Saturday, October 6, 2018

Pallikudam

வீட்டுக் கடனை விரைவாகக் கட்டி முடிக்க என்ன வழி?
கேள்வி - பதில்
நான் பொதுத்துறை வங்கியொன்றில் 18 ஆண்டு காலத்திற்கு வீட்டுக் கடன் பெற்றுள்ளேன். தற்போது இந்தக் கால அளவை 10 ஆண்டுகளாகக் குறைக்கும்படி வங்கியில் கேட்டேன். ஆனால், அப்படிக் குறைப்பதைவிட ஒவ்வொரு மாதமும் மாதத் தவணையோடு கூடுதல் தொகை செலுத்திவந்தால் கடன் தொகையை விரைவாகக் கட்டிமுடிக்கலாம் என்கிறார்கள். அவர்கள் கூறுவது சரியா?

“அவர்கள் சொன்னது சரியே. வங்கிக் கடனைப் பொறுத்தவரை, நாம் செலுத்தும் மாதத் தவணையில், அந்த மாதத்திற்கான வட்டியும், கடன் தொகையின் (பிரின்சிபிள் அமவுன்ட்) ஒருபகுதியும் மட்டுமே கழியும். கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அளவைக் குறைத்தாலும் இதேபோலத் தான் கழிக்கும் முறை இருக்கும். இதற்குப் பதிலாக, மாதத் தவணையுடன் கூடுதலாகப் பணம் செலுத்தும் யோசனையைக் கூறியுள்ளார்கள். பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை, மாதத்தவணையைவிட கூடுதலாகச் செலுத்தும் தொகை, நேரடியாகக் கடன் தொகையில் கழிக்கப்படும். எனவே, இந்த முறையால் எளிதில் கடனை அடைக்க இயலும். ஆனால், தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை, கூடுதலாகப் பணம் செலுத்துவதற்குக் கட்டணம் வசூலிக்கப்படுவதுண்டு.”

No comments: