Monday, December 8, 2014

Pallikudam

ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை'ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
     'தமிழகத்தில் துவக்கப்பள்ளி முதல் கல்லுாரி வரையிலான ஆசிரியர்களுக்குபாதுகாப்பு இல்லை'' என துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கூறினார்.

         பழநி தொப்பம்பட்டியில் தமிழகஆசிரியர் கூட்டணி சங்க மாநாடு நடந்தது.இதில் பங்கேற்ற துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்திய பொது செயலாளர் அண்ணாமலை கூறியதாவது:

          தமிழகத்தில் தொடக்கபள்ளி முதல் கல்லுாரி வரை ஆசிரியர்களுக்கு மாணவர், பெற்றோர், அரசிடமிருந்து எவ்வித பாதுகாப்பும் இல்லை. ஆசிரியர்கள் மீது பொய்யான புகார் அளிக்கப்படுகிறது. அதன்மீது போதிய விசாரணை இல்லாமல்அரசு நடவடிக்கை எடுக்கிறது.தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்கும் உரிமை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. அரசு அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்தியஅரசு திருக்குறளையும், பாரதியார் பிறந்த நாளையும் சிறப்பு செய்துள்ளதற்கு நன்றியை தெரிவிக்கிறோம்,' என்றார்.

தீர்மானம்:

ஆசிரியர்களை முறையின்றி பணிஇடமாறுதல் செய்வதை நிறுத்தவேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு முறையான ஊதியம் வழங்கவேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

No comments: