Thursday, April 7, 2016

pallikudamnews

MBBS / BDS படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை இருக்காது: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு.

         கிராமப்புற மாணவர்கள் பாதிக் கப்படுவார்கள் என்பதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு ஆன்லைன் மூலம் விண் ணப்பிக்கும் முறை கொண்டுவரப் படாது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
          மாணவர்கள் வரவேற்புதமிழகத்தில் பொறியியல், மருத்துவம், கால்நடை மருத் துவத்துக்கான விண்ணப்பங் களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கும் முறை இருந்து வந்தது


. சோதனை முயற்சியாகபொறியியல் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கும் முறையுடன், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையும் கொண்டுவரப்பட்டது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து கடந்த ஆண்டு கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும்முறை அமல்படுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. ஏப்ரல் 15-ம் தேதி முதல் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இவைதவிர விவசாயம், தோட்டக்கலை, வனவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப் பிக்கும் முறை அமலில் இருக்கிறது. ஆனால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பு களுக்கு மட்டும் இன்னும் விண்ணப்பங்களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கும் முறையேஅமலில் இருக்கிறது. சோதனை முயற்சியாகக்கூட ஆன்லைன் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் முறைகொண்டுவரப்படவில்லை.

விண்ணப்பிப்பது சிரமம்

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டுவரப்படாது. ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையால் நிறைய பிரச்சினை களும், குளறுபடிகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள் எளி தாக ஆன்லைனில் விண்ணப் பித்து விடுவார்கள். கிராமப் புறங்களில் வசிக்கும் மாணவர் கள் ஆன்லைனில் விண்ணப் பிப்பது சிரமம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை கொண்டு வந்தால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார் கள். அதனால்தான் மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை கொண்டுவரவில்லை” என்றார்.

No comments: