தொடக்க பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் புதியதாக ஒதுக்கீடு செய்ய திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தில் முயற்சி

நல்ல வரவேற்பு

இனி வருங்காலங்களில் 1-5 வகுப்புகளுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் நியமித்து தொடர்ந்து பட்டதாரி பணியிடமாக மாற்றிட வழிவகை செய்யும் திட்டம்.

Saturday, May 21, 2022

ஆசிரியர்

ஒரு பையன் 8 ஆம் வகுப்பு படிக்கும்போது..
சிகரெட் பிடிக்கப் பழகினான்...
பதினொன்றாம் வகுப்பிலேயே தண்ணி அடிக்கப் பழகினான்.
தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான்.அங்கு சீட்டாடவும் பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான்.
அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால்...
பொய் சொல்லவும், திருடவும் ஆரம்பித்தான்.
இறுதியில் கொலைகாரனாகவும் ஆனான்...
கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கீழ்க்கோர்ட், மேல்கோர்ட் என வழக்கு நடந்து,...
இறுதியாக..
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அனைத்து அப்பீல்களும் நிராகரிக்கப்பட்டு தூக்கிற்கான நாளும் குறிக்கப்பட்டது..
தூக்கிற்கு முன்தினம் கடைசி ஆசை கேட்கப்பட்டது.
பெற்றோரை சந்திக்க விரும்பினான்.
பெற்றோரும் வந்தனர்.
கதறினர்.....
போலீஸ், வக்கீல், நீதிபதி, சாட்சிகள் எல்லோரும் சதி செய்து அவனைத் தூக்குக்கு அனுப்பி விட்டதாக அழுது புலம்பினர்,
மகன் அமைதியாகச் சொன்னான். அவர்கள் காரணமில்லை,

 நீங்கள்தான்* " நான் ஐந்தாம் வகுப்பில் தவறு செய்தபோது *ஆசிரியர்* என்னை கண்டித்து அடித்தார்.
வீட்டில் அதை நான் சொன்னதும் நீங்கள் உறவினர்கள், நண்பர்களை கூட்டிக் கொண்டு பள்ளிக்கு வந்து ஆசிரியரையும், தடுத்த மற்ற ஆசிரியர்களையும்....

அடித்து மிரட்டி..
 போலீசிலும் புகார் கொடுத்தீர்கள்.
அதிலிருந்து ஆரம்பித்த வீழ்ச்சிதான் .
தூக்கு மேடை வரை வந்திருக்கிறது
எனது தூக்குக்கு நீங்கள்தான் காரணம் "என அழுதபபடியே சொன்னான்,..
ஆசிரியர் *கண்டிக்காத மாணவனை நாளை காவல்துறையும் நீதிமன்றமும் தண்டிக்கும்.*
இதை பெற்றோர் உணரவேண்டும்.
சிந்திக்க வைத்த பதிவு...
பரிவும், பாசமும்..... பிள்ளைகளின் பண்பையும் வாழ்க்கையையும் சீரழிக்கும் விதமாக
மாறிவிட அல்ல என்பதை பெற்றோர் புரிந்து கொண்டால்
இளைய சமுதாயம் சீராகும் என்பது காலத்தின் கட்டாயம்
தமிழ்நாட்டின் அவலம்...

Thursday, May 19, 2022

குடும்பம்

ஒரு சூப்பர் மார்க்கெட் வாசலில் ஒரு இளம்தம்பதிக்குள் வாக்குவாதம்

மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த கணவனை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் "தம்பி நான் கேட்டா தப்பா நினைக்காதீங்க
ஏன் இப்படி அவங்க கூட சண்டை போடுறீங்க" எனக் கேட்டார்..
"ஒன்னுமில்லைங்க நானும்
கூட வந்து சாமான் வாங்கணுமாம், எனக்கே அசதியா இருக்கு
இப்படிதான் கடுப்பேத்தராங்க" என்று பதிலளிக்க

முதியவர் சிறுபுன்னகையோடு 
"தம்பி முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் மனைவியோடதான் போவேன் இப்போ அவங்க இறந்து 5 மாசமாச்சி
எங்க ரெண்டுபேருக்கும் ஒரே வயசுதான்
ரெண்டு பேருமே ஆசிரியர்கள்
பணி ஓய்வுக்குப் பிறகு ஒன்றாகவே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம்
எங்களோட 3 பிள்ளைங்களும் கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம். 

என் மனைவிக்குத் துர்திஷ்டவசமா  சுகர், பிரஷர் இதெல்லாம் இருந்தது...
தினமும் மருந்து சாப்பிடணும்
அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்
இப்ப அவங்க இல்லை, 
நான் ரொம்ப தனிமையாக உணர்கிறேன் 
என் பகல்கள் ரொம்ப நீளமாயிச்சு, 
இரவுகள் ரொம்பவும் வெறுமையாச்சு அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு ....
நினைவுபடுத்திகிட்டே இருக்கு
அவங்க சாப்பிட்டு முடிக்காத அந்த மருந்துக கூட என்னை கவலைப்படுத்துது

அவங்க நம்பர் இருக்கு,

ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க,

முன்னே படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்

இப்பஅதே படுக்கையில் நடுவில தனியா படுத்திருக்கேன்..
சமையலறைக்குத் தனியா போறேன், 
சமையலுன்னு பேர்ல எதையோ பண்றேன்,

வாய்க்கு ருசியா சமைச்சித் தர அவங்க இல்லை,

கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை,

விழியோரம் நீர் தேங்க இருக்கேன்

அதான் தம்பி
அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும், 
அதிகமாக போற்றணும்,
...இன்னிக்குத் தினமும் என் மனைவியோட கல்லறைக்குப் போறேன்,

எனக்காக எல்லாத்தையும் தயார் பண்ண நீ முன்னுக்கே போயிட்டியாம்மா? 

இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்,

சரி தம்பி நான் வரேன் என்று புறப்பட்ட பெரியவரையே வைத்தகண் வாங்காமல் பார்த்திருந்த அந்த இளம் கணவன்....திடீரென பேரங்காடிக்கு உள்சென்று மனைவியைத் தேட ஆரம்பித்தான்

ஆம் 
நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாவில்லை என கணவனும், 
நம் கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாவில்லை என மனைவியும் ஏன் எண்ணக்கூடாது

புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே நல்லா இருக்கீங்களா என்று கேட்கிறோம் ...இடையில் தும்முகிறோம் 
"I'm sorry sir" என்கிறோம்

பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, 
உடனே "excuse me sir" சொல்றோம்

ஒரு நபரைச் சந்தித்த 10 நிமிடத்தில் அதன்பின் அவரைச் சந்திப்போமா என தெரியாது
ஆனாலும் எவ்வளவு அடக்கமாக மரியாதை தருகிறோம்?...காலம் முழுதும்  வாழ்கிற 
கும்பத்தில் ஒருவரை ஒருவர் பாராட்டுவதே இல்லைதான்

மனைவி சமையலை
கணவன் பிரமாதமுன்னு பாராட்டுறதுமில்லை

அசதியாக வேலை முடிந்து வீடு திரும்பும் கணவரை மனைவி கணிவாக பேசுவதும் இல்லை

ஆக எப்பவும்
ஒருவரை ஒருவர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பிச்சாதான் வாழ்க்கை இனிக்கும்.

Thursday, March 17, 2022

நீ

உந்தன் கேள்வியில் அதிகார சாயல் இருப்பின், என் பதிலில் திமிரின் சாயல் இருக்கும்.