Sunday, August 20, 2023

திரௌபதி யார். மகாபாரத சந்தேகம்


மகாபாரத பாத்திரங்களின் பிறப்புகளை மட்டும் இங்கே பார்ப்போம். கிருஷ்ணன் தவிர முக்கிய பாத்திரங்கள் யாரும் கணவனுக்கும் மனைவிக்கும் பிரசவித்தவர்களாக இல்லை. ஆரம்பத்தில் இருந்தே போவோம் வாருங்கள்.

சத்தியவதி - உபரிசரன் என்ற மன்னனுக்கும் அந்த மன்னனின் விந்தணுவை உண்ட மீனுக்கும் பிறந்தவர்.

வேதவியாசர் - சத்தியவதிக்கும் கணவன் அல்லாத பராச முனிவருக்கும் பிறந்தவர்.

பீஷ்மர் - சாந்தனு மன்னனுக்கும் கங்கை நதிக்கும் பிறந்தவர்.

திருதராஷ்டினன் - வேத வியாசருக்கும் விசித்திரவீரியனின் மனைவியான அம்பிகாவிற்கும் பிறந்தவர்.

பாண்டு - வேத வியாசருக்கும் விசித்திரவீரியனின் மனைவியான அம்பாலிகாவிற்கும் பிறந்தவர்.

விதுரன் - வேதவியாசருக்கும் விசித்திரவீரியனின் மனைவியரின் 

பணிப்பெண்ணிற்கும் பிறந்தவர்.

கௌரவர்கள் - நூறு பானைகளில் கருக்கட்டப்பட்டவர்கள்.

கர்ணன் - சூரியன் என்ற நட்சத்திரத்திற்கும் குந்தி என்ற பெண்ணிற்கும் பிறந்தவர்.

தர்மன் - எம தர்மனுக்கும் பாண்டுவின் மனைவி குந்திக்கும் பிறந்தவர்.

வீமன் - வாயு பகவானான காற்றிற்கும் பாண்டுவின் மனைவியான குந்திக்கும் பிறந்தவர்.

அர்ஜினன் - சுவர்க்கத்தின் அதிபதி இந்திரனுக்கும் பாண்டுவின் மனைவியான குந்திக்கும் பிறந்தவர்.

நகுலன் & சகாதேவன் - அசுவினி குமாரர்களிற்கும் பாண்டுவின் மனைவியான மாதுரிக்கும் பிறந்தவர்கள்.

திரௌபதி & திருஷ்டத்துய்மன் - யாக குண்டத்தின் நெருப்பில் இருந்து உருவானவர்கள்.

துரோணர் -  பரத்வாச முனிவர் அவரது விந்தை கலச குண்டத்தில் விட்டபோது பிறந்தவர்.


Saturday, August 19, 2023

திடம்

 நாம்

சந்திக்கும்...

ஏழ்மையும்,

ஏளனமும்...

நம்மைத்

திடப்படுத்துகின்றன.

Friday, August 11, 2023

ஏமாற்றம்

ஏமாற்றுதலையும்,
நயவஞ்சகத்தையும்
"சாதுர்யம்"
என்கிறார்கள்,

நேர்மையையும்,
நியாயத்தையும்
"ஏமாளித்தனம்"
என்கிறார்கள்.