Tuesday, June 17, 2025

மறு நியமனம் - புரிதல்

பள்ளிக்கல்வித்துறையில், ஆசிரியர்களின் மறுநியமனம் தொடர்பான அரசாணை (நிலை) எண்.115, பள்ளிக்கல்வித் (ப.க5(2)) துறை, நாள்.28.06.2022, ஒரு முக்கியமான திருத்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இந்தக் கோரிக்கை, ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் வரை மறுநியமனம் வழங்குவதற்குப் பதிலாக, மே 31 ஆம் தேதி வரை மறுநியமனம் வழங்க அனுமதிக்கக் கோரியது. ஆனால், இந்தக் கோரிக்கை அரசால் ஏற்க இயலாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

முன்னர் இருந்த நடைமுறை:

முன்னதாக, ஆசிரியர்களுக்கு மறுநியமனம் வழங்கும் போது, அவர்கள் பணிபுரியும் கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறை, ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் கல்விச் செயல்பாடுகளின் தொடர்ச்சிக்கு ஆதரவாக இருந்தது. குறிப்பாக, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரை ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற இது உதவியது. இதன் மூலம், மாணவர்களின் பாடத்திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு, தேர்வுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய முடிந்தது.

திருத்தக் கோரிக்கையின் பின்னணி:

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், மறுநியமனத்தை மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கக் கோரினர். இந்த கோரிக்கைக்கான முக்கிய காரணம், கல்வி ஆண்டின் இறுதிக் கட்டத்தில், குறிப்பாக மே மாதத்தில், பெரும்பாலான வகுப்புகளுக்குத் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில், வகுப்புகள் வழக்கமாக நடைபெறுவதில்லை. மேலும், கோடை விடுமுறையில் ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால், மே 31 ஆம் தேதி வரை மறுநியமனம் வழங்குவது போதுமானது என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இது ஆசிரியர்களின் நலன் கருதியும், அரசின் செலவுகளைக் குறைக்கும் வகையிலும் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அரசின் நிலைப்பாடு மற்றும் நிராகரிப்பு:

எனினும், தமிழக அரசு இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இந்த நிராகரிப்புக்கான காரணங்கள் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், சில யூகங்களைச் செய்ய முடியும்.

கல்விச் செயல்பாடுகளின் தொடர்ச்சி:

மே 31 ஆம் தேதி வரை மட்டுமே மறுநியமனம் வழங்கப்பட்டால், ஜூன் மாதத்தில் தொடங்கும் புதிய கல்வி ஆண்டிற்கான ஏற்பாடுகள், மாணவர் சேர்க்கை, பாடத்திட்ட திட்டமிடல் போன்ற பணிகளுக்குப் புதிய ஆசிரியர்களை நியமிப்பதில் காலதாமதம் ஏற்படலாம். இது கல்விச் செயல்பாடுகளில் தொய்வை ஏற்படுத்தக்கூடும்.பணிப்பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை: கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் வரை மறுநியமனம் என்பது, ஆசிரியர்களுக்கு ஒரு நிலையான பணிப்பாதுகாப்பை வழங்குகிறது. மே 31 ஆம் தேதி வரை மட்டுமே மறுநியமனம் வழங்கப்பட்டால், ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் புதிய மறுநியமன ஆணைகளுக்காக ஆசிரியர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இது ஆசிரியர்களிடையே ஒரு வித நிச்சயமற்ற தன்மையை உருவாக்கக்கூடும்.

நிர்வாகச் சிக்கல்கள்:

கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் வரை மறுநியமனம் என்பது ஒரு சீரான நடைமுறையாகும். இதில் மாற்றம் கொண்டு வருவது, நிர்வாக ரீதியாகப் பல சிக்கல்களை உருவாக்கக்கூடும். ஆண்டுதோறும் மே மாத இறுதிக்குள் மறுநியமனம் தொடர்பான புதிய ஆணைகளை வெளியிடுவது, அதைச் செயல்படுத்துவது போன்றவற்றில் கூடுதல் பணிச்சுமை ஏற்படலாம்.

நிதி மேலாண்மை:

கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் வரை மறுநியமனம் வழங்குவது, அரசுக்கு நிதிச் சுமையை அதிகரிக்கலாம் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இருப்பினும், கல்வித் துறையில், ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்பதால், நிதிச் சுமையைக் காட்டிலும் கல்விச் செயல்பாடுகளின் தொடர்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கலாம்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள்:

இந்த நிராகரிப்பு குறித்த தகவல் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம், பள்ளிகளில் ஆசிரியர்களின் மறுநியமனம் தொடர்பாக எதிர்காலத்தில் எந்தவித குழப்பமும் ஏற்படாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், அரசின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டு, அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பரிசீலிப்பார்கள். மேலும், இந்த முடிவு, எதிர்காலத்தில் ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் மறுநியமனம் தொடர்பான புதிய விவாதங்களைத் தூண்டக்கூடும்.

முடிவுரை:

ஆசிரியர்களின் மறுநியமனம் தொடர்பான இந்த அரசு ஆணை, பள்ளிக்கல்வித் துறையில் ஒரு முக்கியமான முடிவாகும். அரசின் இந்த முடிவு, கல்விச் செயல்பாடுகளின் தொடர்ச்சி, ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் நிர்வாக வசதி ஆகியவற்றை மையமாகக் கொண்டதாக இருக்கலாம். இருப்பினும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, இந்த முடிவின் நீண்டகால தாக்கங்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம்.

Sunday, May 4, 2025

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு 
கடம்பூர் பள்ளியில் நடைபெற்றது.

Thursday, January 2, 2025

சாவித்திரிபாய் பூலே

*சாவித்ரிபாய் பூலே இந்தியாவின் முதல் ஆசிரியை - 03 ஜனவரி - பிறந்த தினம்*

“போ, கல்விபெறு, புத்தகத்தை கையில் எடு, அறிவு சேரும்போது ஞானம் வளரும்போது அனைத்தும் மாறிவிடும், வாசிப்பே விடுதலை”

ஆம் இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்ரி பாய் பூலே.இவர் 1831 ஆம் ஆண்டில் ஜனவரி -3ல் மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது குடும்பம் சிறிய விவசாயக் குடும்பமாக இருந்தது.

‘சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு” என குழந்தை திருமணம் பற்றி அறிவுத் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார்.

அத்தகைய வேதனை விளையாட்டு சாவித்ரி பாய் பூலே-வின் வாழ்க்கையிலும் நடந்தது. தனது 9 -வது வயதில் ஜோதிராவ் பூலே-வை 1840 ஆம் ஆண்டில் மணந்தார். அப்போது ஜோதிராவ் பூலேவின் வயது 14. சில ஆண்டுகளுக்கு பிறகு, தம்பதிகள் இருவரும் தாங்கள் கற்ற கல்வியாலும், அனுபவத்தாலும் பல சமூக மாற்றங்களை கொண்டுவர உழைத்தனர்.

இருவரும் இணைந்து ஆங்கிலேயர் காலத்தில் அதாவது இப்போது இருக்கும் இந்திய ஒன்றியம் என்ற ஒன்றுபட்ட நாடு உருவாகாத காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டனர். பெண்கல்விக்கான முதல் பள்ளியை பூனாவிலுள்ள பிடெவாவில் 1848 -ல் நிறுவினர்.

சாதிய ஏற்றத்தாழ்வு மற்றும் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து செயல்பட்டனர் சாவித்ரியும், ஜோதிராவும்.கடுமையான பொருளாதாரப் போராட்ட வாழ்க்கையினூடே ஆசிரியர் பயிற்சி பெற்றார் சாவித்ரி பாய் பூலே. அதன் பின்னர், தானே துவக்கிய பள்ளியில் தலைமையாசிரியராக அதாவது இந்தியாவின் முதல் பெண் ஆசியரியராகப் பணிபுரிந்தார்.

பழம்பெருமை பேசித் திரியும் பழைய இந்தியாவின் மனிதர்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் சாவித்ரி பாய் பூலேவின் கல்விப் பணியை பலவழிகளிலும் தடுக்க முயன்றனர். 19 ஆம் நூற்றாண்டில் பெண் கல்வி பெறுவது என்பது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று எழுதப்படாத சட்டமாக நடைமுறையில் இருந்தது.அந்த நடைமுறைக்கு அதாவது பெண் கல்வி கற்கக்கூடாது என்ற தவறான கலாச்சாரத்தை தூக்கியெறிந்த சாவித்ரி பாய் பூலே பள்ளிக்கு வரும்போது, அவர் மீது சேற்றையும், மலத்தையும் வீசி எறிந்து தொல்லை தந்தனர் பழம்பெருமை பேசும் ஆதிக்கவாதிகள்.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையைக்கூட சாதுர்யமாகக் கையாண்டார் சாவித்ரி பாய் பூலே. பள்ளிக்கு வருகையில், பழைய ஆடைகளை அணிந்;து கொள்வார். மனு அதர்மவாதிகள் அதாவது கல்விப் பணியை தடுப்பவர்கள் சேற்றினை எறிந்து சென்ற பின்பு மற்றொரு சேலையினை எடுத்து அணிந்து கொண்டு பாடம் நடத்த செல்வார்.

இப்படி பல தடைகளை தாண்டி பெண்கள் கல்வி கற்க தன் வாழ்நாளை அர்ப்பணித்தார் சாவித்ரி.

1870 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தால் ஏராளமான குடும்பங்களும், பள்ளி செல்ல துடிக்கும் குழந்தைகளும் உணவின்றி தவித்தனர். அக்குழந்தைகளுக்காக உண்டு, உறைவிடப் பள்ளிகளை துவங்கி நடத்தினார் சாவித்ரி பாய் பூலே.

கணவனை இழந்த இந்து மதம் சார்ந்த பெண்களுக்கு மொட்டையடிக்கும் பழக்கம் அக்காலத்தில் இந்து கலாச்;சாரம், பண்பாடு என்ற பெயரில் நடைமுறையில் இருந்தது.

இதனை எதிர்த்து, நாவிதர்களைத் திரட்டி பெரும் போராட்டம் ஒன்றை நடத்தினார் சாவித்ரி. அதாவது விதவைகளுக்கு இனிமேல் மொட்டை அடிக்க மாட்டோம் என நாவிதர்களையே போராட வைத்து போலி கலாச்சாரக் காவலர்களின் அத்துமீறிய செயல்களுக்கு கடிவாளம் போட்டார் சாவித்ரி.

இந்திய பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் என்று வெற்றுக் கூச்சல் போடும் கூட்டம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு இது. அதாவது கணவனை இழந்த இளம்பெண்களை ஆதிக்கசாதி ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்வது, அக்காலத்திய அதாவது 19 ஆம் நூற்றாண்டின் பாரத தேசத்தில், சமூக அங்கீகாரம் பெற்ற நடைமுறையாக இருந்தது.

இவ்விதம் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் கருவுறும் நிலை வெளியே தெரியாமல் இருக்க, தற்கொலை செய்து கொண்டனர். இத்தகைய கொடுமைக்கு ஆளான ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார் சாவித்ரி பாய் பூலே. தனக்கென்று குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ளாமல் இந்தியக்குழந்தைகளே எம் பிள்ளைகள் என்று வாழ்ந்தவர் சாவித்ரி பாய் பூலே.

அன்றைய இந்திய ஒன்றியத்தை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு அடிமை வேலைபார்த்த ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பு மற்றும் பொருளாதார சவால்களையும் மீறி, கைவிடப்பட்ட பெண்கள், குழந்தைகள், ஒடுக்கப்பட்ட பின்தங்கிய மக்களுக்காக உழைத்தார்.

1897 -ஆம் ஆண்டில் புனே நகரில் கொடிய பிளேக் நோய் பரவியது. இன்று வெள்ளம் வந்தால் விமானத்தில் பறந்து வந்து பார்வையிடும் போலி தேசபக்தர்களைப்போல் இல்லாமல், நேரடியாக களத்தில் இறங்கி மீட்பு பணிகள் செய்த போது, அதே ஆண்டில் மார்ச் 10 ஆம் நாள் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார் சாவித்ரி பாய் பூலே.

அவர் பெண்களுக்கு இலவசமாக கல்வி அளிக்க பட்ட பாடுகளை இன்று நினைத்தாலும் நம் கண்கள் கலங்கும். ஆனால், கலக்கம் ஏதுமின்றி பெண் குழந்தைகள் வாழ வேண்டும் என பாடுபட்டவர் சாவித்ரிபாய் பூலே. அவர் இலவசமாக கல்வி வழங்கிய இந்நாட்டில், இன்று புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வி காசுக்காக முழுவதும் விற்கப்படும் நிலை உருவாகாமல் தடுத்து இன்றைய தலைமுறை குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது இந்திய மக்களின் கடமை. இந்தியாவின் முதல் ஆசிரியை மட்டுமல்ல சாவித்ரி பாய் பூலே ஒட்டுமொத்த இந்திய குழந்தைகளின் தாய் அவர்.