Friday, February 7, 2014

PallikudamTAMS

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம்  9-2-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை சேப்பாக்கம், விருந்தினர்மாளிகை அருகில் நடைபெற உள்ளது. தலைமை திரு. கு. தியாகராஜன் மாநிலத் தலைவர் வரவேற்புரை: மாநிலசெயலாளர் திரு. ஏ. இரமேஷ் வாழ்த்துரை: தோழமை சங்க நிர்வாகிகள் 1. சிதம்பரஹரி, ஆலோசகத் தலைவர் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் 2. க. மீனாட்சி சுந்தரம் பொதுச்செயலாளர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் 3. வ. அண்ணாமலை அகில இந்திய செயலாளர், அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்களின் கூட்டமைப்பு 4. புலவர் ஆ. ஆறுமுகம் மாநிலத் தலைவர் தமிழக தமிழாசிரியர் கழகம் 5. எம். நடராஜன் மாநிலப் பொருளாளர், தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் கழகம் 6. இரா. தாஸ் பொதுச்செயலாளர், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 7. சா. மோசஸ் மாநிலப் பொருளாளர், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 8. கா. சி . இளம்பருதி பொதுச்செயலாளர், தமிழக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்கம் 9. டி. ஆர். ஜான்வெஸ்லி பொதுச்செயலாளர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் 10. மு. இராஜேஷ் மாநில தலைவர், தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை பணியாளர் கழகம் மற்றும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றுகின்றனர் 

கோரிக்கைகள் 

1. தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை  முற்றிலும் இரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமுல்படுத்திட வேண்டும். 

2. 01.06.2006க்கு முன்னர் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தையும் பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். 

3. தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, நேரடி நியமனம் மூலம் பள்ளிக்கல்வித்துறையில் நியமிக்கப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 50… -த்திலிருந்து, அதன் பாதி அளவான 25…-த்தினை பதவி உயர்வு அளித்திட வழிவகை செய்திட வேண்டும். 

4. இடைநிலை, பட்டதாரி & முதுகலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இணையாக ஊதியம் வழங்கிட வேண்டும். 

5. பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 

6. ஆசிரியர் தகுதித் தேர்வை முற்றிலும் ரத்து செய்திட வேண்டும் 

7. அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தினை தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்திட ஆசிரியர்களுக்கு உரிய சுதந்திரத்தினையும், பணிப்பாதுகாப்பினையும் வழங்கிடவேண்டும்.

No comments: