Sunday, November 23, 2014

Pallikudam

TNPSC : உதவி புவியியலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் - டிச.17 கடைசிநாள்
           தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாடு தொழிற் சார்நிலைப் பணியில் உள்ள உதவி புவியியலாளர் பதவியில்  ஒரு காலி பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.

      புவியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.இப்பதவிக்கான கணினி வழித்தேர்வு பிப்ரவரி 1ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 17ம் தேதி கடைசி நாள். முக்கிய அறிவுரைகள் தொடர்பான விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் காணலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments: