Monday, March 16, 2015

Pallikudam

திண்டிவனத்தில், ஆசிரியர்களின் சொந்த செலவில் ஏற்பாடு செய்த ஆங்கில உச்சரிப்பு சார்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி
அனைத்து ஆசிரியர் நண்பர்களுக்கும் பணிவான வணக்கம். எங்கோ ஒரு மூலையில், யாரோ ஒருவர் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த ஆசிரியர்களையும் குறைகூறும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் இதுபோன்ற ஆசிரியர்களும் பலர் உள்ளனர் என்று.

திண்டிவனம் அருகில் உள்ள ஒன்றியங்களைச் சேர்ந்த நண்பர்கள் திரு.கலைவாணன், திரு.ராஜேஷ், திரு.மூர்த்தி ஆகியோர் தங்கள் ஒன்றியத்தை சேர்ந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் தங்களுடைய சொந்த செலவில் 21.02.2015 சனிக்கிழமை Teaching of phonetic method ல் உள்ள சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளும் விதமாகவும், மற்ற ஆசிரியர்கள் பயன்படுத்திய வரும் சிறப்பு உக்திகளை பரிமாரிக்கொள்ளும் விதமாகவும் கலந்துரையாடல் கூட்டம் ராஜேஸ்வரி முருகன் மகாலில் நடைபெற்றது. இச்செய்தி அறிந்த விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திரு.சீதாராமன் அவர்கள் அக்கூட்டதிற்கு வந்து சிறப்புரை ஆற்றியதோடு, விடுமுறை தினம் என்றும் பாராமல் கலந்துகொண்ட ஆசிரியர்களையும், சுய ஆர்வத்துடன் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அனைத்து செலவுகளையும் செய்து வெற்றிகரமாக நடத்திய நண்பர்களின் முயற்சியையும் பாராட்டினார். நாமும் அந்த ஆசிரிய நண்பர்களை பாராட்டுவதோடு அல்லாமல் அனைவருக்கும் இதை தெரியபடுத்துவோம். ஆசிரியர் சமூகத்திற்கு மரியாதை சேர்ப்போம்.

No comments: