Sunday, May 10, 2015

Pallikudam

அரசுப்பள்ளி ஆசிரியர் உலகளாவிய சாதனை
       27.04.2015 முதல் 02.05.2015 வரை  மைக்ரோசாப்ட்     நிறுவனம்  நடத்திய கல்வி கருத்தரங்கில் MIELA விருது பெற்று ஆசிரியர்கள் சார்பில் சத்தியமங்கலம் அரசு பள்ளி ஆசிரியர் திரு.ஸ்ரீ.திலிப் கலந்துகொண்டார் .மேற்கு வங்க கல்லூரி பேராசிரியர் MIE சார்பில் 5 ஆசிரியர்களும்  மாணவ பிரதிநிதிகளில் 30 மாண்வர்கள் உலக நாடுகள் அனைத்திலிருந்தும் அழைக்கப்பெற்றதில் இந்தியாவிலிருந்து ஆறு மாணவர்கள் என மொத்தம் 13  நபர்கள் அமெரிக்கா சென்று .கருத்தரங்கில்  87  நாடுகளிலிருந்து  கலந்து கொண்ட 300 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களில் இந்தியாவிலிருந்து அதிகப்படியான  நபர்கள் கலந்து கொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட  87  நாடுகளில்  300 ஆசிரியர்களில் ஒரே அரசு பள்ளியை சார்ந்த ஆசிரியர் சத்தியமங்கலம் ஆசிரியர் இவர் அக்கருத்தரங்கிள் முதல்  நாள் மைக்ரோசாப்ட்   நிறுவனம்  நடத்திய போட்டித் தேர்வில் 100க்கு 74 மதிப்பெண் பெற்று MCE (Microsoft Certified Educator) ஆக அறிவிக்கப்பட்டார்.இக்கருத்தரங்கம்  நடத்தப்பெற்றதன்  நோக்கம் பல்வேறு  நாடுகளில் கணினியக் கொண்டு புதுமையான முறைகளில் கற்ப்பிக்கும் ஆசிரியர்கள் தங்களுக்குள் அந்த புதுமைகளை பகிர்ந்துகொள்வதாகும்.

இந்த கருத்து பரிமாற்றத்தின்பொழுது அவரவர் செயல்பாடுகளை  விளக்க    நடந்த கருத்தரங்கத்தின்பொழுது  நமது அரசு பள்ளி ஆசிரியர்  நமது பாரம்பரிய உடையில் சென்றது அனைவரையும் கவர்ந்தது.மைக்ரோசப்ட்  நிறுவன  CEO இந்தியாவை சார்ந்த திரு .சத்திய நாதல்லா அவர்கள்  நிகழ்த்திய உரையின்பொழுது.திலிப் அவர்கள் எழுப்பிய வினாவையும் அவர் கூரிய கருத்தையும் CEO அவர்கள் பெரிதும் வரவேற்றார்.
அரசு பள்ளிகளில் இத்தகைய தகவல் தொழில் நுட்ப பயன்பாடு என்னை வியப்பில் ஆழ்த்துகிரது என பாராட்டினார் மைக்ரோசாப்ட் கல்விக்கான  vice president திரு.ஆண்டனி சல்சிடோ அவர்கள்.  இக்கருத்தரங்கத்திற்கு வந்திருந்த ஆசிரியர்களை கூழுக்களாகப் பிரித்து அவர்கள் வரும் கல்வி ஆண்டில் வேறு  நாடுகளில் அப்பள்ளிகளுடன் இணைந்து கற்க செயவதற்காக ஏற்பாடு செய்யப் பட்டதே இந்த கருத்தரங்கு

இதில் சத்தியமங்கலம் அரசு பள்ளியுடன் அமெரிக்கா,இஸ்ரேல்,பிரான்ஸ்,தாய்வான் ஆகிய  நாடுகளில் உள்ள பள்ளிக் குழந்தைக:ளுடன் இந்த அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து கற்பர்,அவ்வாறு கற்கும்பொழுது  நாடுகளுக்கிடையே கலாச்சார பகிர்வு ஏற்படும்.

No comments: