Monday, September 11, 2023

இல்லம் தேடி கல்வி




அடுப்படி பட்டதாரி

மாலை நேரம், முல்லை வயல் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பினாள். வயல் காட்டில் இருந்த விறகுகளை சேகரித்து அதை தன் தலையில் சுமந்து கொண்டு வந்தாள். 

வரும் வழியில் ஒரு வீட்டில் குழந்தைகள் ஆடிப்பாடி விளையாடிக் கொண்டிருந்தார். அதை கண்ட முல்லை, என்ன இங்கு கடந்த வாரம் வரை இந்த குழந்தைகள் கூட்டம் இங்கு இல்லை,ஆனால் சில நாட்களாக ஆங்காங்கே குழந்தைகள் கூடி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், என்று யோசனை செய்தபடிநடந்து சென்றாள். 

அங்கு அவள் வீட்டுக்கு அருகில் ஒரு மரத்தடியில் குழந்தைகள் கூட்டமாய் இருந்ததை கண்டாள். அதில் தனது மகள் பூவிழியும்,இருந்ததை பார்த்த அவள் பூவிழி இங்கு என்ன செய்கிறாய், எனக் கேட்டவாறு பூவிழியை நோக்கி நகர்ந்தாள்.

அங்கு ஒரு பெண், தனது கையில் வண்ண, வண்ண புகைப்படங்கள் வைத்துக் கொண்டு மாணவர்களுக்கு கதை ஒன்றை சொல்லிக் கொடுத்தாள். அங்கு சென்ற முல்லை அந்த பெண்ணிடம், நீங்கள் யார் இங்கு என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டாள். 

அதற்கு அந்த பெண் இது இல்லம் தேடிக் கல்வி திட்டம். இந்த திட்டம் த‌மிழக‌ முதல்வர் அவர்களால் உருவாக்கப்பட்டு,பல உயர் அதிகாரிகள் மற்றும் என்னை போன்ற தன்னார்வலர்களாலும்,செயல் பட்டு வருகிறது. 

இங்கு மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை, ஆடல், பாடல், கதைகள் மூலமாக நாங்கள் சரி செய்து வருகிறோம்.அதுவே எனது பணி. இன்று முதல் இங்கேயும் ஒரு மையம் செயல் படத் தொடங்கியுள்ளது. அதனால் தான் உங்கள் மகளும் இங்கே வந்துள்ளாள்,என அந்த பெண் கூறினாள். 

பின்னர் அந்த பெண்ணின் அனுமதியுடன் சற்று நேரம் அங்கேயே அமர்ந்து குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு, தானும் ஒரு குழந்தையை போல் மெய் மறந்து போனாள்.திடீரென அருகில் உள்ள கோவிலில் மாலை மணி 6 என ஓசை ஒலித்தது. 

துடித்து  எழுந்த முல்லை, நேரம் போனதே தெரியவில்லை, மணி ஆகிவிட்டது. நான் முன்னர் செல்கிறேன், பூவிழி  நீ வகுப்பை முடித்து விட்டு வா என்று கூறியவாறு  விறகை சுமந்து கொண்டு தன் வீட்டில் கொண்டு போய் இறக்கி வைத்தாள். அங்கே இறக்கி வைக்கப்பட்டது விறகு சுமை மட்டுமல்ல, தன்னைப் போல்  தனது குழந்தையின் கல்வியும் எண்ணாகுமோ என்று நினைத்த மனச் சுமையும் தான்.....

கை, கால்களை கழுவிக் கொண்டு, இரவு உணவாக என்ன சமைப்பது என்று நினைத்தபடி சமையலறையில்  நுழைந்தாள், அங்கு அவளும் ஒரு பட்டதாரி தான். 
அவள் வீட்டு அடுப்படியில்......

15 comments:

Anonymous said...

மிகச் சிறப்பு

Anonymous said...

Super

Anonymous said...

Very nice

Anonymous said...

Very nice

Anonymous said...

Very nice

Anonymous said...

Super

Anonymous said...

மிகவும் சிறப்பு

Anonymous said...

Very nice

Anonymous said...

Very nice👍

Anonymous said...

Super .....

Anonymous said...

Super sir

Anonymous said...

Super sir

Anonymous said...

Yes , correct sir

Anonymous said...

Supper sir

Anonymous said...

Super Sir 👍