Monday, August 17, 2015

pallikudam

கணிதம், அறிவியல் பாடங்களுக்கு 1,400 பள்ளிகளில் ஆசிரியர் இல்லை

        தமிழகம் முழுவதும், 1,500 நடுநிலைப் பள்ளிகளில்கணிதம்,ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாட ஆசிரியர்களுக்குபற்றாக்குறைஏற்பட்டு உள்ளது. 'இந்த காலியிடங்களுக்குபட்டதாரிகள் அல்லதுஉபரி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்எனஆசிரியர்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

           தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளிகள் உள்ளனஇவற்றில், 7,500 பள்ளிகள் அரசு கட்டுப்பாட்டில்உள்ளவைஅதிலும், 6,100 பள்ளிகள்மத்திய அரசின்அனைவருக்கும்கல்வி இயக்ககமான - எஸ்.எஸ்.., திட்டத்தில்தொடக்க பள்ளியாகஇருந்துநடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டவை.

50 ஆண்டுக்கு முன்...:
இந்த பள்ளிகளுக்குமத்திய அரசு நிதியுதவியால், 6, 7 மற்றும் 8வகுப்புகளுக்குகணிதம்ஆங்கிலம் மற்றும் அறிவியல்பாடங்களுக்குதலா ஒரு பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டுஉள்ளார்மீதமுள்ள, 1,400 பள்ளிகள், 25 முதல், 50 ஆண்டுகளுக்குமுன்நேரடியாக நடுநிலைப் பள்ளிகளாகத் துவங்கப்பட்டதால்,மத்திய அரசு உதவித் திட்டத்தில் இடம் பெறவில்லை.

பற்றாக்குறை:
நடுநிலைப் பள்ளிகளுக்கு, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்;வகுப்புக்கு ஒரு ஆசிரியர்கணிதம்,
ஆங்கிலம் மற்றும் அறிவியலுக்குதலா ஒரு பட்டதாரி ஆசிரியர்கண்டிப்பாக இருக்க வேண்டும்ஆனால்எஸ்.எஸ்.., உதவிஇல்லாத பள்ளிகளில்இந்த விதிகள்கடைபிடிக்கப்படாமல்,ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறதுஒன்று முதல் 8ம்வகுப்பு வரையிலான வகுப்புகளுக்குஆசிரியர் பயிற்சி டிப்ளமோமுடித்தஇரு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

சில பள்ளிகளில்பட்டதாரி ஆசிரியர்கள் இருந்தாலும்ஒரே பாடத்தைமுடித்தவர்களாக உள்ளதால்ஆசிரியர்களை நியமித்தும்பலனில்லைஅதனால்கணிதம் முடித்தவர்கள்தங்களுக்கு தெரிந்தஆங்கிலத்தையும்அறிவியலையும் கற்றுக் கொடுக்கின்றனர்சிலபள்ளிகளில்மூன்றுமேதமிழ் ஆசிரியர்களாகவும்சில இடங்களில்,மூன்று பேருமே வரலாறு

ஆசிரியர்களாகவும் உள்ளதால், 'குண்டக்கமண்டக்கஎன்றநிலையில்பாடம் எடுக்கப்படுகிறது.

கலந்தாய்வு:
இப்பள்ளி மாணவர்கள், 9ம் வகுப்பு படிக்க வேறு பள்ளிக்கு மாறும்போதுகணிதம்ஆங்கிலம் மற்றும் அறிவியல் போன்ற முக்கியப்பாடங்களின்
அரிச்சுவடி கூடத் தெரியாமல் தவிக்கின்றனர்இதுகுறித்து,அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பணி நிரவல் அல்லது கலந்தாய்வுமூலம்தீர்வு காண முயற்சிக்கிறோம்என்றனர்.

இதுதொடர்பாகதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற கழகதலைவர் சிங்காரவேல் கூறும்போது, ''எஸ்.எஸ்.., திட்டத்தில் வராதபள்ளிகளிலும்ஒவ்வொரு பாடங்களுக்கும் தனித்தனி ஆசிரியர்;வகுப்புக்கு தலா ஒரு ஆசிரியர் எனநியமிக்க வேண்டும்அப்போதுதான்உபரி ஆசிரியர் பிரச்னை தீருவதோடுமாணவர்களும்பாதிக்கப்படாத சூழல் ஏற்படும்,'' என்றார்.

நமது நிருபர் -thanks padasalai

No comments: