Wednesday, April 30, 2014

excel form cce

தொடக்க கல்வித்துறை GRADE போடும் EXCEL FORMATE

                                                                              இங்கே கிளிக் செய்ய

Tuesday, April 29, 2014

HSC RESULT

மே 9ம் தேதி காலை 10:00 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவை, நான்கு இணையதளங்களில், தேர்வுத்துறை வெளியிடுகிறது

 பிளஸ் 2 தேர்வு முடிவை, நான்கு இணையதளங்களில், தேர்வுத்துறை வெளியிடுகிறது; முகவரிகளை, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நேற்று வெளியிட்டார்.
அதன் விவரம்: மாணவர்கள், மே 9ம் தேதி காலை 10:00 மணி முதல், www.tnresults.nic.inwww.dge2.tn.nic.in,www.dge3.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில், தேர்வு முடிவை பார்க்கலாம். நான்காவதாக, www.dge1.tn.nic.in, என்ற இணையத்திலும், "ஸ்மார்ட் போன்' மூலம், முடிவைப் பார்க்கலாம்.

இணையதளத்தில் பார்க்க, தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். தேர்வு முடிவை, மதிப்பெண்களுடன், 0928223 2585 என்ற மொபைல் எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி பெறலாம். இதற்கு, TNBOARD/RN/DOB என்பதற்கு ஏற்ப, TNBOARD/ மாணவரின் பதிவு எண் (RN)/ பிறந்த தேதி (DOB) ஆகியவற்றை பதிவு செய்து, எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். மே 9ம் தேதி காலை 10:00 மணிக்கு முன், எஸ்.எம்.எஸ்., அனுப்பக் கூடாது. மாவட்டங்களில் உள்ள, தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணம் இன்றி தேர்வு முடிவை அறியலாம். மாணவர்கள், தங்களது பள்ளிகளுக்கு, நேரில் சென்றும் தேர்வு முடிவை அறியலாம்.

2003 PANEL

2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க நீதிபதி உத்தரவு

2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் ராவ் & ரெட்டி வாதாடினார். அவர் 2013 முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என வாதிட்டார். இதனை விசாரித்த நீதியரசர் நாகமுத்து அவர்கள், 2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். தீர்ப்பின் நகல் விரைவில் வெளியிடப்படும். வழக்கு எண். W.P.NO:9247.

Friday, April 25, 2014

TRs

ஓட்டுபோடுவதில் அரசு ஊழியர்களுக்கு ஆர்வமில்லை !

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தங்களது ஓட்டுரிமையை பயன்படுத்த ஆர்வமின்றி உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 57 சதவீதத்தினர் மட்டுமே தபால் ஓட்டு பெற்றுள்ளனர்.


ஜனநாயக நாடான இந்தியாவை நிர்வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளை, ஓட்டுரிமை பெற்ற மக்களே தேர்வு செய்து வருகின்றனர். இதற்காக தேர்தல் ஆணையம், ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்காளர் பட்டியலை தயாரித்து வருகிறது. பட்டியலில் இடம் பெற்றவர்களில் 60 முதல் 70 சதவீதத்தினரே தேர்தலில் ஓட்டு போடுகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை, ஓட்டுச் சாவடிகளில் நெரிசல், ஓட்டுப்பதிவு நேரம் குறைவாக உள்ளதே ஓட்டுப்பதிவு குறைவிற்கு காரணமாக கூறப்பட்டது. இந்த குறைபாடுகளை 16வது லோக்சபா தேர்தலில் நீக்கிட தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடு செய்துள்ளது. அதனையொட்டி கடந்த 2011 சட்டசபை தேர்தலை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொண்டு, கடந்த 5ம் தேதி இறுதி பட்டியலை வெளியிட்டது.

நேரம் அதிகரிப்பு
அனைத்து வாக்காளர்களும் ஓட்டுப் போட வசதியாக கிராமங்களில் 1300 பேருக்கும், நகரங்களில் 1500 பேருக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைத்ததோடு, ஓட்டுப்பதிவு நேரத்தையும் 2 மணி நேரம் அதிகரித்தது. ஓட்டுரிமையின் அவசியத்தை விளக்கி தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த மூன்று மாதங்களாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கலைக்குழுக்களை கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியது. பிரபல நடிகர்களை கொண்டு ரேடியோ மற்றும் தொலைக்காட்சிகள் வழியாகவும் பிரசாரம் செய்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து பல வர்த்தக நிறுவனங்களும், தேர்தல் அன்று ஓட்டு போட்டுவிட்டு வரும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை கிராமப்புற மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படித்தவர்களில் குறிப்பாக அரசு ஊழியர்களில் பலர் இன்னமும் ஓட்டுப் போடுவதில் ஆர்வமின்றி உள்ளனர்.

தபால் ஓட்டு
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு, தபால் ஓட்டு போடும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் உரிய படிவத்தை பூர்த்தி செய்து தேர்தலுக்கு முன்பாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பித்தால், அந்த முகவரிக்கு ஓட்டுச் சீட்டு தபாலில் அனுப்பி வைக்கப்படும். அதில், தனது ஓட்டை பதிந்து ஓட்டு எண்ணுவதற்கு முதல் நாளுக்கு முன்பாக தொகுதி தேர்தல் அலுவலகத்தில் வைத்துள்ள சீலிடப்பட்ட ஓட்டுப் பெட்டியில் சேர்க்க வேண்டும். சொந்த தொகுதியிலேயே பணிபுரிபவர்கள், தேர்தல் ஆணைய சான்றை சமர்பித்து, தாங்கள் பணிபுரியும் ஒட்டுச் சாவடிகளிலேயே ஓட்டளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

57 சதவீதம்
விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் 14 ஆயிரத்து 530 அரசு ஊழியர்கள், 4,681 போலீசார் ஈடுபடுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தபால் ஓட்டிற்கான படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில், அரசு ஊழியர்களில் 8,461 பேரும், போலீசாரில் 2,490 பேர் மட்டுமே படிவத்தை பூர்த்தி செய்து, ஓட்டுச் சீட்டு கேட்டு சமர்பித்துள்ளனர். இது தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களில் 57 சதவீதமாகும். அவர்களுக்கு மட்டுமே ஓட்டுச் சீட்டு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓட்டுப் போடுவது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை என வீதி, வீதியாக பிரசாரம் செய்த அரசு ஊழியர்களே ஓட்டுப்போட ஆர்வமின்றி உள்ளதையே இது காட்டுகிறது.

Saturday, April 19, 2014

FORMS

தொடக்க நடுநிலைப்பள்ளிகள் ஆண்டு இறுதி தேர்ச்சி ஒப்புதல் பெறும் போது உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்கள்

    தொடக்க கல்வித்துறையில் ஆண்டு இறுதியில் ஒப்டைக்கவேண்டிய படிவங்கள் 

                                                                                                     இங்கே கிளிக் செய்ய

     FONT பெற

                                                                                       FONT இங்கே கிளிக் செய்ய

Monday, April 7, 2014

1 மார்க்

SSLC science ONE MARK
 
    இன்று 7/4/14 நடைபெற்ற அறிவியல் தேர்வு ஒரு மதிப்பெண் வினா விடை

இங்கே கிளிக் செய்ய

Sunday, April 6, 2014

SGT PAY

இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 வழங்க முடியாது என நிதித்துறை கூறிடும் காரணம்

இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 வழங்க முடியாது என நிதி துறை கூறிடும் காரணம் 

அ .ஆ .எண் ;1383 கல்வி .நாள்.23.8.1988.ன் படி தொடக்க கல்வி சார்நிலை பணி விதிகள் .விதி 6 ன் படி இடை நிலை ஆசிரியர் கல்விதகுதி SSLC, மற்றும் சான்றிதழ் கல்வி என உள்ளது ,விதி 9 ன் படி நியமனம் ஒன்றிய அளவிலானது என உள்ளது.


        இதை கல்வி உரிமை சட்டம் 2009 ன் படியும் ,உச்ச நீதி மன்ற தீர்ப்பு படி மாற்றி அமைத்திட மனு அனுப்ப பட்டது .மீண்டும் வரும் 8.4.14.அன்று நேரில் இயக்குனரிடம் கொடுக்கப்பட உள்ளது .

            இந்த அ .ஆ .எண் ;1383 கல்வி .நாள் ;23.8.1988 மாற்றி தற்போதைய உண்மை நிலை படி இடை நிலை ஆசிரியர் கல்வி தகுதி +2 , டிப்ளமா என மாற்றம் செய்ய பட்டால் நமது ஊதியம் 9300+4200 என நிதி துறை மாற்றம் செய்துதான் ஆக வேண்டும்.
செய்தி பகிர்வு : கிப்சன், TATA

Thursday, April 3, 2014

DA GO


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியிடப்பட்டது
        தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. முறையான அரசாணை வெளியாகி யுள்ளது ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி ஜனவரி 2014 முதல் 100% ஆக உயரந்துள்ளது எனவும், ஜனவரி 2014 முதல் மார்ச் 2014 வரையிலான 3 மாத அகவிலைப்படி நிலுவை, ரொக்கமாக வழங்க உள்ளது எனவும் அரசாணை 90 நாள் 3/4/2014 வெளியாகியுள்ளது.

GO NO 96 DATE 03.APRIL 2014
இங்கே கிளிக் செய்ய                  

Wednesday, April 2, 2014

EB

EB - MOBILE NUMBER REGISTRATION

            மின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலுவலகம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே ஆன்லைன் முலம் பதிவு செய்யலாம்


          இதற்கு முதலில் இந்த லிங்கை கிளிக் செய்யவும், பின்னர் தங்களது மண்டலத்தை தேர்வு செய்யவும்.

           அடுத்து தங்களுடைய 9 அல்லது 10 இலக்க மின்இணைப்பு எண்ணை கொடுத்து Validate என்பதை கிளிக் செய்யவும். இந்த செய்தியை தங்கள் பகிர்ந்து உதவவும்.

DA

10% DA: அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு.

           10% DA: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல்; அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு.


          மத்திய அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் அறிவித்தாலும், அரசாணை கடந்த மார்ச் 27ம் தேதி தான் வெளியானது. 
 
           இதையடுத்து தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து இன்னும் ஒரிரு நாட்களில் முறையான அரசாணை வெளியாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி ஜனவரி 2014 முதல் 100% ஆக உயரவுள்ளது எனவும், ஜனவரி 2014 முதல் மார்ச் 2014 வரையிலான 3 மாத அகவிலைப்படி நிலுவை, ரொக்கமாக வழங்க உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Friday, March 28, 2014

DEPARTMENT EXAM


துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்:

இடைநிலை ஆசிரியர்கள்

1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools) (without books)

2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
(Relating to Elementary Schools) (Without Books)

3. 119 - Deputy Inspector’s Test
Educational Statistics (With Books).

4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).

பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).

மாவட்டக்கல்வி அலுவலர்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test

(Previously the District Office Manual--Two Parts) (With Books).

BOARD

தொடக்கக்கல்வி இயக்குனர் உத்திரவு

          பள்ளி மற்றும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களில் தகவல் பலகையில் எழுதி வைக்கவேண்டிய விவரங்கள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் உத்திரவு

AEEO Office Registers - Click Here

Sunday, March 23, 2014

FB

தலைமைச் செயலகம் உள்படஅரசு துறை அலுவலகங்களில் ஃபேஸ்புக், டிவிட்டருக்கு தடை.


          தலைமைச் செயலகம் உள்பட அரசுத் துறை அலுவலகங்களில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றசமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

            தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.அரசுத் துறைகளின் தலைமை அலுவலகங்கள், ஆணையர் அலுவலங்கள்ஆகியன தலைமைச் செயலகம், சென்னை சேப்பாக்கம் எழிலகம் ஆகியவற்றில் இயங்கி வருகின்றன.

           இந்த அலுவலகங்களில் கம்ப்யூட்டர்களுடன் இணையதள வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.இந்த இணையதள வசதியைப் பயன்படுத்தி, அரசுத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். மக்களவைத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சமூக ஊடகங்களை அலுவலக நேரங்களில் பார்க்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அரசுத் துறைகளின் அனைத்து கம்ப்யூட்டர்களிலும், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களைப் பார்க்க முடியாதபடி அவற்றை தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளதுதேர்தல் ஆணையம்.

          இதுகுறித்து, தேர்தல் துறை அதிகாரிகள் கூறுகையில், அரசுத் துறைகளில் உள்ளவர்களில் பலரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சமூக ஊடகங்களில் அவர்கள் கருத்துகளைத் தெரிவிப்பதும், பதிவு செய்வதும், தேர்தல் பணியின் போது அவர்களது நடுநிலையை பாதிக்கச் செய்யும். எனவே, அலுவலக நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியாதபடி அவை தடை செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

TET

TNTET NEWS - தகுதி தேர்வில் விலக்கு: குழப்பத்தில் ஆசிரியர்கள்

 
        ஆசிரியர் தகுதி தேர்வில், விலக்கு அறிவிக்கப்பட்டும், தகுதி காண் பருவத்திற்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின், பணிப் பதிவேடுகள் (எஸ்.ஆர்.,கள்) பரிசீலிக்கப்படுவதில்லை, என சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், 18 ஆயிரம் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
 
                தமிழகத்தில், 2010 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடைமுறையில் உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2012ல் அறிவிக்கப்பட்ட ஓர் உத்தரவில் (எண்:04/2012), 23.8.2010க்கு முன் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அதுதொடர்பான நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால், 23.8.2013க்கு பின் பணி நியமனம் செய்வதில், அந்த ஆசிரியருக்கு டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, மாநிலத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், 2010 முதல் 2012 வரை, 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள், டி.இ.டி., தேர்வு எழுத தேவையில்லை என, அப்போது அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், பணியேற்று இரு ஆண்டுகள் நிறைவடைந்த ஆசிரியர்கள், தகுதி காண் பருவத்திற்காக, அவர்களது பணிப் பதிவேடுகளை, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படி அனுப்பப்படும் பணிப் பதிவேடுகளை கல்வி அதிகாரிகள் பரிசீலித்து, 'உங்கள் பணி நியமன உத்தரவில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் தான், உங்களது தகுதி காண் பருவத்தை முடிக்க இயலும்,' என பதில் கூறி, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், 'டி.இ.டி., தேர்வில், அரசு விலக்கு அளித்தும், அது நடைமுறைப்படுத்தவில்லை,' என்றனர்.

Saturday, March 22, 2014

Group IV

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல்கட்டமாக 6 ஆயிரம் பேருக்கு கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 24-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் எடுத்த சுமார் 12 லட்சம் பேரின் மதிப்பெண் விவரங் கள் அடங்கிய ரேங்க் பட்டியல், டி.என்.பி.எஸ்.சி. இணையதளத் தில் வெளியானது. காலியிடங்க ளின் எண்ணிக்கை 5,853 ஆக அதிகரிக்கப்பட்டது. 

தேர்வில் வெற்றி பெற்று கலந் தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் விவரம் ஏதும் வெளியிடப்பட வில்லை. வழக்கமாக தேர்வு முடிவை வெளியிடும்போது, தேர்ச்சி பெற்றவர்களின் பதிவு எண்களை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுவிடும். இந்தமுறை அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்படாததால், தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர் ஆகிய பதவிகளுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. புதன்கிழமை வெளியிட்டது. 

அதன்படி, பொது தரவரிசையில் முதல் 6 ஆயிரம் இடங்களுக்குள் இடம்பெற்றிருப்பவர்கள் கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலந்தாய்வு, வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. 28-ம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கும் ஏப்ரல் 1 முதல் பொது தரவரிசையில் இடம்பெற்றிருப்பவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். முதல் நாளில் கலந்தாய்வு, மறுநாள் சான்றிதழ் சரிபார்ப்பு என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி மே 8-ம் தேதி முடிவடையும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார். 

DA

TNGOVT 10% D.A | தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் 10 சதவீத அகவிலைப்படியை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழக அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Pallikudam

அழகப்பா பல்கலை., மத்திய பல்கலையாக மாறுமா?

               காரைக்குடி அழகப்பா பல்கலையை, மத்திய பல்கலையாக மாற்ற ஆளும் அரசு முயற்சி செய்ய வேண்டும்" என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பல மாவட்டங்களில், அரசு மருத்துவக்கல்லூரி இயங்கி வரும் இடங்களில், நர்சிங் கல்லூரியும் சேர்ந்து இயங்கி வருகிறது. இதன் மூலம் கிராமப்புற ஏழை மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
 
                 சிவகங்கையில், அரசு மருத்துவ கல்லூரி அமைந்த போதும் நர்சிங் கல்லூரி அமைக்கப்படவில்லை. நோயாளிகள் பல்வேறு நேரங்களில், பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே, சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், அரசு நர்சிங் கல்லூரி அமைக்க வேண்டும். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் வறட்சியாக இருந்தாலும், "வானம் பார்த்த பயிர்களான" மிளகாய், கடலை விவசாயம் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு விவசாய கல்லூரி அமைந்தால், அது பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். செட்டிநாடு கால்நடை பண்ணைக்கு சொந்தமாக 900 ஏக்கருக்கும் மேல் நிலம் உள்ளது. இட வசதி இருந்தும், இதற்குட்பட்ட பெரும்பாலான பகுதி, தரிசாகவே விடப்பட்டுள்ளது. எனவே, இங்கு, கால்நடை கல்லூரி அமைக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே உள்ளது. சிவகங்கை மாவட்டம், தொன்று தொட்ட நாகரீகத்தை கொண்டது. இங்கு பல்வேறு நாட்டினரும் சுற்றுலாவாக, வந்து செல்கின்றனர். எனவே, எல்லா நாட்டு கலாசாரத்தையும் தெரிந்து கொள்ளும் வகையிலும், கற்று கொள்ளும் வகையிலும், தேசிய பண்பாட்டு மையம் அமைக்க வேண்டும். அழகப்பா பல்கலையை, அழகப்ப செட்டியார் மத்திய பல்கலைக்கழகமாக ஆக்க வேண்டும் என கனவு கண்டார். 
 
              மத்தியில் அ.தி.மு.க,வுக்கு இணக்கமான, அரசு அமையும் பட்சத்தில், சிவகங்கை மாவட்ட மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, மத்திய பல்கலை கழகமாக மாற்ற தற்போதைய ஆளும் அரசு முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில், "அழகப்பா பல்கலையை இங்கு கொண்டு வந்தவரே, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,தான்." மேற்கண்ட கோரிக்கைகளை, தமிழக முதல்வர் கண்ணோக்கும் பட்சத்தில், சிவகங்கை மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி மேலும் மேம்படும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Wednesday, March 12, 2014

Passport

பாஸ்போர்ட் இனி அலைய வேண்டாம்!!!
           இனி தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பாஸ்போர்ட் எடுக்க, துறையின் தடையில்லா சான்று பெற இயக்குநர் அலுவலகத்துக்கு அலைய வேண்டாம்!

          இனி தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பாஸ்போர்ட் எடுக்க, துறையின் தடையில்லா சான்று பெற இயக்குநர் அலுவலகத்துக்கு அலைய வேண்டாம் : அரசாணை 140 P & AR DEPARTMENT நாள்: 21.11.2013-ஐ தொடக்க கல்வி துறையில் உடனே நடைமுறைப்படுத்த இயக்குநர் நடவடிக்கை.

              தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை சார்பில் கடந்த 21.11.2013 நாளிட்ட அரசாணை எண்:140 ன் படி, தமிழக அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல ஏதுவாக கடவுசீட்டு (பாஸ்போர்ட்) பெற துறையின் தடையில்லா சான்று துறைத்தலைவரால் பெறப்பட வேண்டும் என்ற விதியினை தளர்த்தி தமிழக அரசின் “B” “C” மற்றும் “D” ஊழியர்கள்
தடையில்லா சான்றினை இனி அவர்கள் துறை சார்ந்த நியமன அலுவலர்களே வழங்கலாம் என்று அதிகார பரவலின் கீழ் ஆணையிடப்பட்டது., இதன் மீது பள்ளி கல்வி துறை இயக்குநர் அவர்கள் 10.01.2014 உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார்.

           

Tuesday, March 11, 2014

Pallikudam


ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 30 இறுதி வேலை நாள்: தொடக்கக் கல்வித் துறை முடிவு

தொடக்கக் கல்வி - பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு பள்ளி வேலை நாட்களில் மாற்றம் I 23.4.14 முதல் 25.4.14 வரை விடுமுறை I 3ம் பருவத் தேர்வு ஏப்.,21ம் தேதி தொடங்கி ஏப்.,29வரை நடக்கிறது I மே1 முதல் கோடை விடுமுறை I தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு


      மாநிலம் முழுவதும், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, ஏப்., 23, 24ல் நடத்த வேண்டிய பொதுத்தேர்வை, தேர்தலுக்குப் பின் நடத்த, தொடக்கக் கல்வித் துறை, முடிவு செய்துள்ளது.

தற்போது, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடந்து வருகிறது. வரும், 26ல் இருந்து, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்வு துவங்குகிறது. இதற்கிடையே, இதர வகுப்பு மாணவ, மாணவியருக்கான, பொதுத்தேர்வும் நடக்கிறது. 

பள்ளிக் கல்வித் துறை கீழ் இயங்கும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்., 22 உடன், அனைத்து வகுப்புகளுக்கான தேர்வும் முடிந்துவிடுகிறது. எனவே, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, எந்த பிரச்னையும் இல்லை.

ஆனால், அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு, ஏப்ரல் இறுதி வரை, வேலை நாள். இதனால், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, இந்த மாத இறுதியில் துவங்கி, ஏப்., இறுதி வரை, பொதுத்தேர்வு நடத்த, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏப்., 23, 24 தேதிகளிலும், தேர்வு அட்டவணை உள்ளது.

பெரும்பாலான ஓட்டுச்சாவடிகள், ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் தான் அமைக்கப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு, ஏப்., 23, 24ல் நடக்க உள்ள தேர்வுகளை, தேர்தலுக்குப் பின் நடத்த, தொடக்கக் கல்வித் துறை, முடிவு செய்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை, ஓரிரு நாளில், அனைத்து பள்ளிகளுக்கும், இயக்குனரகம் தெரிவிக்கும்.

Pallikudam

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் இளங்கலை / முதுகலை / பட்டயப்படிப்புகள் முடித்த கணினி தெரிந்தவர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.