Sunday, April 19, 2015

Pallikudam

தெரிந்து கொள்வோம் நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன் 2G, E , 3G , H ,H+ Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.
1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol. இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும்.
இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.
➖➖➖➖➖
2). "E" இதுவும் 2G(2.5G)
EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும்.
2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது.
இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும்.
இந்த "E" பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
➖➖➖➖➖
3). "3G" இது 3G மொபைல் இன்டர்நெட்
UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 6மணி நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 18மணி நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
4. Symbol "H" இது 3G மொபைல் இன்டர்நெட்
HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.
இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்
இதன் மூலம் நாம் 1GB dataவை 25நிமிட நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 45நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
5). "H+" இதுவும் 3G மொபைல் இன்டர்நெட்
(Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 5-20நிமிடங்களில் டவுன்லோடும்,
1GB dataவை 15-39 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
6). "4G" இச்சேவை 3G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது.
இதன் வேகம் மிகவும் அதிகம்.
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 3நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம்.
அதே 1GB dataவை அனுப்ப 5நிமிடம் மட்டுமே போதும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு முழுவமும் இச்சேவை வரும் என எதிர்பார்க்க படுகிறது.

Friday, April 17, 2015

Pallikudam

செல்ல மகளுக்கு சேமிப்புத் திட்டம்

மத்திய அரசு சமீபத்தில் பெண் குழந்தைகளின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே “செல்வ மகள் சேமிப்பு திட்டம்” ஆகும். மக்கள் மத்தியில் இத்திட்டம் வெளியான நாளில் இருந்தே பலத்த வரவேற்பு மிகுந்து காணப்படுகிறது. இத்திட்டத்தின் கூறுகளை சுருக்கமாய் பார்ப்போம்..,

பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு துங்கலாம்:
பெண் குழந்தைகளுக்காவே பிரத்தியேகமாய் வடிவமைக்கப்பட்ட திட்டம். இத்திட்டம் பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர் அல்லது காப்பாளர்கள் கணக்கு துவங்க இயலும்.

வயது வரம்பு:
பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள பெண் குழந்தைகளைக் கொண்டோர் மட்டுமே கணக்கு துவங்க இயலும். புதிய திட்டம் என்பதால் ஒரு வருடத்திற்கு மட்டும் சிறப்பு சலுகையாக 11 வயது குழந்தைகளுக்கும் கணக்கு துவங்கலாம் என அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

மாதத் தவணை:
மாதத் தவணையாக குறைந்தது 100 ரூபாய் முதல் வருடத்திற்கு குறைந்தபட்ச தொகையை 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாய் 1.5 லட்சம் வரை செலுத்தலாம். செலுத்தப்படும் தொகைக்கு உயர்ந்தபட்சமாய் 9.1 சதவிகித வட்டி எனவும் அறிவித்துள்ளனர்.

முக்கியமான விசயம் இது தான்:
கணக்கு துவங்கிய பெண் குழந்தைக்கு 14 வயது பூர்த்தியான பிறகு தவணை கட்ட வேண்டிய அவசியமில்லை. 18 வயது முடிந்தவுடம் பெண்ணை படிக்க வைப்பதற்காக கணக்கில் உள்ள பணத்தின் 50% எடுத்துக்கொள்ளலாம். திருமணம் நிச்சயம் செய்ததற்கான சான்றிதழை காட்டி முழு பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

சரி, எல்லாத்தையும் சொல்லிடீங்க, இந்த திட்டம் எங்கு கிடைக்கும் ?
அருகில் உள்ள அனைத்து தபால் நிலையம் மற்றும் அரசு வங்கிகளிலும் இந்த திட்டத்தில் எளிதாய் துவங்கிட இயலும். கணக்கு துவங்க செல்லும் போது மறவாமல் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் போன்றவற்றை கொண்டு சென்று சிரமத்தை தவிர்த்திடுங்கள்.

நல்ல திட்டம் மக்களை சென்றடையும் நோக்கிலேயே இந்தப் பதிவு எழுதப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட தகவலில் மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே தபால் நிலையங்களில் இத்திட்டம் குறித்து விரவாக நன்கு கேட்டறிந்து விண்ணப்பித்தல் நல்லது.

Palliludam

MBBS விண்ணப்பம் மே 2ம் வாரம் வினியோகம்...!
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகத்தை, மே மாதம், இரண்டாம் வாரத்தில் துவக்க, மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. புதிய அரசு மருத்துவக் கல்லூரியில், 100 மாணவர்களை சேர்க்கவும் முயற்சி நடக்கிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே மாதம், 10ம் தேதிக்குள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகத்தை, மே மாதம், இரண்டாவது வாரத்தில் துவங்கவும், முதற்கட்ட கலந்தாய்வை, ஜூன், மூன்றாம் வாரம் நடத்தவும், மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.
புது மருத்துவ கல்லூரி?
சென்னை, அரசினர் தோட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரியில், அரசு அறிவித்தபடி, இந்த ஆண்டில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கை நடக்குமா என, கேள்வி எழுகிறது. இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறுகையில், ''கல்லூரி, செயல்பாட்டுக்கு தயாராக உள்ளது. மருத்துவ கவுன்சில் குழு, கடந்த வாரம் ஆய்வு நடத்தி முடித்துள்ளது. விரைவில், அனுமதி கிடைத்து விடும். 100 எம்.பி.பி.எஸ்., இடங்களை சேர்க்கும் வகையில், அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது,'' என்றார்.

Thursday, April 2, 2015

Pallikudam

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேக்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி