Friday, January 8, 2016

Pallikudamnews

பி.எட். படிப்பு விண்ணப்பிக்கும் தேதி: சாஸ்த்ரா பல்கலை.யில் நீட்டிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் பி.எட். தொலைநிலைக் கல்விக்கான விண்ணப்பங்களை ஜன. 18-ம் தேதி வரை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் பி.எட். தொலைநிலைக் கல்விக்கான நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச. 31-ம் தேதி வரை கொடுக்கலாம் என்று இருந்த நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் ஜன. 18-ஆம் தேதி வரை அளிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இணையதளமானwww.sastra.edu -ல் தெரிந்துகொள்ளலாம்.

No comments: