Monday, September 18, 2023

யானை முகம் வந்த கதை

 


யானை முகத்தோர் ஐந்து கரத்தோர் விக்னேஸ்வரர் மூஷிக வானர் என்று பல பெயர்களால் வழிப்படும் விநாயகர்  ஹிந்துக்களின் முழு
 முதல் கடவுள்.

வினை தீர்க்கும் விநாயகர் எப்படி பிறந்தார் அவருக்கு மனிதர்களில் முகம் இல்லாமல் ஏன் யானை முகம் உள்ளது என்று புராணக்கதை மூலம் அறியலாம்.

விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. தேவர்களுக்கு இடையூறு செய்த அரக்கர்களை ஒடுக்க பரமசிவன் பார்வதியால் விநாயகர் யானை முகத்தோடு மனித உடலோடு படைக்கப்பட்டார் அரக்கன் கஜமுக அசுரனை அழித்து தேவர்களை மீட்டார்.

கைலாயத்தில் ஒரு நாள் பார்வதி தேவி நீராடுவதற்காக செல்லும் பொழுது நிகழ்ந்த உரையாடலை காண்போம்.

பார்வதி தேவி நீராடும் சமயம் சிவபெருமான் பார்வதி தேவியை காண வருகிறார், சிவனைக் கண்ட பார்வதி சினம் கொண்டார்.

மறுநாள் பார்வதி தேவி தன் மீது உள்ள சந்தனத்தால் அழகிய உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்தார். மீண்டும் சிவபெருமான் வந்தார் அங்கு நிற்கும் பாலகன் யாராக இருப்பான் என்று எண்ணியவாறு உள்ளே செல்ல முயன்றார்.

கோபம் அடைந்த சிவன் அங்குள்ள காவலர்களை அழைத்து பாலகனை அங்கிருந்து அகற்றுங்கள் என்று கூறி சென்று விட்டார். தோல்வியுற்ற வீரர்கள் சிவனிடம் முறையிட்டனர் இதை அறிந்த சிவபெருமான் விநாயகரை அங்கிருந்த சூலாயத்தால் அவர் தலையை கொய்தார்.

விநாயகரின் சத்தம் கேட்டு அங்கு வந்த பார்வதி பிள்ளையாருக்கு தலை இல்லாததை பார்த்து கோபமடைந்தார் தான் செய்த பிள்ளையாரை சிவனே சிதைத்ததை அறிந்து அவர் காளியாக மாறி உருவம் எடுத்து வெளியேறி அவரது கண்களில் பட்ட சகலத்தையும் அழிக்க தொடங்கினார்.

அங்கிருந்த தேவர்கள் அனைவரும் சிவனிடம் முறையிட்டனர், அதாவது பார்வதி தேவி காளியாக உருவம் கொண்டு ஆக்ரோஷத்துடன் இருக்கிறார் என்றனர், சிவன் சமாதானம் செய்ய முடிவெடுத்தார்.

சிவபெருமான் பிற தேவர்களை அழைத்து வடதிசையில் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவ ராசியில் தலையை வெட்டி எடுத்து வர ஆணையிட்டார், கூறியவாறு வட திசையில் முதலில் தென்பட்ட யானையை கொண்டு வந்தனர்.

யானையின் தலையை வெட்டி எடுத்து சிவனிடம் கொடுத்தனர் யானையின் தலையை வெட்டி எடுத்து தலையை வெட்டப்பட்டு கிடந்த பிள்ளையாரின் முகத்தில் வைத்து உயிர் கொடுத்தார் சிவபெருமான்.

பார்வதிதேவி சமாதானம் கொண்டு விநாயகரை கட்டி அணைத்தார், அதன் பிறகு சிவபெருமான் விநாயகருக்கு கணேசன் என்று பெயர் சூட்டினார், மற்றும் சிவபெருமான் கணேசனை தேவனுக்கு தலைவராக நியமித்தார் என்று நாரத புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜமுக சூரனை அழிக்க விநாயகர் படைத்துள்ளனர் அதோடு முழு முதல் கடவுளாக விளங்குவார் எங்கு பூஜை செய்தாலும் முதல் பூஜை கணபதிக்கு தான் என்று வரம் கொடுத்தார்.

No comments: