Monday, October 22, 2018

கனவு

அப்பா அப்புஅண்ணன்
அங்க நிக்கரீங்க

இங்க
அம்மா, அண்ணன்,
நான், நிக்கறோம்.

ஐயோ!!! அப்பு அண்ணா அப்பாவை பாத்துக்கணா! நான் அண்ணன் அம்மாவை பத்திரமா பாத்துக்கிறேன்.

அப்புஅண்ணா பசிக்கிறதா
மன்னிச்சிடுணா
படையல் பத்தலேயோ!

பாவி உன்னை மறந்தேனோ
பசிக்கு சோறுவைக்காது விட்டோனா!

அப்பா பங்குலதான் பாதி வாங்கி சாப்பிட்டாயோ!
எங்கணா உனை மறந்தேன். எப்புடிணா உனை மறந்தேன்.

பெரியப்பா பெரியம்மா
பாட்டி தாத்தா எங்கணா காணோம்!
ஏதாச்சும் பிரச்சனையா!

அழுகை நிக்கலையே
அப்பாவை பாத்துக்கோ
உனக்காக வந்தவருக்கு
உண்மையா நடந்துக்கோ!

முடிஞ்சவரை பாத்துக்கோ
அம்மா அண்ணன் அக்கா பாப்பானு பல பேர பத்திரமா நான் பாக்க
அப்பாவை பாத்துக்கோ!

படையல போட்டுவேன் பசிக்காது உனக்கினி
பக்குவமா பாத்துக்கோ
உங்க பங்க உங்களுக்கு
வைச்சிடுவோம்
வந்தெடுத்துக்கே!

அப்பாவ பாத்துக்கோ
அதுபோதும் எங்களுக்கு!

நீ இருக்கும் தைரியத்தில்
நித்திரையில் கூட நானு
நினைச்சதில்லை அப்பாவ!

இப்ப ஏன் இப்பிடி வந்து
இந்நிலையில் நிக்கறீங்க!
வெளக்கு எரியலயா வீடே இருட்டியிருக்கா!

அண்ணே மன்னிச்சிடு
அப்பாகிட்ட சொல்லிவிடு
அதற்கான ஏற்பாட்டை
அவசரமா செய்திடுறேன்.

No comments: