Friday, December 12, 2014

Pallikudam

சியோமி ஃபோன்களை இந்தியாவில் விற்க டெல்லி நீதிமன்றம் தடை
எரிக்சன் நிறுவனத்தின் தொழில்நுட்பம் கொண்ட சியோமி செல்ஃபோன்களை இந்தியாவில் விற்க டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஃப்ளிப்கார்ட் வலைதளம் மூலமாக இந்த ஃபோன்களை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.எரிக்சன் நிறுவனத்தின் தொழில் நுட்பத்தை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதான புகாரின் பேரில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எரிக்சன் நிறுவன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சியோமி ஃபோன்கள் இந்தியாவுக்குள் இறக்குமதி ஆகாதவாறு பார்த்துக்கொள்ளுமாறு சுங்கத் துறை அதிகாரிகளுக்கு நீதிபதி ஜி.பி.மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவில் இதுவரை விற்கப்பட்ட சியோமி ஃபோன்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைத்த வருவாய் குறித்த விவரங்களை அளிக்குமாறும் சியோமி, மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நீதிபதி மிட்டல் உத்தரவிட்டார்.முன்னதாக ஏஎம்ஆர், எட்ஜ், 3ஜி ஆகிய 3 தொழில்நுட்பங்கள் தொடர்பாக தான் பெற்றிருந்த 8 காப்புரிமைகளை சியோமி தனது அனுமதியின்றி பயன்படுத்தியதாக எரிக்சன் நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

No comments: