Sunday, August 20, 2023

திரௌபதி யார். மகாபாரத சந்தேகம்


மகாபாரத பாத்திரங்களின் பிறப்புகளை மட்டும் இங்கே பார்ப்போம். கிருஷ்ணன் தவிர முக்கிய பாத்திரங்கள் யாரும் கணவனுக்கும் மனைவிக்கும் பிரசவித்தவர்களாக இல்லை. ஆரம்பத்தில் இருந்தே போவோம் வாருங்கள்.

சத்தியவதி - உபரிசரன் என்ற மன்னனுக்கும் அந்த மன்னனின் விந்தணுவை உண்ட மீனுக்கும் பிறந்தவர்.

வேதவியாசர் - சத்தியவதிக்கும் கணவன் அல்லாத பராச முனிவருக்கும் பிறந்தவர்.

பீஷ்மர் - சாந்தனு மன்னனுக்கும் கங்கை நதிக்கும் பிறந்தவர்.

திருதராஷ்டினன் - வேத வியாசருக்கும் விசித்திரவீரியனின் மனைவியான அம்பிகாவிற்கும் பிறந்தவர்.

பாண்டு - வேத வியாசருக்கும் விசித்திரவீரியனின் மனைவியான அம்பாலிகாவிற்கும் பிறந்தவர்.

விதுரன் - வேதவியாசருக்கும் விசித்திரவீரியனின் மனைவியரின் 

பணிப்பெண்ணிற்கும் பிறந்தவர்.

கௌரவர்கள் - நூறு பானைகளில் கருக்கட்டப்பட்டவர்கள்.

கர்ணன் - சூரியன் என்ற நட்சத்திரத்திற்கும் குந்தி என்ற பெண்ணிற்கும் பிறந்தவர்.

தர்மன் - எம தர்மனுக்கும் பாண்டுவின் மனைவி குந்திக்கும் பிறந்தவர்.

வீமன் - வாயு பகவானான காற்றிற்கும் பாண்டுவின் மனைவியான குந்திக்கும் பிறந்தவர்.

அர்ஜினன் - சுவர்க்கத்தின் அதிபதி இந்திரனுக்கும் பாண்டுவின் மனைவியான குந்திக்கும் பிறந்தவர்.

நகுலன் & சகாதேவன் - அசுவினி குமாரர்களிற்கும் பாண்டுவின் மனைவியான மாதுரிக்கும் பிறந்தவர்கள்.

திரௌபதி & திருஷ்டத்துய்மன் - யாக குண்டத்தின் நெருப்பில் இருந்து உருவானவர்கள்.

துரோணர் -  பரத்வாச முனிவர் அவரது விந்தை கலச குண்டத்தில் விட்டபோது பிறந்தவர்.


No comments: