Monday, March 23, 2015

pallikudam

ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆண்டுவிழா 

       வல்லம் ஒன்றியம் , இராஜம்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி யில் ஆண்டுவிழா நடைபெற்றது.
 பள்ளி தலைமை ஆசிரியர்  இரா.அருள்மொழி தலைமை வகித்தார் .
கிராம கல்வி குழு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் திரு.மு.ரவி முன்னிலை வகித்தார் .கணித பட்டதாரி ஆசிரியர் சங்கரநாராயணன் அனைவரையும் வரவேற்றார்.
    வல்லம் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் செல்வி இரா.உமாராணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
ஆசிரியர் நமச்சிவாயம் ஆண்டறிக்கை வாசித்தார்.
 பள்ளி மாணவர்கள் நடனம் நாடகம் பட்டிமன்றம் வில்லுபாட்டு நிகழ்ச்சிகள் நடத்தினார்கள்.
 விழாவில் ஆசிரியர்கள் ஷாலினி ரேவதி சபிதா
    குறிஞ்சிபை  தலைமை ஆசிரியர் பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இறுதியாக முத்துக்குமரன் நன்றி கூறினார்.

No comments: