Wednesday, March 21, 2018

Pallikudam

ஆஸ்திரேலிய பள்ளிகளில், அந்த நாட்டு மாணவர்களை விட, அங்கு குடிபெயர்ந்துள்ள, இந்திய, சீன, பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த மாணவர்கள், சிறப்பாக படிப்பது தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில், இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் உட்பட, பல ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் குடியேறியுள்ளனர். ஆஸ்திரேலிய குடியுரிமையும் பெற்றுள்ளனர். இவர்களின் குழந்தைகள், அங்குள்ள பள்ளிகளில் படிக்கின்றனர். ஆஸ்திரேலிய மாணவர்களை விட, இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த மாணவர்கள், சிறப்பாக படிப்பதாக, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகின், 72 நாடுகளில், வெளிநாடுகளிலிருந்து குடியேறியவர்களின் எழுத்தறிவு, படிப்பறிவு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிங்கப்பூரில்தான், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள், கல்வியறிவில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு அடுத்த இடங்களை, மக்காவ், சீனா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. இந்த பட்டியலில், ஏழாவது இடத்தை, ஆஸ்திரேலியா பிடித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில், அந்த நாட்டினரை விட, இந்திய, சீனா, பிலிப்பைலன்ஸ் நாடுகளை சேர்ந்த மாணவர்கள், சிறப்பாக படிப்பதும் தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள இந்தியர்கள், கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

No comments: