Tuesday, November 29, 2016

Pallikudamnews

தமிழகத்தை மிரட்டும் கனமழை.
தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது. அது, 48 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வடமேற்கு திசை நோக்கி நகரும். இதன் காரணமாக டிசம்பர் 1 முதல் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்று கூறியுள்ளார். மேலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். தென்மேற்கு காற்று திசைமாறிய காரணத்தால் வடகிழக்கு பருவமழை தாமதமானதாக குறிப்பிட்ட அவர், மீனவர்கள் யாரும் வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

No comments: