Sunday, November 8, 2015

pallikudam

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அடிப்படை கணினி பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. மூன்று நாட்களுக்கு நடைபெறும் பயிற்சியில் இரண்டு நாட்கள் கணினி சார்ந்த பயிற்சியும், ஒரு நாள் தமிழ் வளர்ச்சி சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. ஐ.சி.டி (தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் ) குறித்த முக்கியத்துவத்தை உணர்ந்து இப்பயிற்சியானது திரு. ஆசிர் ஜூலியஸ், திருமதி. உமா மகேஸ்வரி, திருமதி. சித்ரா திரு அசோக் மற்றும் பலர் இணைந்து சரியாக திட்டமிட்டு சிறப்பான முறையில் SCERT – ஆல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பயிற்சி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு Sri Balaji Chokkalingam Engineering College வளாகத்தில் 04.11.2015 முதல் 06.11.2015 வரை நடைபெற்ற Basics of ICT வகுப்பு நடைபெற்றது. இதில் 50 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி கருத்தாளர்களாக சங்கரநாராயணன் சத்தியவேல் மற்றும் விஜயகுமார் ஆகியோர்
கலந்துகொண்டனர். பயிற்சி ஒருங்கிணைப்பாளராக கமலி மேடம் அவர்கள் கலந்துகொண்டனர்.
முதல் நாளில் துவக்க விழா கீழ்பென்னத்தூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் முதல்வர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தினார். SBC Eng college முதல்வர் வாழ்த்துரை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் திருமதி. கமலி அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
அதை தொடர்ந்து பயிற்சியில் ஆசிரியர்களுக்கு கணினியை எவ்வாறு இணைப்பது எனவும், Auto Collage மூலம் படங்களை எவ்வாறு Collage செய்வது எனவும், NHM Writer பற்றியும் அவற்றின் சிறப்புகள் பற்றியும், NHM மூலம் எவ்வாறு டைப் செய்வது எனவும், டைப் செய்ததை எவ்வாறு Convert செய்வது எனவும், Google input tools பற்றியும், PhotoStory யை பயன்படுத்தி video தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு Software பற்றியும் பயிற்சி அளித்தவுடன் பயிற்சி செய்ய நேரம் ஒத்துக்கப்பட்டதால் சந்தேகமின்றி செய்து கற்றுக்கொண்டனர். முதல் நாள் முடிவில் Assingment கொடுக்கப்பட்டது.
இரண்டாம் நாளில் முதல் நாள் கற்றதை நினைவு கூறுவதற்காக கண்களை மூடி நிற்க செய்து முதல் நாள் கற்றதை நினைவுபடுத்தப்பட்டது.முதல் நாள் கொடுக்கப்பட்ட Assingment யை அனைவரும் செய்து வந்து அசத்தினர். பிறகு Hot Potato, Mousemischief ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது.
 மூன்றாவது நாளில் TVA குழுமம் சார்பில் தமிழ்விக்கிபிடியா தொடர்பான பயிற்சியை என்னால் அனைவருக்கும்  தமிழ் விக்கிபீடியாவில் கணக்கு தொடங்குதல் மற்றும் TVA குழுமம் சார்பில் தமிழ்விக்கிபிடியா பங்களிப்பு குறித்து கருத்துகள் வழங்கப்பட்டது மேலும் திரு.கி. மூர்த்தி அவர்கள் கட்டுரை எழுதுதல் குறித்து பயிற்சியளித்தார். கருத்தாளர் விஜயகுமார் அவர்கள் தாங்கள் எழுதிய கட்டுரைகள் படங்களை பதிவேற்றம் செய்வது குறித்து விளக்கினார். ஆசிர் சார் whatsapp  video play செய்யப்பட்டது. பயிற்சியில் கற்றவற்றை scert feedback link இல் எல்லோரும் தங்கள் பயற்சி அனுபவங்களை பதிவு செய்தனர்.இதன் மூலம் இப்பயிற்சியின் சிறப்பை அறியமுடிந்தது.
இறுதியாக பயற்சி நிறைவு விழாவில் scert பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் diet துணை முதல்வர் கலந்து கொண்டு பயிற்சியில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் திருவண்ணாமலை மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திருமதி கமலி நன்றிகள் கூற பயிற்சி இனிதே நிறைவு பெற்றது.

                           நன்றிகள் SCERT AND ICT TEAM.

No comments: