Wednesday, June 7, 2017

Ra-Pallikudam

பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு.அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்எண் மற்றும் மாணவர் வருகை நாட்களைபள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுஅரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்துவேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்குஇதுபோன்ற விபரங்கள் அடங்கியமாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

புதிய மாற்று சான்றிதழில், 18 விதமான விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.
முதல்முறையாகஆண்பெண் இனத்துடன்மூன்றாம் பாலினம் சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர்பெற்றோர்பாதுகாவலர் பெயர்படித்த பள்ளிமுந்தைய வகுப்பு போன்றபல விபரங்கள் பதிவு செய்யப்படஉள்ளன. அதேபோலஏதாவது சலுகை கட்டணத்தில் சேர்ந்தவராகல்வி உதவித் தொகை பெற்றவரா என்றஅம்சமும் சேர்க்கப்பட்டுஉள்ளது. மேலும்மாணவரின் ஆதார் எண்அந்த மாணவன் கடைசியாக படித்த வகுப்பில்பள்ளிக்கு வருகை தந்த நாட்களின் சதவீதத்தை குறிப்பிடவும் உத்தர
விடப்பட்டுள்ளது. இதன்மூலம்குறைந்த நாட்கள் வந்திருந்தால்அந்த மாணவர்களுக்குமற்ற பள்ளியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாகஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments: