Wednesday, November 19, 2014

PG

PGTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதுவோர் கவனத்துக்கு

          முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வுக்கான பூர்த்தி செய்த  விண்ணப்பங்களை, நேரில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
                ஆசிரியர் தேர்வு வாரியம் 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வை, வரும் ஜன., 10ம் தேதி நடத்துகிறது. இம்மாதம் 10ம் தேதி முதல் இதற்கான விண்ணப்பம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், மையம் அமைத்து 50 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது.திருப்பூர் முதன்மை கல்வி அலுவலக மையத்தில், இதுவரை 2,973 விண்ணப்பங்கள் விற்றுள்ளன. முதல் கட்டமாக வந்த 1,600 விண்ணப்பங்கள் விற்று தீர்ந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 2,400 விண்ணப்பங்கள் வரவழைக்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இருப்பில் உள்ளதால், வரும் 26ம் தேதி வரை, ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு எழுத விரும்புவோர், விண்ணப்பம் பூர்த்தி செய்து அளிக்கலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தபாலில் அனுப்பக்கூடாது; வாங்கிய மையத்திலேயே, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறும், அதற்கான ஒப்புகை சீட்டை பெற்றுக் கொள்ளுமாறும், விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று வரை, மொத்தம் 293 பேர் விண்ணப்பங்களை இம்மையத்தில் அளித்துள்ளனர். வரும் 26ம் தேதி மாலை 5.00 மணி வரை, இங்கு விண்ணப்பம் பெறப்படும்.அனைத்து விண்ணப்பங்களையும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பிய பின், அடுத்த மாத இறுதியிலோ அல்லது ஜன., முதல் வாரத்திலோ, எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் குறித்த அறிவிப்பு வெளியாகும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

EMIS

EMIS  1 மற்றும்  வகுப்பு பதிவு செய்ய

         2013-2014  மற்றும் 2014-2015 ல் பள்ளியில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.


                                                                  இங்கே கிளிக் செய்ய

       

Saturday, November 15, 2014

Crc

இரண்டு CRC யும் pri ,up- pri (22.11.2014) இந்த வாரம் நடைபெறும் !!!
இரண்டு CRC யும் pri ,up- pri (22.11.2014) இந்த வாரம் நடைபெறும் !!!

வரும் சனிக்கிழமை 22.11.2014 தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள பயிற்சி(pri-CRC) மற்றும் உயர் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கும் குறுவள
மைய பயிற்சி(UP Pri -CRC) நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன .

tnpsc 2

TNPSC : ஆன் - லைன் வழி தேர்வு திட்டம்: ரத்து செய்ய தேர்வாணையம் முடிவு

கடந்த 8ம் தேதி, 'ஆன் - லைன்வழியில் நடந்த குரூப் 2 முதன்மைதேர்வில்பெரும் குளறுபடி ஏற்பட்டதன் எதிரொலியாகஆன்-லைன்வழி தேர்வை ரத்து செய்யஅரசுப் பணியாளர் தேர்வாணையமான,

டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.

தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர்நட்ராஜ்ஆன்-லைன் வழிதேர்வை அமல்படுத்தினார்குறைந்த தேர்வர்கள் பங்கேற்கும் தேர்வில்மட்டும்புதிய திட்டத்தை அமல்படுத்தினார்இந்த வகை தேர்வு,தேர்வாணைய அலுவலகத்தில் மட்டும் நடந்து வந்ததுஇதனால்எந்தபிரச்னையும் ஏற்படவில்லைகடந்த 8ம் தேதிகுரூப் 2 முதன்மைத்தேர்வுமாநிலம் முழுவதும், 44க்கும் மேற்பட்ட மையங்களில் நடந்தது. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த தேர்வுஇருதாள்களாக நடத்தப்பட்டதுகாலையில்ஆன்-லைன் வழியிலானதேர்வும்பிற்பகலில்விரிவாக விடை அளித்தல் முறையிலானதேர்வும் நடந்தது

இதில்ஆன்-லைன் வழியிலான தேர்வில்பெரும் குளறுபடிஏற்பட்டதுபல இடங்களில் மின்சாரம் இல்லாததாலும்சிலமையங்களில், 'சர்வர்முடங்கியதாலும்குறித்த நேரத்தில்தேர்வுதுவங்கவில்லைமறைமலை நகர் அருகே உள்ள ஒரு மையத்தில்,ஒரு அறையில், 'சர்வர்கோளாறால்தேர்வெழுத முடியாத 43தேர்வர்கள்போராட்டம் நடத்தினர்கடைசியில்இவர்களுக்கு,மறுநாள் புதிய தேர்வு நடத்தப்பட்டதுசென்னை செங்குன்றத்தில்அமைக்கப்பட்ட மையத்திலும், 'சர்வர்பிரச்னை ஏற்பட்டதுஇப்படி,பல மையங்களில் குளறுபடி ஏற்பட்டதன் காரணமாகஆன்-லைன் வழிதேர்வுதேவைதானா எனதேர்வாணையம் ஆலோசித்து வருகிறது.மின்சார பிரச்னையையும்தொழில்நுட்ப பிரச்னையை யும்தவிர்க்கமுடியாது என்பதால்ஆன்-லைன் வழி தேர்வை ரத்து செய்ய,தேர்வாணையம் முடிவு செய்துள்ளதுஇது குறித்துவிரைவில், 'போர்டுகூட்டத்தில் ஆலோசித்துமுடிவு எடுக்கப்பட உள்ளது.

சரியாக திட்டமிடாததால் தோல்வியில் முடிந்த திட்டம்பெரிய அளவில்நடத்தப்படும் எந்தத் திட்டத்தையும்அரசு அதிகாரிகள் திறம்படக்கையாள்வதில்லை என்ற குற்றச்சாட்டுஅடிக்கடி எழுகிறதுஅரசுசெயல்படுத்தும் இலவச திருமணமானாலும்நலத் திட்டஉதவிகளானாலும்எப்போதும் குழப்பமே மிஞ்சுகிறதுதாலிக்குத்தங்கம் திட்டத்தில் கூடபயனாளிகளுக்குதிருமணமாகிகுழந்தைபிறந்த பிறகேஅரசின் தங்கத் தாலி கொடுக்கப்படுகிறது.டி.என்.பி.எஸ்.சி., தேர்வில்அதிக அளவில் தேர்வர்கள் கலந்துகொள்வர் என்பதுஅரசு அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிந்தும்,போதுமான அளவு ஏற்பாடுகள் செய்திருக்கவில்லைதேர்வுமையங்களைத் தேர்ந்தெடுக்கும்போதேஅவற்றில்மின் வசதி,கம்ப்யூட்டர் சர்வர் வசதிகள் உள்ளனவா என்பதைச் சரிபார்க்கவேண்டியதுதேர்வு நடத்தும் அமைப்பின் கடமை. 'ஏற்பாடுகளைதுல்லியமாகச் செய்யாமல்மேம்போக்காக கடமையாற்றும்அதிகாரிகளின் போக்கேஇத்தகைய குழப்பங்களுக்குக் காரணம்என,தேர்வர்கள் கூறுகின்றனர்.

25%

தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு: 1.39 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு: பள்ளி கல்வித் துறைச் செயலர் சபிதா

நலிவுற்றவாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில்25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1 லட்சத்து 39ஆயிரத்து 805 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என மாநில பள்ளி கல்வித்துறைச் செயலர் சபிதா கூறினார்பள்ளி கல்வித் துறை சார்பில்
குழந்தைகள் தின விழாடாக்டர் எஸ்.ஆர்அரங்கநாதன் விருதுவழங்கும்
விழா வெள்ளிக்கிழமை (நவ.14) கொண்டாடப்பட்டது.
இதில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.சிவீரமணி பங்கேற்றுகட்டுரைபேச்சுப் போட்டிபல்வேறு விளையாட்டுப் போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு பரிசுகளையும்சான்றிதழ்களையும் வழங்கியதோடுசிறந்த 30 நூலகர்களுக்கு டாக்டர்எஸ்.ஆர்அரங்கநாதன் விருதுகளையும் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறைச் செயலர் சபிதா பேசியது:
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பள்ளி கல்வித் துறைமேம்பாட்டுக்காக தமிழக அரசு ரூ. 64 ஆயிரத்து 485 கோடி நிதிஒதுக்கியுள்ளதுஇதில் மாணவமாணவிகளுக்கு வழங்கப்படும் 14வகை நலத் திட்டங்களுக்காக மட்டும் ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டிருக்கிறது.
பள்ளி மாணவமாணவிகளுக்கு தரமான கல்வி கிடைக்க வழிசெய்யும் வகையில் காலியாக இருந்த 76,338 ஆசிரியர் பணியிடங்களைநிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுஇதுவரை 72,557 ஆசிரியர்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றிஆசிரியர் அல்லாத 15,820 பணியிடங்களை நிரப்பதமிழக அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்இதுவரை 8,881பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நலிவுற்றவாய்ப்புமறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனியார் கல்லூரிகளில் 25 சதவீதஇடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை முழுமையாகஅமல்படுத்துவதில் தமிழக அரசு தீவிர முனைப்பு காட்டியது.
அதன் காரணமாகவேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு2013-14 கல்வியாண்டில் 49,864 மாணவமாணவிகள், 2014-15கல்வியாண்டில் 89,941 மாணவமாணவிகள் என மொத்தம் 1 லட்சத்து39 ஆயிரத்து 805 நலிவுற்ற மாணவர்கள் இந்த சட்டத்தின் கீழ் தனியார்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்காக மத்திய அரசின் சார்பில் தமிழகத்துக்கு பாராட்டும்தெரிவிக்கப்பட்டது என்றார் அவர்.


விழாவில் முன்னதாகபள்ளி மாணவமாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Wednesday, November 12, 2014

Ration

ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகள் !
தமிழகத்தில் ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் அட்டைகளை வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை ஏற்கனவே அரசு வெளியிட்டுள்ளது.
‘‘பயோமெட்ரிக்’’ அடையாளம் என்று அழைக்கப்படும் விரல் ரேகை, கருவிழி பதிவு ஆகியவற்றுடன் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படவுள்ளன.தற்போது டிசம்பர் 31–ந் தேதியுடன் ரேஷன் அட்டைகளின் காலம் முடிவடைகிறது. எனவே அவற்றில் உள்தாள் ஒட்டப்பட்டு, குறிப்பிட்ட காலம் வரை அதன் ஆயுள் அளவு நீட்டிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசின் ஆதார் அட்டைகள் வழங்கும் பணி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தேசிய மக்கள் தொகை பதிவின் (என்.பி.ஆர்.) அடிப்படையில் ஆதார் அட்டைகள் வழங்கப்படுகின்றன.தற்போது தமிழகத்தில் மக்கள் தொகையின் எண்ணிக்கை 7 கோடிக்கும் மேலாக உள்ளது. இங்கு 4.91 கோடி பேர் (73 சதவீதம்) பேர் என்.பி.ஆர். பதிவில் உள்ளனர். இவர்களில் 4.65 கோடி பேருக்கு ஆதார் எண்கள் அல்லது ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன.

ஆதார் அடிப்படையில் ஸ்மார்ட் அட்டைகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் தமிழகத்தில் முழுமையாக என்.பி.ஆர். பதிவு நடைபெறவில்லை. எனவே விடுபட்டுப்போனவர்களையும், புதிதாக பிறந்தவர்களையும் சேர்ப்பதற்காக இம்மாதம் 15–ந் தேதியில் இருந்து தாலுகா அளவில் முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இதன் மூலம் அனைத்து மக்களையும் என்.பி.ஆர். பதிவில் சேர்ப்பதற்கு முழு முயற்சி எடுக்கப்படுகிறது. அதன் பின்னர் என்.பி.ஆரின் அடிப்படையில் விடுபட்டுப்போனவர்களுக்கு ஆதார் எண்களை மக்களுக்கு மத்திய அரசு வழங்கும்.தற்போது அதிக அளவில் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அங்கு 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுவிட்டதால், ஸ்மார்ட் அட்டைகளை தயாரிக்கும் பணியை தொடங்க, அந்த இரண்டு மாவட்டங்களையும் தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.

இந்த மாவட்டங்களில் விடுபட்டுப்போனவர்களுக்கு முகாம்கள் மூலம் ஆதார் எண்கள் வழங்கப்பட்ட பிறகு, ஸ்மார்ட் அட்டைகளை தயாரிக்கும் பணியை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.விரல் ரேகை, கருவிழி போன்ற பயோ மெட்ரிக் பதிவுகளோடு, ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் அட்டைகள் தயாரிக்கப்படுவதால், 100 சதவீத போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்க முடியும்.

School noon meal

பள்ளி மாணவர் மதிய உணவு திட்டம் 15 வகை காய்கறிகளை சேர்க்க உத்தரவு
பள்ளி மாணவர் மதிய உணவுத் திட்டத்தில், மாதாந்திர உணவு பட்டியலில், 15 வகையான காய்கறிகள் சேர்க்க, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

அதிக விலை: - நமது நிருபர் --மைசூரு மாவட்டத் தில், பள்ளி மாணவ, மாணவியர், 2.6 லட்சம் நபருக்கு, மதிய உணவு வழங்கப்படுகிறது. வழக்கமாக கத்தரி, முட்டை கோஸ், நூல்கோல், மங்களூரு வெள்ளரி ஆகியவற்றையே பயன் படுத்துகின்றனர்.

சில பள்ளிகளில், புடலை, பூசணி, சுரை, பீட்ரூட், முருங்கை ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். அதிக விலை என்பதால், பீன்ஸ், காரட் ஆகியவற்றை உணவில் சேர்ப்பதில்லை. இனி, வாரம் இருமுறை, பீன்ஸ், காரட் ஆகியவற்றை பயன்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. கீரைகளை சுத்தம் செய்வது சிரமம் என்பதால், அவையும் மதிய உணவில் சேர்க்கப்படவில்லை. இனி, கீரைகளை சேர்ப்பதுடன், விலை குறையும் போது, அனைத்து வகை காய்கறிகளையும் சேர்க்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

மதிய உணவில், குறிப்பிட்ட சில காய்கறிகளே திரும்ப, திரும்ப சமைப்பதாக, மாணவர்கள் எழுப்பிய புகாரை அடுத்து, இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மதிய உணவில், 15 வகை காய்கறிகளை உணவு பட்டியலில் சேர்க்க, அதிகாரிகள் தீர்மானித்து உள்ளனர்.

சுலபமாக, மலிவாக கிடைக்கும், காய்கறிகளை தொடர்ந்து பயன்படுத்தாமல், அனைத்து ரக காய்கறிகளையும் பயன்படுத்த உத்தரவிட்டுள்ள, அக்ஷரா தசோஹா அதிகாரிகள், காய்கறி வகைகளை, 'ருச்சி' புத்தகத்தில், குறிப்பிடக் கூறியுள்ளனர். அதிகாரிகள் ஆய்வின் போது, இந்த புத்தகத்தை பார்வையிடுவர்.

உத்தரவிட்டு உள்ளோம் : கர்நாடகா அக்ஷரா தசோஹா செயல் இயக்குனர், உதயகுமார் கூறுகையில், "மதிய உணவுத் திட்டத்தில், சத்துடன், ருசியாக இருப்பதற்காக, 15 வகை காய்கறிகளை வாங்கி, சமைக்க உத்தரவிட்டு உள்ளோம். தாவரவியல் ஆசிரியர்களும், ஒவ்வொரு காய்கறியின் சத்துக்கள் குறித்து, மாணவர்களுக்கு, விளக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளோம்,” என்றார்.

Tuesday, November 11, 2014

Trb post

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே வருங்காலத்தில் ஆசிரியர் பணி நியமனம்!

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 6 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 67 பேர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் தமிழக அரசின் இரண்டு அரசாணைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த அனைத்து தேர்வாளர்களுக்கும் அரசு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மனுதாரர்கள், வெயிட்டேஜ் மதிப்பெண்களால் பலரும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு சாதகமாகவும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மனுதாரர்களுக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கியதும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Pension

ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற நேரில் வரத்தேவையில்லை, 'ஜீவன் பிரமான்’ என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி

மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். அவர்கள், தாங்கள் உயிருடன் இருப்பதை நிரூபிப்பதற்காக, ஆண்டுதோறும் நவம்பர் மாதம், அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராக வேண்டும் அல்லது குறிப்பிட்ட அதிகாரிகள் கையெழுத்திட்ட உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி செய்தால்தான், அவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் கிடைக்கும். இந்த நடைமுறை, ஓய்வூதியதாரர்களுக்கு சிரமமானதாக இருந்து வருகிறது.

இந்நிலையில், அவர்களின் நலனுக்காக, ‘ஜீவன் பிரமான்’ என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இது, ‘ஆதார்’ அடிப்படையிலான டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் திட்டம் ஆகும்.
இதற்காக, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை, ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷனை உருவாக்கி உள்ளது. இதன்படி, ஓய்வூதியதாரர் தனது கம்ப்யூட்டரிலோ அல்லது ஸ்மார்ட் போனிலோ பயோமெட்ரிக் விவரங்களை படித்தறியக்கூடிய கருவியை பொருத்திக் கொள்ள வேண்டும். அதைப் பயன்படுத்தி, தனது ‘ஆதார்’ எண், பயோமெட்ரிக் தகவல்கள், அப்போதைய நேரம், நாள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை மத்திய விவரத்தொகுப்புக்கு (டேட்டா பேஸ்) அனுப்பி வைக்க வேண்டும். அதன்மூலம், ஓய்வூதியத்தை விடுவிக்கும் அமைப்பு, டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழை பெற்றுக்கொள்ளும்.

சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர், அந்த நேரத்தில் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு இதுவே ஆதாரமாக கொள்ளப்படும். அதன் அடிப்படையில், அவரது வங்கிக்கணக்கில் ஓய்வூதியம் வரவு வைக்கப்படும். கூடுதல் செலவின்றி, ஓய்வூதியதாரர்கள் இச்சேவையை பெறுவதற்காக, சிறப்பு மையங்களும் இயக்கப்பட உள்ளன.

Halfyearly

அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாற்றம் !

பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அதிரடி
பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில், அரையாண்டு விடுமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், 433 அரசு பள்ளிகளும், 270 தனியார் பள்ளிகளும் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகளை நடத்தி, விடுமுறை விடுவதற்கும், அரசு பள்ளிகளில் தேர்வு முடிந்து, விடுமுறை அறிவிப்பதற்கும், பெரும் வித்தியாசம் இருந்து வந்தது.
குறிப்பாக, அரையாண்டு தேர்வை பொருத்தவரை, டிசம்பர் மூன்றாவது வாரத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக, தேர்வை முடித்து, விடுமுறை அறிவிப்பது, பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வழக்கமாக உள்ளது. அரையாண்டு விடுமுறைக்கு பின், ஜனவரி முதல் வாரத்தில், தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். அரசு பள்ளிகளில், டிசம்பர் கடைசியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில்தான், அரையாண்டு தேர்வு துவங்கும். பின், விடுமுறை அளிக்கப்பட்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் முடிந்து, 19ம் தேதிக்கு பிறகே, அரசு பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம்.
பொதுத் தேர்வுக்கு தயாராகும், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜனவரி மாதம் என்பது மிக முக்கியமான காலக்கட்டமாகும். ஏனென்றால், பொதுத் தேர்வு துவங்குவதற்கு ஓரிரு மாதங்களே இருக்கும் சூழ்நிலையில், ஜனவரி மாதத்தில் பள்ளிகள் இயங்கினால்தான், பாடங்களை மீள்பார்வை செய்ய முடியும்; ரிவிஷன் தேர்வுகளை நல்ல முறையில் எழுத முடியும்.
எனவே, அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, தேர்வு அட்டவணை, விடுமுறை போன்றவற்றை, பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரிகள் அதிரடியாக மாற்றி அமைத்துள்ளனர்.
இதன்படி, காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, கடந்த அக்டோபர் 3ம் தேதியன்று, தனியார் பள்ளிகளை போலவே, அரசு பள்ளிகளும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக, அரையாண்டு தேர்வு மற்றும் விடுமுறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.
அரசு பள்ளிகளில், அரையாண்டு தேர்வு, டிசம்பர் இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் நடத்தி முடிக்கப்படும். டிசம்பர் நான்காவது வாரத்தில், அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு, ஜனவரி 2ம் தேதியன்று, அரசு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளின் நடவடிக்கை, பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குருமூர்த்தி

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவ பாடங்கள் வீடியோ வடிவில்...

அன்புமிக்க ஆசிரியர்களுக்கு வணக்கம்!

திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம், களத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்கள், 

1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்கள் (கணிதம் தவிர) தொடர்பான வீடியோ காட்சிகளை பல்வேறு இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து, பாடப்பகுதிக்கு உரிய விளக்கங்களுடன் கூடிய வீடியோ காட்சிகளாக தயார் செய்துள்ளார்.
  எனது நண்பர் குருமூர்த்தி 
இவர் தயாரித்துள்ள வீடியோ காட்சிகளை பார்வையிட்ட திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.பாரி அவர்கள் , இவரை பாராட்டியதுடன் மட்டுமல்லாமல் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல ஒன்றியங்களில் இந்த வீடியோ காட்சிகளை காண செய்ததன் அடிப்படையில் பெரும்பாலான பள்ளி தலைமை ஆசிரியர்கள் இந்த வீடியோ குறுந்தகட்டை வாங்கி தங்கள் பள்ளிகளில் பயன்படுத்தி பயன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது.

இவர் தயாரித்துள்ள முதல் பருவத்துக்கான வீடியோ குறுந்தகட்டை நமது Trs Trichy முகநூல் , மற்றும் பல்வேறு கல்விசார் இணைய தளங்கள் செய்திகள் வெளியிட்டதன் அடிப்படையில் பல ஆசிரியர்கள் இவரின் குறுந்தகட்டை வாங்கி தங்கள் பள்ளிகளில் பயன்படுத்தியதுடன் மட்டுமல்லாது இவரின் உழைப்பை வியந்து பாராட்டினர் என்பது குறிப்படத்தக்கது. 

1,2,3,4,5 ஆம் வகுப்புகளுக்கு தலா ஒரு குறுந்தகடு வீதம் 5 குறுந்தகடுகளின் விலை ரூபாய்.200/- மட்டுமே. (குரியர் செலவு உட்பட).

மேற்கண்ட குறுந்தகடுகளை வாங்க விரும்புவோர் திரு.குருமூர்த்தி அவர்களின் தொலைபேசி எண்ணை மாலை 6 மணிக்கு மேல் தொடர்பு கொள்ளவும். 

குருமூர்த்தி அவர்களின் தொலைபேசி எண் 9791440155

ஆசிரியர் திரு.குருமூர்த்தி, தான் தயாரித்துள்ள வீடியோ காட்சிகள் மூலம் தனது மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதை தான் இந்த படத்தில் காண்கிறீர்கள்!

cps

Online CPS Instructions

          ஆன்லைன் மூலமாக புதிதாக பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கு புதிய சி.பி.எஸ். எண் பெறுவது எவ்வாறு? - எனும் விளக்கம் நமது பாடசாலை வலைதளத்தில் வெளியிட்டுள்ளோம். பயனுள்ள இக்கட்டுரையை பதிவிற்க்கம் செய்து பயன்படுத்துமாறும், தங்கள் நண்பர்களுக்கும் இத்தகவலை பரிந்துரைக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.



cps