Thursday, December 18, 2025

பழைய ஓய்வூதிய திட்டம்

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓ.பி.எஸ்) மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, 3 அமைச்சர்கள் புதன்கிழமை சென்னையில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பின், ககந்தீப் சிங் பேடி அறிக்கையின் பேரில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓ.பி.எஸ்) மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, அமைச்சர்கள் குழு புதன்கிழமை சென்னையில் அவசர ஆலோசனை நடத்தியது.
அரசு ஊழியர்களே அரசு எந்திரத்தை இயக்குபவர்கள். அரசு ஊழியர்கள் அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பாலமாகத் திகழ்கிறார்கள். இதனால், அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையாக தமிழ்நாடு அரசு, அகவிலைப்படி மற்றும் மருத்துவக் காப்பீடு போன்ற சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. 
ஆனாலு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தொடர்ந்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2021 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து வாக்குறுதி அளித்தது. ஆனால், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றபின், அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக் கண்டுகொள்ளததால், அரசு ஊழியர்கள் தங்கல் அதிருப்தியை போராட்டங்கள் வழியாக தெரிவித்து வந்தனர்.
இதனால், தமிழக அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியக் கோரிக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைப் பரிசீலிக்க, கடந்த பிப்ரவரி மாதம் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு பழைய ஓய்வூதியத் திட்டம் (ஓ.பி.எஸ்), பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (சி.பி.எஸ்), ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யு.பி.எஸ்) ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது.
ககன் தீப் சிங் பேடி குழுவினர், பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் எல்.ஐ.சி போன்ற நிதி நிறுவனங்களுடன் ஆலோசித்து, கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் குறித்து, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் புதன்கிழமை விரிவாக விவாதித்து ஆலோசனை நடத்தினர்.
அரசின் நிதி நிலைமை மற்றும் ஊழியர்களின் நலன் ஆகிய இரண்டையும் சமன்படுத்தும் வகையில் எந்தத் திட்டம் சிறப்பாக இருக்கும் என்பது குறித்து இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து, டிசம்பர் இறுதிக்குள் ககன் தீப் சிங் பேடி குழு தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது.

Wednesday, September 17, 2025

TET Psychology 1

குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டைச் சுற்றி உள்ள முக்கிய கருத்துகளையும் கோட்பாடுகளையும் துல்லியமாக விளக்கும் செய்தி இது. கீழே, அனைத்துப் பகுதிகளும் விளக்கமாக தேடப்பட்டுள்ளன.

வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு கருத்து
வளர்ச்சி என்பது குழந்தையின் உடல் அளவிலும், எடையிலும், அமைப்புகளிலும் இயற்கையாக ஏற்படும் முன்னேற்றமாகும்.

மேம்பாடு (Development) என்பது குழந்தையின் பழக்கவழக்கங்கள், திறன்கள், எண்ணங்கள், நேர்மை, நடத்தை மற்றும் சமூக, அறிவியல், உணர்ச்சி ஆகியவற்றின் முழு முன்னேற்றமாகும்.

வேறுபாடு

வளர்ச்சி என்பது அளவுரு அடிப்படையில் (quantitative), ஆனால் மேம்பாடு என்பது தர அடிப்படையில் (qualitative) நடைபெறும்.

வளர்ச்சி பரிபூரண நிலை இருக்க வாய்ப்பில்லை; ஆனால் மேம்பாட்டு முன்னேற்றம் நாளும் நடத்தச் செய்யக்கூடியது.

இயற்கை மற்றும் வளர்ப்பு
இயற்கை (Nature): குழந்தையின் மரபணுக்கள், உடல் அமைப்பும், பெற்றோர்கள் வழி வரும் குணங்கள் இயற்கைக்கு உட்பட்டவை.

வளர்ப்பு (Nurture): பெற்றோர்கள், சமூகம், சீரான அனுபவம், பள்ளி போன்றவை வளர்ப்பின் பகுதிகள்.

இரண்டு காரணிகளும் குழந்தை வளர்ச்சிக்கு ஒன்றுக்கொன்று இணையாக செயல்படுகின்றன.

வளர்ச்சி நிலைகள் மற்றும் பரிமாணங்கள்
பருவம் உடல் அறிவாற்றல் தார்மீக உணர்ச்சி சமூக
குழந்தைப் பருவம் வேகமான வளர்ச்சி உணர்ச்சி & உணவு அறிந்துகொள்ளுதல் அடைமைகள் அம்சங்களைப் பெறுதல்
ஆரம்பகால குழந்தை பருவம் மெதுவான வளர்ச்சி மொழி, எண்ணம் முழுமையான பழக்கங்கள் அழுகை, சிரிப்பு நண்பர்களுடன் பழகுதல்
இளமைப்பருவம் ஸ்திரமாக வளர்ச்சி அறிவு விவசாயம் ஒழுங்குமுறை கடந்துபோன ஆற்றல் பல உறவுகள்
குழந்தை வளர்ச்சி கோட்பாடுகள்
எரிக்சன் - உளவியல்-சமூக நிலைகள்
குழந்தை வாழ்க்கை முழுவதும் 8 நிலைகளைச் சொல்கிறது; ஒவ்வொன்றும் தனித்த உரிமை மற்றும் திறனை வளர்க்க உதவும்.

நம்பிக்கை எதிராக不 நண்பர்களை அழைத்தல் போன்ற பார்வைகள் இதில் உள்ளன.

பியாஜேட் - அறிவாற்றல் வளர்ச்சி
4 முக்கிய கட்டங்கள் உள்ளன: மூலவள நிலையம், முன்வைபவ நிலையம், குறிப்பிட்ட இயக்க நிலையம் மற்றும் தர்க்க நிலை. Knowledge, reasoning, logicமாக மாற்றம் அடைகிறது.

கோல்பெர்க் - ஒழுக்க வளர்ச்சி
3 நிலைகள்: முன்பட்ட நிலை, வழிமுரை நிலை, அபிமான நிலை. ஒழுக்கம் அருவருப்பு நிலை முதல் நேர்மை நிலை வரைக்கும் வளர்கிறது.

வைகோட்ஸ்கி - சமூகவியல் அறிவாற்றல் வளர்ச்சி
சமூக மற்றும் கலாச்சாரம் குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சியில் மிக முக்கியமான பாத்திரம் வகிக்கின்றன.

ப்ரோன்பெஃபென்ப்ரென்னர் - சூழலியல் அமைப்புகள் கோட்பாடு
குழந்தையைச் சுற்றியுள்ள சூழல் (Microsystem, Mesosystem, Exosystem, Macrosystem) அதன் வளர்ச்சியில் நேரடியாகவும், ஒட்டுமொத்தமாகவும் தாக்கம் செய்கின்றன.

Tuesday, June 17, 2025

மறு நியமனம் - புரிதல்

பள்ளிக்கல்வித்துறையில், ஆசிரியர்களின் மறுநியமனம் தொடர்பான அரசாணை (நிலை) எண்.115, பள்ளிக்கல்வித் (ப.க5(2)) துறை, நாள்.28.06.2022, ஒரு முக்கியமான திருத்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இந்தக் கோரிக்கை, ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் வரை மறுநியமனம் வழங்குவதற்குப் பதிலாக, மே 31 ஆம் தேதி வரை மறுநியமனம் வழங்க அனுமதிக்கக் கோரியது. ஆனால், இந்தக் கோரிக்கை அரசால் ஏற்க இயலாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

முன்னர் இருந்த நடைமுறை:

முன்னதாக, ஆசிரியர்களுக்கு மறுநியமனம் வழங்கும் போது, அவர்கள் பணிபுரியும் கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறை, ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் கல்விச் செயல்பாடுகளின் தொடர்ச்சிக்கு ஆதரவாக இருந்தது. குறிப்பாக, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரை ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற இது உதவியது. இதன் மூலம், மாணவர்களின் பாடத்திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு, தேர்வுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய முடிந்தது.

திருத்தக் கோரிக்கையின் பின்னணி:

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், மறுநியமனத்தை மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கக் கோரினர். இந்த கோரிக்கைக்கான முக்கிய காரணம், கல்வி ஆண்டின் இறுதிக் கட்டத்தில், குறிப்பாக மே மாதத்தில், பெரும்பாலான வகுப்புகளுக்குத் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில், வகுப்புகள் வழக்கமாக நடைபெறுவதில்லை. மேலும், கோடை விடுமுறையில் ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால், மே 31 ஆம் தேதி வரை மறுநியமனம் வழங்குவது போதுமானது என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இது ஆசிரியர்களின் நலன் கருதியும், அரசின் செலவுகளைக் குறைக்கும் வகையிலும் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அரசின் நிலைப்பாடு மற்றும் நிராகரிப்பு:

எனினும், தமிழக அரசு இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இந்த நிராகரிப்புக்கான காரணங்கள் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், சில யூகங்களைச் செய்ய முடியும்.

கல்விச் செயல்பாடுகளின் தொடர்ச்சி:

மே 31 ஆம் தேதி வரை மட்டுமே மறுநியமனம் வழங்கப்பட்டால், ஜூன் மாதத்தில் தொடங்கும் புதிய கல்வி ஆண்டிற்கான ஏற்பாடுகள், மாணவர் சேர்க்கை, பாடத்திட்ட திட்டமிடல் போன்ற பணிகளுக்குப் புதிய ஆசிரியர்களை நியமிப்பதில் காலதாமதம் ஏற்படலாம். இது கல்விச் செயல்பாடுகளில் தொய்வை ஏற்படுத்தக்கூடும்.பணிப்பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை: கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் வரை மறுநியமனம் என்பது, ஆசிரியர்களுக்கு ஒரு நிலையான பணிப்பாதுகாப்பை வழங்குகிறது. மே 31 ஆம் தேதி வரை மட்டுமே மறுநியமனம் வழங்கப்பட்டால், ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் புதிய மறுநியமன ஆணைகளுக்காக ஆசிரியர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இது ஆசிரியர்களிடையே ஒரு வித நிச்சயமற்ற தன்மையை உருவாக்கக்கூடும்.

நிர்வாகச் சிக்கல்கள்:

கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் வரை மறுநியமனம் என்பது ஒரு சீரான நடைமுறையாகும். இதில் மாற்றம் கொண்டு வருவது, நிர்வாக ரீதியாகப் பல சிக்கல்களை உருவாக்கக்கூடும். ஆண்டுதோறும் மே மாத இறுதிக்குள் மறுநியமனம் தொடர்பான புதிய ஆணைகளை வெளியிடுவது, அதைச் செயல்படுத்துவது போன்றவற்றில் கூடுதல் பணிச்சுமை ஏற்படலாம்.

நிதி மேலாண்மை:

கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் வரை மறுநியமனம் வழங்குவது, அரசுக்கு நிதிச் சுமையை அதிகரிக்கலாம் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இருப்பினும், கல்வித் துறையில், ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்பதால், நிதிச் சுமையைக் காட்டிலும் கல்விச் செயல்பாடுகளின் தொடர்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கலாம்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள்:

இந்த நிராகரிப்பு குறித்த தகவல் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம், பள்ளிகளில் ஆசிரியர்களின் மறுநியமனம் தொடர்பாக எதிர்காலத்தில் எந்தவித குழப்பமும் ஏற்படாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், அரசின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டு, அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பரிசீலிப்பார்கள். மேலும், இந்த முடிவு, எதிர்காலத்தில் ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் மறுநியமனம் தொடர்பான புதிய விவாதங்களைத் தூண்டக்கூடும்.

முடிவுரை:

ஆசிரியர்களின் மறுநியமனம் தொடர்பான இந்த அரசு ஆணை, பள்ளிக்கல்வித் துறையில் ஒரு முக்கியமான முடிவாகும். அரசின் இந்த முடிவு, கல்விச் செயல்பாடுகளின் தொடர்ச்சி, ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் நிர்வாக வசதி ஆகியவற்றை மையமாகக் கொண்டதாக இருக்கலாம். இருப்பினும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, இந்த முடிவின் நீண்டகால தாக்கங்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம்.

Sunday, May 4, 2025

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு 
கடம்பூர் பள்ளியில் நடைபெற்றது.

Thursday, January 2, 2025

சாவித்திரிபாய் பூலே

*சாவித்ரிபாய் பூலே இந்தியாவின் முதல் ஆசிரியை - 03 ஜனவரி - பிறந்த தினம்*

“போ, கல்விபெறு, புத்தகத்தை கையில் எடு, அறிவு சேரும்போது ஞானம் வளரும்போது அனைத்தும் மாறிவிடும், வாசிப்பே விடுதலை”

ஆம் இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்ரி பாய் பூலே.இவர் 1831 ஆம் ஆண்டில் ஜனவரி -3ல் மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது குடும்பம் சிறிய விவசாயக் குடும்பமாக இருந்தது.

‘சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு” என குழந்தை திருமணம் பற்றி அறிவுத் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார்.

அத்தகைய வேதனை விளையாட்டு சாவித்ரி பாய் பூலே-வின் வாழ்க்கையிலும் நடந்தது. தனது 9 -வது வயதில் ஜோதிராவ் பூலே-வை 1840 ஆம் ஆண்டில் மணந்தார். அப்போது ஜோதிராவ் பூலேவின் வயது 14. சில ஆண்டுகளுக்கு பிறகு, தம்பதிகள் இருவரும் தாங்கள் கற்ற கல்வியாலும், அனுபவத்தாலும் பல சமூக மாற்றங்களை கொண்டுவர உழைத்தனர்.

இருவரும் இணைந்து ஆங்கிலேயர் காலத்தில் அதாவது இப்போது இருக்கும் இந்திய ஒன்றியம் என்ற ஒன்றுபட்ட நாடு உருவாகாத காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டனர். பெண்கல்விக்கான முதல் பள்ளியை பூனாவிலுள்ள பிடெவாவில் 1848 -ல் நிறுவினர்.

சாதிய ஏற்றத்தாழ்வு மற்றும் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து செயல்பட்டனர் சாவித்ரியும், ஜோதிராவும்.கடுமையான பொருளாதாரப் போராட்ட வாழ்க்கையினூடே ஆசிரியர் பயிற்சி பெற்றார் சாவித்ரி பாய் பூலே. அதன் பின்னர், தானே துவக்கிய பள்ளியில் தலைமையாசிரியராக அதாவது இந்தியாவின் முதல் பெண் ஆசியரியராகப் பணிபுரிந்தார்.

பழம்பெருமை பேசித் திரியும் பழைய இந்தியாவின் மனிதர்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் சாவித்ரி பாய் பூலேவின் கல்விப் பணியை பலவழிகளிலும் தடுக்க முயன்றனர். 19 ஆம் நூற்றாண்டில் பெண் கல்வி பெறுவது என்பது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று எழுதப்படாத சட்டமாக நடைமுறையில் இருந்தது.அந்த நடைமுறைக்கு அதாவது பெண் கல்வி கற்கக்கூடாது என்ற தவறான கலாச்சாரத்தை தூக்கியெறிந்த சாவித்ரி பாய் பூலே பள்ளிக்கு வரும்போது, அவர் மீது சேற்றையும், மலத்தையும் வீசி எறிந்து தொல்லை தந்தனர் பழம்பெருமை பேசும் ஆதிக்கவாதிகள்.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையைக்கூட சாதுர்யமாகக் கையாண்டார் சாவித்ரி பாய் பூலே. பள்ளிக்கு வருகையில், பழைய ஆடைகளை அணிந்;து கொள்வார். மனு அதர்மவாதிகள் அதாவது கல்விப் பணியை தடுப்பவர்கள் சேற்றினை எறிந்து சென்ற பின்பு மற்றொரு சேலையினை எடுத்து அணிந்து கொண்டு பாடம் நடத்த செல்வார்.

இப்படி பல தடைகளை தாண்டி பெண்கள் கல்வி கற்க தன் வாழ்நாளை அர்ப்பணித்தார் சாவித்ரி.

1870 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தால் ஏராளமான குடும்பங்களும், பள்ளி செல்ல துடிக்கும் குழந்தைகளும் உணவின்றி தவித்தனர். அக்குழந்தைகளுக்காக உண்டு, உறைவிடப் பள்ளிகளை துவங்கி நடத்தினார் சாவித்ரி பாய் பூலே.

கணவனை இழந்த இந்து மதம் சார்ந்த பெண்களுக்கு மொட்டையடிக்கும் பழக்கம் அக்காலத்தில் இந்து கலாச்;சாரம், பண்பாடு என்ற பெயரில் நடைமுறையில் இருந்தது.

இதனை எதிர்த்து, நாவிதர்களைத் திரட்டி பெரும் போராட்டம் ஒன்றை நடத்தினார் சாவித்ரி. அதாவது விதவைகளுக்கு இனிமேல் மொட்டை அடிக்க மாட்டோம் என நாவிதர்களையே போராட வைத்து போலி கலாச்சாரக் காவலர்களின் அத்துமீறிய செயல்களுக்கு கடிவாளம் போட்டார் சாவித்ரி.

இந்திய பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் என்று வெற்றுக் கூச்சல் போடும் கூட்டம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு இது. அதாவது கணவனை இழந்த இளம்பெண்களை ஆதிக்கசாதி ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்வது, அக்காலத்திய அதாவது 19 ஆம் நூற்றாண்டின் பாரத தேசத்தில், சமூக அங்கீகாரம் பெற்ற நடைமுறையாக இருந்தது.

இவ்விதம் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் கருவுறும் நிலை வெளியே தெரியாமல் இருக்க, தற்கொலை செய்து கொண்டனர். இத்தகைய கொடுமைக்கு ஆளான ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார் சாவித்ரி பாய் பூலே. தனக்கென்று குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ளாமல் இந்தியக்குழந்தைகளே எம் பிள்ளைகள் என்று வாழ்ந்தவர் சாவித்ரி பாய் பூலே.

அன்றைய இந்திய ஒன்றியத்தை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு அடிமை வேலைபார்த்த ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பு மற்றும் பொருளாதார சவால்களையும் மீறி, கைவிடப்பட்ட பெண்கள், குழந்தைகள், ஒடுக்கப்பட்ட பின்தங்கிய மக்களுக்காக உழைத்தார்.

1897 -ஆம் ஆண்டில் புனே நகரில் கொடிய பிளேக் நோய் பரவியது. இன்று வெள்ளம் வந்தால் விமானத்தில் பறந்து வந்து பார்வையிடும் போலி தேசபக்தர்களைப்போல் இல்லாமல், நேரடியாக களத்தில் இறங்கி மீட்பு பணிகள் செய்த போது, அதே ஆண்டில் மார்ச் 10 ஆம் நாள் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார் சாவித்ரி பாய் பூலே.

அவர் பெண்களுக்கு இலவசமாக கல்வி அளிக்க பட்ட பாடுகளை இன்று நினைத்தாலும் நம் கண்கள் கலங்கும். ஆனால், கலக்கம் ஏதுமின்றி பெண் குழந்தைகள் வாழ வேண்டும் என பாடுபட்டவர் சாவித்ரிபாய் பூலே. அவர் இலவசமாக கல்வி வழங்கிய இந்நாட்டில், இன்று புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வி காசுக்காக முழுவதும் விற்கப்படும் நிலை உருவாகாமல் தடுத்து இன்றைய தலைமுறை குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது இந்திய மக்களின் கடமை. இந்தியாவின் முதல் ஆசிரியை மட்டுமல்ல சாவித்ரி பாய் பூலே ஒட்டுமொத்த இந்திய குழந்தைகளின் தாய் அவர்.

Friday, April 19, 2024

தேர்தல் பணி

 ஒதுக்கப்பட்ட ஊருக்குள் பேருந்து 

இறக்கிவிட்டதும்

எங்களுக்குள்

ஏறிக் கொண்டது

தேர்தல் பணி..


Zonal offficer

கொடுத்துப் போன

கோணிமூட்டையை

கொட்டியதும்

கொத்து கொத்தாய்

வந்து விழுந்தன

ஃபாரங்கள்..


EVM எந்திரங்களை

பிறந்த குழந்தை 

போல பாதுகாத்தோம்..


சின்ன 

வகுப்பறை

ஒரே ட்யூப்லைட்..

ஓரமாய் ஓடும் 

மின்விசிறி..

இப்படி கொடுத்ததற்குள்

வாழ கற்றுக் கொடுத்தது

தேர்தல் பணி..


குழாய்

இருந்தது 

தண்ணீர் இல்லை..

பாத்ரூம்

கதவு உடைந்திருந்தது..

சில இடங்களில்

பாத்ரூமே 

இல்லை என்று கேள்விபட்ட  போது மனம் தானாக

ஆறுதலடைந்தது..


புரண்டு புரண்டு படுத்தும்

இமைகளில்

தூக்கம்

அமரவில்லை..


பக்கத்தில் P3

படுத்ததும்

தூக்கம் அவரை வாரி

அணைத்துக் கொண்டது..


P1 'குபீர் குபீர்'

என்று 

எழுந்து மீண்டும்

படுத்துக் கொண்டார்..


வந்த 

தண்ணீரை

நெய் போல

ஊற்றி குளித்து

ஐந்து மணிக்கே

தயாரானோம்..


ஆறுமணிக்கு

வந்த

ஏஜெண்டுகள்..

அவர்கள் கூட

வந்த

குளிக்காத 

ஆட்கள் என்று

Mockpoll 

தொடங்கியது..


ஆயிரம்

முறை வீடியோ

பார்த்தாலும்

அங்கு ஒருமுறை

சீல் வைப்பதில்

தடுமாறி 

சரிசெய்து தொடங்கியது உண்மை 

வாக்குப்பதிவு..


ஏழு மணிக்கு

துவங்கிய 

வரிசை

ரயில் பெட்டி 

போல நீண்டது..


அடிக்கடி

Total வுடன்

17A 

ஒப்பிட்டு

ஒரே எண்ணிக்கை வர

குலதெய்வத்தை

கும்பிட்டேன்..


இட்லி 

வந்து 

வயிற்றில்

ஓட்டுப் போட மணி

பத்து ஆனது..


நடுவே ஒரு

தேநீரில்

தலைவலிக்கு

ஒத்தடம் கொடுத்தேன்..


மதிய உணவை

மறக்கும் அளவுக்கு

வாக்குப்பதிவு கூட்டம்..


கையுறை

சானிடைசர்

முகக்கவசம்

எல்லாம் மறைமுக

வேட்பாளாரான

கொரோனாவின் 

சின்னங்கள்..


ஆறு  மணிக்கு

மேல்

அடங்கத் தொடங்கியது

வெளிச்சமும்

கூட்டமும்..


ஒரு வழியாக

ஏழு மணிக்கு

Close அழுத்தியதும்

நிம்மதி Open ஆனது..


சீல் வைத்து

முடித்ததும்

ஓரிருவரை தவிர

காற்றாய்

பறந்தனர் ஏஜென்டுகள்..


Po டைரி

17C 

Declaration form

எல்லாம் 

முடித்து நிமிர்ந்த போது

முட்கள் ஒன்பதை 

முத்தமிட்டிருந்தது..


P1 P2 P3

'ஒருநாள் குடும்பம்'

போல

பழகியதால்

எங்கள் ஒற்றுமையின்

இசையில்

சின்ன சின்ன 

சலசலப்புகள்

காணாமல் போனது..


இரவு உணவுக்கு

பதில் தந்த

வாழைப்பழதத்தில்

பசி வழுக்கி

விழுந்தது

வயிற்றுக்குள்..


பத்து மணிக்கு

மேல்

பறந்து வந்த

Zonal 

மொத்தத்தையும்

கொத்திக் கொண்டு

மீண்டும் பறந்தார்..


12 மணிக்கு

மேல் 

துரத்திய நாய்களை தாண்டி வீடுவந்த போது

நாட்டுப்பணி ஆற்றிய

ஒரு ராணுவ வீரனின்

கம்பீரம் எனக்குள்..

Monday, April 1, 2024

பெரும்பூண்டி பள்ளி ஆண்டு விழா

பெரும்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா வெகு சிறப்பாக நடை பெற்றது.மாணவர்களின் நடனம் நாடகம் அனைத்தும் சிறப்பு வட்டார கல்வி அலுவலர்கள் வாழ்த்தினார்கள்.




Wednesday, March 13, 2024

அறிவின் பயன்

அறிவு…….


ஒரு தனியார் ஆஸ்பித்திரியில் ஐ.சி.யு வார்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட படுக்கையில் மட்டும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையிலும் சரியாக 11மணிக்கு அந்த படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிகள் இறந்து போகிறார்கள். இது அந்த​ ஆஸ்பித்திரியில் இருக்கும் அனைவருக்கும் மிகுந்த​ அதிர்ச்சியையும், அச்சத்தையும் அளித்தது. பல​ நாடுகளிலிருந்து மிக​ சிறந்த​ மருத்துவர்களும் வந்து பார்த்துவிட்டு இறப்புகளுக்கு காரணம் தெரியாமல் குழம்பினர். மீண்டும் ஒரு ஞாயிற்று கிழமையில் என்ன​ தான் நடக்கிறது என்று பார்க்க​ மிக​ பெரிய​ மருத்துவ​ குழு ஒன்று 11மணிக்கு முன்னால் அந்த​ குறிப்பிட்ட படுக்கையை சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். என்ண ஆக​ போகிறதோ என்று அன்னைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்க​.....  திடிரென உள்ளே நுழைந்தாள் ஞாயிற்று கிழமையில் மட்டும் பகுதி நேரமாக​ கூட்டி, பெருக்கும் வேலை செய்யும் முணியம்மா... வந்தவுடனையே நோயாளியின் ஆக்சிஜன் சப்ளை இயந்திரத்தின் PLUGகை​ பிடுங்கிவிட்டு தனது செல் போனை சார்ஜில் போட்டுவிட்டு கடமையே கண்ணாக அந்த​ அறையை பெருக்க​ ஆரம்பித்தாள்...  

Saturday, March 2, 2024

அவளும் நானும்

 அவளுக்கு என்னுடன் பயணிக்க வேண்டுமன்றல்லாம் ஆசையில்லை.


இருளில் தனியே நின்றுகொண்டிருந்த என்னை பாவம் பார்த்து கொஞ்ச தூரம் கைபிடித்து  

கூட்டிவந்தாள் அவ்வளவோ தான்!

Tuesday, February 20, 2024

உலக தாய்மொழி தினம்.

உலக தாய்மொழி தினம்

✍ ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்மொழி தினம் பிப்ரவரி 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது உலகெங்கிலும் உள்ள பல்வேறு தாய்மொழிகளையும், பன்மொழித்தன்மையையும் கொண்டாடுவதற்கான ஒரு தினமாகும்.

✍ தாய்மொழி என்பது ஒரு மனிதனின் அடையாளம், கலாச்சார வெளிப்பாடு, எண்ணம் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான கருவி, சமூக ஒற்றுமை மற்றும் அறிவு வளர்ச்சிக்கு முக்கியமானது.

வரலாறு:

✍ 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி வங்காள மொழிக்காக போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

✍ 1999ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.

✍ பன்மொழித்தன்மை உலகத்தை சுவாரஸ்யமாக்குகிறது. வெவ்வேறு கலாச்சாரங்களை பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது. புதிய யோசனைகள் மற்றும் கருத்துகளை உருவாக்க உதவுகிறது. உலகளாவிய புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்புக்கு வழிவகுக்கிறது.

✍ உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில், பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தை கொண்டாடுவதற்கான சில வழிகள்:

✍ உங்கள் தாய்மொழியில் ஒரு புத்தகம் அல்லது கவிதையை எழுதுங்கள் அல்லது படியுங்கள்.

✍ உங்கள் தாய்மொழியில் ஒரு பாடலைப் பாடுங்கள்.

✍ உங்கள் தாய்மொழியைப் பேசும் மற்றவர்களுடன் உரையாடுங்கள்.

✍ உங்கள் தாய்மொழியின் முக்கியத்துவம் பற்றி பிறரிடம் கூறுங்கள்.

இந்த தினத்தை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு உங்கள் தாய்மொழியைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அதைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் உதவுங்கள்.

 

ஒரு ஊரில் ஒரு விவசாயி நெல் பயிரிட்டான்.

நல்ல விளைச்சல் கண்டது அந்த நிலம், ஒரு நாள் நிலத்தை சுற்றி பார்த்தவன்.

ஒரு வரப்பின் ஓரம் நின்று தனக்குள்ளே பேசி கொண்டான்.

ஆ! நல்ல விளைச்சல் நாளை ஆட்களை அழைத்து வந்து எப்படியும் அறுவடை செய்துவிட வேண்டும், என கூறினான்.

இதை அந்த விளைச்சலில் கூடு கட்டி கூட்டில் இருந்த குருவி குஞ்சுகள் கேட்டுகொண்டு இருந்தது.

அந்த குஞ்சிகளின் தாய் வந்தவுடன் அம்மா! நிலத்தின் உரிமையாளர் வந்தார், நாளை ஆட்களை கூட்டி வந்து அறுவடை செய்ய போவதாக சொன்னார், அம்மா! என்று கூறியது.

உடனே தாய் குருவி நாளை அறுவடை செய்யமாட்டார் கவலை பட வேண்டாம் என கூறியது.

மறுநாள் அறுவடை நடைபெறவில்லை.

மறுநாள் வந்த விவசாயி அதே இடத்தில் நின்றுகொண்டு எப்படியாச்சும் வெளியூரில் இருந்து ஆட்களை கொண்டுவந்தாவது நாளை அறுவடை செய்துவிட வேண்டும் என் கூறினான்.

மீண்டும் அந்த குஞ்சிகளின் தாய் வந்தவுடன் அம்மா! நிலத்தின் உரிமையாளர் வந்தார், நாளை வெளியூரில் இருந்தாவது ஆட்களை கூட்டி வந்து அறுவடை செய்ய போவதாக சொன்னார், அம்மா! என்று கூறியது.

உடனே தாய் குருவி நாளையும் அறுவடை செய்யமாட்டார் கவலை பட வேண்டாம் என கூறியது.

அது போலவே மறுநாளும் அறுவடை நடக்கவில்லை.

மறுநாள் வந்த விவசாயி அதே இடத்தில் நின்றுகொண்டு எப்படியாச்சும் நாளை நாமே இறங்கியாவது அறுவடை செய்துவிட வேண்டும் என் கூறினான்.

மீண்டும் அந்த குஞ்சிகளின் தாய் வந்தவுடன் அம்மா! நிலத்தின் உரிமையாளர் வந்தார், நாளை அவரே இறங்கி அறுவடை செய்ய போவதாக சொன்னார், அம்மா! என்று கூறியது.

உடனே தாய் குருவி நாளையும் அறுவடை கட்டாயம் நடைபெறும்,வாருங்கள் நாம் வேறு இடத்திற்கு பத்திரமாக சென்றுவிடலாம் என கூறியது.

உடனே குஞ்சுகள் ஏன் அம்மா நாளை கட்டாயம் நடைபெறும் என்று கூறுகின்றீர்கள் என கேட்டன,

அதற்கு தாய் குருவி கூறியது

இதுநாள் வரை விவசாயி அடுத்தவர் மீது நம்பிக்கை வைத்திருந்தான்,

ஆனால் இன்றோ தன் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறான். என கூறியது.

*தன்னம்பிக்கை வெல்வது உறுதி*

என் தம்பிகளின் வெற்றி உறுதி👍👍👍

Tuesday, February 13, 2024

வலுவிழக்கும் ஜாக்டோஜியோ போராட்டம்

 *243 ரத்து கோரிக்கை இடம்பெற்றதால் வலுவை இழக்கும் 

ஜாக்டோ-ஜியோ போராட்டம்*



*CPS ஒழிப்புக்காக நாம் எப்போதும் போராட தயார்*

🩸

*நம்முடைய வாழ்வாதார கோரிக்கை பங்களிப்புத் திட்டத்தை ரத்து செய்வது & நம்முடைய பதவி உயர்வு கோரிக்கையும் புறந்தள்ளி விட முடியாது.*

 *ஆனால் ஜாக்டோ ஜியோ முரண்பாடான கோரிக்கைகளை வைக்காமல் பொது கோரிக்கைகளுக்காக போராட வேண்டும்.*

*243 ரத்து செய்ய வேண்டும் என்பதை மாற்றி திருத்தங்களை செய்ய வேண்டும்.*

*என்கிற கோரிக்கை வைத்தால்  உடன்பாடு உண்டு.* 

*இல்லையேல் நடுநிலைப்பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொள்வதில் பெரும் சிக்கல் உள்ளது.

CPS ஐ காட்டி 243 ரத்து செய்ய நினைப்பதை தடுக்கவேண்டும்.*

*ஆகவே பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு என்ற இரண்டு கோரிக்கைகளை வைத்து மட்டுமே போராட வேண்டும்.*

*243 ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை இடம் பெறக் கூடாது.*

Thursday, January 25, 2024

நன்றி அறிவிப்பு

 “நீதி வெல்லும்”

நடைமேடையில் ஓரமாக வாகனம் வராத இடத்தில் ஒரு குழந்தை விளையாடி கொண்டு இருந்தது. 

ஒரு 15 குழந்தைகள் அடிக்கடி வாகனம் செல்லும் சாலையில் விளையாடி கொண்டு இருந்தனர். 

அச்சாலை வழியே வேகமாக தனது பாதையில் வந்த லாரியின் ஓட்டுநர் சாலையில் 15 சிறுவர்கள் விளையாடுவதை பார்த்தார்.

அதே சமயம் நடைமேடையில் ஒரு குழந்தை மட்டும் விளையாடுவதை பார்த்தார்.

உடனே வேகமாக வந்த லாரியை நடைமேடை பக்கம் திருப்பி அக்குழந்தை மீது ஏற்றி 15 குழந்தைகளின் உயிரை காத்தார்.

கூட்டமாக செய்தால் தவறும் சரியாக கருதப்படும் மனநிலையில் பலர்.

ஆனால் 

சில நீதிமான்களால் மட்டுமே

தவறான பாதையில் செல்பரை தண்டிக்க முடியும்.

வாருங்கள்.

வெற்றி பெருவோம்!

போர்… போர்…




Thursday, January 4, 2024

இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனம்

 1500 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அனுமதி வழங்குதல்- ஆணை வெளியீடு.


பள்ளிக்கல்வி - ஆசிரியர் நேரடி நியமனம்- அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுடன் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அனுமதி வழங்குதல்- ஆணை வெளியிடப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர் 1500 பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டதில் தேர்வாகும் தேர்வர்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில்.. முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GO No.07 dt 04.01.2024 - Sec Gr Teachers - Addl Posts GO👇

Downlode Here

மாநில அளவில் முன்னுரிமை பட்டியல் - நன்மையே!

 தொடக்கக் கல்வித் துறையில் மாநில அளவில் முன்னுரிமையால் ஏற்படும் நன்மைகள்

1. அனைத்து ஆசிரியர்களும் மாநில அளவில் பணி மாறுதல் பெறலாம் குறிப்பாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்


2. அனைத்து ஆசிரியர்களுக்கும் சம நிலையில் பதவி உயர்வு. மாநிலத்தின் எந்த பகுதியில் காலி பணியிடமிருக்கோ அங்கு பதவி உயர்வு பெற்ற பிறகு மீண்டும் பணி மாறுதல் பெற்றுக் கொள்ளலாம்
3.பள்ளிக் கல்வித்துறை போன்றே தொடக்க கல்வித் துறையிலும் ஆசிரியர் வருகை பதிவேட்டில் நியமனம் /பதவி உயர்வு தேதியின் அடிப்படையில் ஆசிரியர் பெயர் எழுதப்படும்
 
4.தொடக்கக் கல்வித் துறையில் பணி மாறுதல் பெற்ற தேதியின் அடிப்படையில் ஆசிரியர் வருகை பதிவேட்டில் பெயர் எழுதுவது நீக்கப்படும்

5 இனி பள்ளிக்கல்வித்துறை போன்றே கலந்தாய்வு நடைபெற்ற பிறகே பதவி உயர்வு நடைபெறும்

6. மாநில அளவில் முன்னுரிமை பட்டியல் பராமரிக்கும் பொழுது நம்பகத்தன்மை உள்ளதாகவும் இருக்கும். அனைவரும் மாநில அளவில் தெரிந்து கொள்ளும்படியாகவும் இருக்கும்

பள்ளி திறந்த முதல் நாள் CL எடுக்கலாமா?

 தெரிந்து கொள்ளுவோம்!


வழக்கமாக ஒவ்வொரு விடுமுறை காலங்களில் ஏற்படும் சந்தேகம் தான் 😁

ஜனவரி 2 பள்ளி திறக்கும் நாளில் ஒரு ஆசிரியர் CL கட்டாயம் கேட்கிறார் வழங்கலாமா?

இந்த முறை 2/1/24 அன்று CL வழங்க இயலாது.....

ஏன்? அவர் last working day 22/12/23 வந்து விட்டார்...

Either last working day or first working day வந்தால் போதும் என நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் 🤔

CL vacation/ non vacation அனைத்து பணியாளர்களுக்கும் பொதுவானது ...

CL (விடுப்பு+விடுமுறை ) 10 நாள்கள் வரை allowed..... 

11 வது நாள் பணியில் இருக்க வேண்டும் 

( எதிர்பாராத விதமாக 11 வது நாள் இயற்கை பேரிடர், தலைவர்கள் மரணம் என அரசு திடீரென விடுமுறை அறிவித்தார்கள் எனில் பிரச்சினை இல்லை, அனுமதி உண்டு)...

இந்த முறை 23 /12/23 முதல் 1/1/24 வரை 10 நாள்கள் விடுமுறை....

2/1/24 CL எனில் 10 விடுமுறை நாள்கள் + 1 விடுப்பு நாள் , என 11 நாள்கள் ஆகிறது....

(22/12/23 கடைசியாக பணிக்கு வந்த நாள் , அதற்கு பிறகு 3/1/24 எனில் 11 நாள்கள் ) எனவே இது CL விதிகளின் படி எடுக்க இயலாது ....

எனவே தான் இந்த ஆண்டு 2/1/24 பள்ளி திறக்கும் நாளில் போது ( 12 CL கைவசம் இருந்த போதிலும் 😃) CL அனுமதிக்க இயலாது ..

ஒருவேளை 22/12/23 கடைசி வேலை நாள் போது பிற்பகலில் CL அல்லது நாள் முழுவதும் CL அனுமதித்து இருந்தாலும் அதுவும் தவறு தான்...

சரி....

 2/1/24 அன்று கட்டாயம் ஒரு ஆசிரியருக்கு விடுப்பு தேவை... என்ன செய்யலாம்?

CL தான் வழங்க இயலாது....

 EL எடுக்கலாம்

அரசு விடுமுறை முன் இணைப்பு அனுமதி உண்டு ...

2/1/24 ஒரு நாள் EL எனில்...

முன்னர் உள்ள விடுமுறை காலம் முன் அனுமதி ...

(*ஒரு நாள் மட்டுமே EL) 

(22/12/23 பணிக்கு வந்து இருக்க வேண்டும்) 

22/12/23 அன்றும் வரவில்லை

2/1/24 அன்றும் வரவில்லை என்றால்

 12 நாள்கள் EL ஆக மாறிவிடும்...

இந்த பதிவின் நோக்கம்...

1) கோடை விடுமுறை எப்போதும் 10 நாள்களுக்கு மேல் என்பதால்

 ஏப்ரல் கடைசி வேலை நாள்...

அதே போல் ஜூன் பள்ளி திறக்கும் முதல் நாள் அன்று 

எப்போதும் CL எடுக்க இயலாது

2) காலாண்டு / அரையாண்டு விடுமுறை பொறுத்தவரை ஆண்டிற்கு ஆண்டு 

 மாறுபடும் ....

அந்த ஆண்டில் 10 நாள்களுக்குள் எனில் CL எடுக்கலாம் ...

 விடுப்பு+விடுமுறை 10 நாள்களுக்கு மேல் என்றால் எடுக்க இயலாது .

EL எடுக்கலாம்

அரசு விடுமுறை முன் இணைப்பு அனுமதி உண்டு ...

2/1/24 ஒரு நாள் EL எனில்...
முன்னர் உள்ள விடுமுறை காலம் முன் அனுமதி ...
(*ஒரு நாள் மட்டுமே EL) 

(22/12/23 பணிக்கு வந்து இருக்க வேண்டும்) 

22/12/23 அன்றும் வரவில்லை
2/1/24 அன்றும் வரவில்லை என்றால்
 12 நாள்கள் EL ஆக மாறிவிடும்...

இந்த பதிவின் நோக்கம்...

1) கோடை விடுமுறை எப்போதும் 10 நாள்களுக்கு மேல் என்பதால்
 ஏப்ரல் கடைசி வேலை நாள்...

அதே போல் ஜூன் பள்ளி திறக்கும் முதல் நாள் அன்று 
எப்போதும் CL எடுக்க இயலாது

2) காலாண்டு / அரையாண்டு விடுமுறை பொறுத்தவரை ஆண்டிற்கு ஆண்டு 
 மாறுபடும் ....

அந்த ஆண்டில் 10 நாள்களுக்குள் எனில் CL எடுக்கலாம் ...

 விடுப்பு+விடுமுறை 10 நாள்களுக்கு மேல் என்றால் எடுக்க இயலாது .

Thursday, December 28, 2023

பட்டதாரி ஆசிரியர்கள்

 மாநில முன்னுரிமை அரசாணை 243, தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளும், அரசாணையின் நிறைகளும்.

* அரசாணை எண் 12 ல் Head master / Headmistress of middle Schools - By Promotion from class II and Category 1 of Class III of the Service in Combined Seniority என்ற விதி ரத்து செய்யப்படுகிறது . நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் Uதவி உயர்வு  பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொகுப்பு முன்னுரிமை Uட்டியல் படி வழங்கப்படுவது ரத்து செய்யப்படுகிறது .

* By the Promotion from the Categories in Class Il என்ற புதிய அமெண்ட்மென்ட் படி

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் .

* பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு  தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்  மற்றும் இடைநிலை ஆசிரியகளுக்கு வழங்கப்படும் விதி ரத்து செய்யப்படுகிறது . By Promotion from the eligible Persons in Category 1 of Class III என்ற விதியின் படி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியும் .இடைநிலை ஆசிரியர் நேரடியாக பட்டதாரி ஆசிரியராக இனி பதவி உயர்வு பெற முடியாது .

* For the Purpose of appointment Category 1 of Class 1 State Shall be a unit என்ற விதியின் படி வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு மட்டுமே மாநில சீனியாரிட்டி முறையில் நியமனம் , மாறுதல் நடைபெற்றது .

For the Purpose of appointment to any of the Categories in the Service the state Shall be Unit என்ற புதிய அமெண்ட்மன்ட் படி  மாநில முன்னுரிமை படியே அனைத்து பதவி உயர்வுகளும் ,மாறுதலும் நடைபெறும் . புதிய விதியின் படி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேறு ஒன்றியத்திற்கு , வேறு மாவட்டத்திற்கு பதவி உயர்வு பெற முடியும் 

* புதிய அரசாணையில் நீதிமன்ற தீர்ப்புகளின் படி மாநில சீனியாரிட்டி வழங்கப்பட காரணம் என்று கூறப்பட்டுள்ளது .

*நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பாக பட்டதாரி ஆசிரியர்களை நீண்ட காலம் புறக்கணித்ததின் விளைவு புதிய விதி ..

Sunday, December 3, 2023

மழை

 


ஒளிந்தால்

தேடுகிறான்...


விழுந்தால்

ரசிக்கிறான்...


எழுந்தால்

ஓடுகிறான்...


ஓடினால்

ஒளிகிறான்...


மனிதனோடு

கண்ணாமூச்சு

விளையாடுகிறது...


*"மழை"*

Tuesday, November 21, 2023

தோட்டம்

 


தோட்டம்

என்பது...


அழகிய

மலர்களால்

நிறைந்தது

மட்டுமல்ல,


காய்ந்த

சருகுகளும்

சேர்ந்ததுதான்.



Tuesday, November 14, 2023

மழை விடுமுறை இல்லை




 🌧️ *கனமழை காரணமாக இன்று (15.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*

*திருவள்ளூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

*சென்னை* (பள்ளிகள்) 

*புதுச்சேரி/காரைக்கால்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

🌧️ *விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*

☹️ *காஞ்சிபுரம்*

☹️ *விழுப்புரம்*

Saturday, November 11, 2023

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 

இனிய...
தீபாவளி நல்வாழ்த்துகள்.

மனதில்
மகிழ்ச்சி மத்தாப்பு
பூத்துக் குலுங்கட்டும்! 

இல்லத்தில்
சிரிப்புச் சரவெடி
சிதறி கிடக்கட்டும்!

பூவாணமாய்
நல்லெண்ணங்கள்
மேலோங்கி மின்னட்டும்!

சங்குச்சக்கரங்களாய்
வாழ்க்கைச் சக்கரம்
ஒளிவீசி சுழலட்டும்!

இயற்கை அன்னைக்கும்,
உயிரினங்கள் எவற்றிற்கும்
இடையூறு செய்யாமல்...

அதிரடி
வெடியில்லாமல்...

கந்தகப் புகை
எழுப்பாமல்...

தெருவை
குப்பை மேடாக்காமல்...

இயற்கையைப்
பேணும் வண்ணம்...

இனிதே கொண்டாட
இதயபூர்வ வாழ்த்துகள்.

வாழ்த்துகளுடன்…..