Saturday, July 29, 2017

Pallikudam

GPF வட்டி குறைப்பு!

       வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை குறைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

        தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்பு நிதிக்கு, ஏப்., 1 முதல், ஜூன், 30 வரை, 7.9 சதவீதம் வட்டி அளிக்கப்பட்டது.

         ஜூலை, 1 முதல், செப்., 30 வரை, வருங்கால வைப்பு நிதிக்கு, 7.8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை பின்பற்றி, தமிழக அரசும், 7.8 சதவீதம் வட்டி நிர்ணயித்து, உத்தரவு பிறப்பித்துள்ளது.

Pallikudam

பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்
     ஒரு தந்தை தனது ஆண் குழந்தைகளை கவனித்துக்கொள்வதை காட்டிலும், பெண் குழந்தையை அதிக அக்கறை எடுத்து கவனித்து கொள்வதற்கான
காரணத்தை பார்க்கலாம்.

பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்
தந்தை என்றால் பெண் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதே போல தான் ஒரு தந்தை தனது ஆண் குழந்தைகளை கவனித்துக்கொள்வதை காட்டிலும், பெண் குழந்தையை அதிக அக்கறை எடுத்து கவனித்துக்கொள்ள வேண்டும். அது ஏன் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...!

தனது தந்தையின் மீது தான் பெண் குழந்தை அதிக ஆர்வம் காட்டுவதாகவும், மனம்விட்டு பேச வேண்டும், தனது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும், சோகங்களை பகிர வேண்டும் என்ற எண்ணம் தாயை விட தந்தையிடம் இடம் தான் அதிகமாக இருக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே ஆண்கள் தனது குழந்தையின் மனநிலையை புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

ஒரு தந்தையால் ஆண் குழந்தைகளின் உள் உணர்வுளை புரிந்து கொள்வதை விட பெண் குழந்தைகளின் உள் உணர்வுகளை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. எனவே தனது குழந்தைக்கு வேண்டியதை செய்ய இவர்களால் முடியும்

என்ன தான் பெண் குழந்தைகள் தன் தாயுடன் நாள் முழுவதையும் கழித்தாலும் கூட, தன் தந்தையை கண்டவுடன் தந்தையிடம் ஒட்டிக்கொள்ளும். பெண் குழந்தைகளுக்கு தன் தந்தையுடன் நேரத்தை செலவழிப்பது மற்றும் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்குமாம்.

பெண் குழந்தைகளால் மற்றவர்களை காட்டிலும், தனது முகபாவனைகள் மற்றும் பேச்சு ஆகியவற்றை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

தாயை காட்டிலும் தந்தையால் தனது பெண் குழந்தைக்கு அதிக வெளியுலக அறிவை கொடுக்க முடியும். தந்தையுடன் செலவிடும் நேரங்களில் பெண் குழந்தைகள் அதிகமாக கற்றுக்கொள்ள முடிகிறது.

பெரும்பான்மையான குழந்தைகள் தங்களது தந்தையின் செல்லப்பிள்ளைகளாக இருப்பார்கள். தாயுடனான தந்தையின் அன்பு ஒரு குழந்தையின் மனநலம் மற்றும் உடல்நலத்தை பேணிக்காக்கிறது.

Pallikudamnews

பாடப்புத்தகம் : உயர்நீதிமன்றம் தடை!

          என்சிஇஆர்டி புத்தகங்களையே வாங்க வேண்டும் என்ற மத்திய கல்வி வாரியத்தின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்(என்சிஇஆர்டி) மற்றும் மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆகியவற்றைக் தவிர்த்து தனியார் வெளியீட்டாளர்களால் தயாரிக்கப்படும் விலையுயர்ந்த பாடப்புத்தகங்களை வாங்கச்சொல்லி மாணவர்களைக் கட்டாய படுத்தக்கூடாது என்று சிபிஎஸ்இ கடந்த ஏப்ரல் மாதம் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள 287 சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் 2014 பிப்ரவரியில், தனியார் பதிப்பகப் புத்தகங்கள் வாங்க அனுமதித்த சிபிஎஸ்இ, இப்போது வாங்கக் கூடாது என்று உத்தரவிட்டிருப்பது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தச் சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று ஜூலை-28 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி சிபிஎஸ்இ-யின் இந்த உத்தரவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டார். பின்னர் அடுத்த கல்வியாண்டு முதல் தனியார் வெளியீட்டாளர்களால் தயாரிக்கப்படும் விலையுயர்ந்த பாடப்புத்தகங்களை வாங்கக் கூடாது எனவும், தனியார் பதிப்பக புத்தகங்களின் தரம், விலை குறித்து சிபிஎஸ்இ விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் ஒரே மனுவில் 287 பேர் வழக்கு தொடர்ந்துள்ளதால் நீதிமன்றத்துக்கு வரும் ஸ்டாம்ப் கட்டண வருவாய் பாதித்துள்ளது. எனவே 287 பள்ளிகளும் தலா 1000 ரூபாய் வீதம் 2 .87 ஆயிரம் ரூபாயை நீதிமன்ற கட்டணமாக செலுத்தி ஒரு வாரத்தில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் சம்மந்தபட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்

Pallikudam

ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் பேட்டி
      சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே யோகா வகுப்பு நடைபெற்று வருகிறது. பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களும் மன அழுத்தம் இன்றி இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் மாணவ-மாணவிகளுக்கு

Pallikudamnews

ஜூலை 31ல் முக்கிய அறிவிப்பு:
மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன்!!!

     திருவண்ணாமலையில் தமிழக அரசு சார்பில் நடக்கும் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில்
கலந்து கொண்ட போது பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
      11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு பயிற்சி வகுப்புக்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் ஜூலை 31 அன்று முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட உள்ளது என்றார்.

Tuesday, July 18, 2017

Pallikudam

அனைத்து வகை அரசு பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு
       தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட, 40 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

Thursday, July 13, 2017

Pallikudam

தசம என்றால் என்ன? பத்து அடிப்படையில் அமைந்தது என்பது பொருள். நாம் எண்ணுவதற்குப் பயன்படும் எண்கள் தசம எண்முறையைத் தோற்றுவிப்பவை. தசம பின்னம் என்றால் என்ன? இப்பின்னம் ஒரு வீதமுறு எண். அலகுகளாகவும் பத்துகளாகவும் நூறுகளாகவும் ஆயிரங்களாகவும் எழுதப்படுவது. எ-டு 1/4 = 0.25. தசம பின்ன வகைகள் யாவை? - 1. முடிவுறு தசமபின்னம் - 0.25, 2. மீள்வருதசமபின்னம் - துல்லியத் தசமமாக எழுத இயலாதது. 5/27 (=0,185 185 185.)

Pallikudam

தசம எண்

எல்லோருக்கும் 3/4 முக்கால் என்று தெரியும். ஆனால் எத்தனை பேருக்கு 1/16 அல்லது 3/64 தெரியும்... எண் கணிதத்தில் முழு எண்கள் மற்றும் தசம எண்களை கண்டு பிடித்ததே தமிழர்கள்தாம். வியப்பாக இருக்குமே. மேலே படிக்கவும்.

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2= அரை
1/4= கால்
1/5= நாளுமா
3/16= மூன்று வீசம்
3/20= மூன்றுமா
1/8= அரைக்கால்
1/10= இருமா
1/16= மாக்காணி (வீசம்)
1/20= ஒருமா
3/64= முக்கால் வீசம்
3/80= முக்கான்
1/32= அரைவீசம்
1/40 = அரைமா
1/64= கால் வீசம்
1/80= காணி
3/320= அரைக்காணி முந்திரி
1/160= அரைக்காணி
1/320= முந்திரி
1/102400= கீழ் முந்திரி
1/2150400= இம்மி
1/2,3654400= மும்மி
1/16,5580800= அணு
1/149,0227200= குணம்
1/745,1136000= பந்தம்
1/4470,6816000= பாகம்
1/31294,7712000= விந்தம்
1/532011,1104000= நாகவிந்தம்
1/7448155,5456000= சிந்தை
1/14,8963110,9120000= கதிர்முனை
1/595,8524436,4800000= குரல்வளைப்பிடி
1/35751,1466188,8000000= வெள்ளம்
1/3575114,6618880,0000000= நுன்மன்ல்
1/2,3238245,3022720,0000000= தேர்த்துகள்

முழு எண்களும் நாம்தான் கண்டு பிடித்திருக்கிறோம். தசம எண்களும் நாம்தான் கண்டு பிடித்திருக்கிறோம்