Monday, September 14, 2015

Pallikudamnews

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகியவற்றை இன்று முதல் வாக்குச்சாவடி மையத்திலேயே மேற்கொள்ளலாம்.

வரும் ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது நிரம்பும் வாக்காளர்கள் தங்களது பெயர்களை படிவம் 6ஐ இந்த அலுவலகங்களில் நிரப்பிக் கொடுத்து சேர்த்துக் கொள்ளலாம். பட்டியலில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ள படிவம் 8, தொகுதிக்குள் இடம் மாற்றத்துக்கு படிவம் 8ஏ, இறந்தவரின் பெயரை நீக்க படிவம் 7 ஆகியவற்றை அளிக்க வேண்டும்.

இந்தப் பணி வரும் செப். 15 முதல் அக். 14 வரை நடைபெறும். மேலும், செப். 20 மற்றும் அக்டோபர் 4 ஆகிய இரு நாள்கள் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும். இவற்றிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ளலாம்.  இணையதளத்திலும் இதே திருத்தப் பணிகளை மேற்கொள்ளலாம்.

No comments: