Monday, October 22, 2018

கனவு

அப்பா அப்புஅண்ணன்
அங்க நிக்கரீங்க

இங்க
அம்மா, அண்ணன்,
நான், நிக்கறோம்.

ஐயோ!!! அப்பு அண்ணா அப்பாவை பாத்துக்கணா! நான் அண்ணன் அம்மாவை பத்திரமா பாத்துக்கிறேன்.

அப்புஅண்ணா பசிக்கிறதா
மன்னிச்சிடுணா
படையல் பத்தலேயோ!

பாவி உன்னை மறந்தேனோ
பசிக்கு சோறுவைக்காது விட்டோனா!

அப்பா பங்குலதான் பாதி வாங்கி சாப்பிட்டாயோ!
எங்கணா உனை மறந்தேன். எப்புடிணா உனை மறந்தேன்.

பெரியப்பா பெரியம்மா
பாட்டி தாத்தா எங்கணா காணோம்!
ஏதாச்சும் பிரச்சனையா!

அழுகை நிக்கலையே
அப்பாவை பாத்துக்கோ
உனக்காக வந்தவருக்கு
உண்மையா நடந்துக்கோ!

முடிஞ்சவரை பாத்துக்கோ
அம்மா அண்ணன் அக்கா பாப்பானு பல பேர பத்திரமா நான் பாக்க
அப்பாவை பாத்துக்கோ!

படையல போட்டுவேன் பசிக்காது உனக்கினி
பக்குவமா பாத்துக்கோ
உங்க பங்க உங்களுக்கு
வைச்சிடுவோம்
வந்தெடுத்துக்கே!

அப்பாவ பாத்துக்கோ
அதுபோதும் எங்களுக்கு!

நீ இருக்கும் தைரியத்தில்
நித்திரையில் கூட நானு
நினைச்சதில்லை அப்பாவ!

இப்ப ஏன் இப்பிடி வந்து
இந்நிலையில் நிக்கறீங்க!
வெளக்கு எரியலயா வீடே இருட்டியிருக்கா!

அண்ணே மன்னிச்சிடு
அப்பாகிட்ட சொல்லிவிடு
அதற்கான ஏற்பாட்டை
அவசரமா செய்திடுறேன்.

Saturday, October 6, 2018

Pallikudam

வீட்டுக் கடனை விரைவாகக் கட்டி முடிக்க என்ன வழி?
கேள்வி - பதில்
நான் பொதுத்துறை வங்கியொன்றில் 18 ஆண்டு காலத்திற்கு வீட்டுக் கடன் பெற்றுள்ளேன். தற்போது இந்தக் கால அளவை 10 ஆண்டுகளாகக் குறைக்கும்படி வங்கியில் கேட்டேன். ஆனால், அப்படிக் குறைப்பதைவிட ஒவ்வொரு மாதமும் மாதத் தவணையோடு கூடுதல் தொகை செலுத்திவந்தால் கடன் தொகையை விரைவாகக் கட்டிமுடிக்கலாம் என்கிறார்கள். அவர்கள் கூறுவது சரியா?

“அவர்கள் சொன்னது சரியே. வங்கிக் கடனைப் பொறுத்தவரை, நாம் செலுத்தும் மாதத் தவணையில், அந்த மாதத்திற்கான வட்டியும், கடன் தொகையின் (பிரின்சிபிள் அமவுன்ட்) ஒருபகுதியும் மட்டுமே கழியும். கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அளவைக் குறைத்தாலும் இதேபோலத் தான் கழிக்கும் முறை இருக்கும். இதற்குப் பதிலாக, மாதத் தவணையுடன் கூடுதலாகப் பணம் செலுத்தும் யோசனையைக் கூறியுள்ளார்கள். பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை, மாதத்தவணையைவிட கூடுதலாகச் செலுத்தும் தொகை, நேரடியாகக் கடன் தொகையில் கழிக்கப்படும். எனவே, இந்த முறையால் எளிதில் கடனை அடைக்க இயலும். ஆனால், தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை, கூடுதலாகப் பணம் செலுத்துவதற்குக் கட்டணம் வசூலிக்கப்படுவதுண்டு.”