Pages
- HOME
- ஆசிரியர் தகுதி தேர்வு
- தொடக்க கல்வி
- அரசாணைகள்
- கற்பித்தல்
- பாடப்புத்தகம்
- துறை தேர்வு
- கல்வி
- கணினி நுட்பம்
- தமிழ் செய்தித்தாள்
- TN ABL CARDS
- PallikudamNEWS
- முக்கிய படிவம்
- செயல் முறைகள்
- தனி ஊதியம்
- Teachers resource
- B.Ed
- 2013
- TET CENTER
- முக்கியம்
- ENGLISH
- குழந்தை கதைகள்
- MATHS & SCIENCE
- ஜோசியம்
- HISTORY
- கணிதம்
Thursday, November 12, 2015
pallikudam
Wednesday, November 11, 2015
Tuesday, November 10, 2015
Pallikudam
ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி கட்டாயம்.
தமிழகத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் உயர்கல்வியை தொடர, முன் அனுமதி பெறுவது கட்டாயம் என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நேரடியாக உயர்கல்வியை தொடர, அரசு தடை விதித்துள்ளது. ஆனால், பகுதி நேரமாகவோ, தொலை துார கல்வி மையங்கள் வாயிலாகவோ உயர்கல்வியை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு, ஊக்க ஊதியம் போன்வற்றுக்கு கல்வி தகுதிகள் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதன் காரணமாக, அரசு பணியில் சேரும் பலர் உயர்கல்வியை பகுதி நேரமாகவும், தொலைதுாரக்கல்வி வாயிலாகவும் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், துறை அனுமதி இன்றி உயர்கல்வியில் சேர்பவர்கள், பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், உயர்கல்வி பயில விரும்பும் ஆசிரியர்கள் முன் அனுமதி பெறுதல் தொடர்பாகவும், யாரிடம் பெறவேண்டும் என்பது குறித்து குழப்பங்கள் எழுந்ததால், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில், கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மூலம் தகவல்கள் பெறப்பட்டது. அதன் படி, எம்.பில்., பிஎச்.டி., போன்ற ஆராய்ச்சி படிப்புகளில் சேர்பவர்கள் துறை தலைவரான பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் முன் அனுமதி பெற்று இருப்பது அவசியம். பி.எட்., எம்.எட்., போன்ற படிப்புகளுக்கு, பள்ளி தலைமையாசிரியரிடமே முன் அனுமதி பெற்றிருந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pallikudam
தப்பியது தமிழகம் ! புயல் அபாயத்தில் இருந்து தமிழகம் .....பல மாவட்டங்களில் கொட்டியது மழை.
Dinamalar Banner Tamil News வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த, காற்று அழுத்த தாழ்வு மண்டலம், கடலுார் அருகே, நேற்று இரவு கரையை கடந்தது. இதனால், புயல் அபாயத்தில் இருந்து தமிழகம் தப்பியது. எனினும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், பரவலாக கனமழை கொட்டியது.
வங்கக் கடல் பகுதியில் இருந்து, அரபிக் கடலை நோக்கி, காற்று அழுத்த தாழ்வு நிலை திரும்ப வாய்ப்பு உள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில், இன்றும் மழை உண்டு.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:வங்கக் கடலில், சென்னை - புதுச்சேரி இடையே மையம் கொண்டு இருந்த காற்று அழுத்த தாழ்வு நிலை, குறைந்த காற்று
அழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. 'இது, புயலாக மாற வாய்ப்பு உள்ளது; இன்று காலை, 6:30 மணியளவில் கரையை கடக்கும்' என, கணிக்கப்பட்டது.ஆனால், குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறாமல், கணிக்கப்பட்டதை விட முன்னதாகவே, நேற்று இரவு புதுச்சேரிக்கும், கடலுாருக்கும் இடையே கரையை கடந்தது. இது, தற்போது, அரபிக் கடலை நோக்கி திரும்பும் வாய்ப்பு உள்ளது. எனவே, தமிழகத்தின் வட மாவட்டங்களில், இன்றும் மழை நீடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
வேகம் தணிந்தது:
புயல் உருவாகவில்லை என்பதால், தமிழகம் தப்பியதுஎன்றே கருதப்படுகிறது. எனினும், காற்று அழுத்த தாழ்வு காரணமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், நேற்றும் கனமழை தொடர்ந்தது. மாலைக்கு பின், மழையின் வேகம் சற்று தணிந்தது.காற்று அழுத்த தாழ்வு மண்டலம், கரையை கடந்த போது, மணிக்கு, 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது; பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்கள் சாய்ந்து, விபத்து ஏற்படாமல் இருக்க, கடலுார் மற்றும் வட மாவட்டங்களின் சில பகுதிகளில், நேற்று முன்தினம் மதியம் முதலே, மின் வினியோகத்தை, தமிழ்நாடு மின் வாரியம் நிறுத்தி இருந்தது. கடற்கரை பகுதி மக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால், எட்டு மாவட்டங்களில், 10 செ.மீ.,க்கு மேல் மழை பெய்துள்ளது.காஞ்சிபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அதிகபட்சமாக, 20 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
7 பேர் பலி:
தமிழகத்தில் கனமழைக்கு, ஏழு பேர் பலியாகி உள்ளனர். சென்னையில், மூன்று பேர்; விழுப்புரம் மற்றும் அரியலுார் மாவட்டங்களில், தலா ஒருவர்; காஞ்சிபுரம் மாவட்டத்தில், இருவர் உயிரிழந்து உள்ளனர். மாநிலம் முழுவதும், நேற்று பிற்பகல், 2:00 மணி நிலவரப்படி, 300 வீடுகள் சேதமடைந்தன; 8,500 மரங்கள் சாய்ந்தன.
40 விமானங்கள் தாமதம்:
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால், சென்னை விமான நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று முன்தினம் முதல், கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னைக்கு வந்து செல்லும் விமானங்கள், நான்கு மணி நேரம் வரை தாமதமாக வந்து சென்றன; 40 விமானங்களின் சேவையில், நேற்று பாதிப்பு ஏற்பட்டது; பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை துறைமுகத்தில், மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
Pallikudam
'சஞ்சாயிகா' சேமிப்பு திட்டம் புத்துயிர் தருமா கல்வித்துறை
பள்ளி குழந்தைகள் மத்தியில் சிக்கனம், சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல ஆண்டுகளுக்கு முன், பள்ளி கல்வித்துறை மூலம், 'சஞ்சாயிகா' என்ற சிறுசேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
துவக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இத்திட்டம், நாளடைவில் முடங்கியது. இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவியர் மத்தியில், பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. அலைபேசி, சினிமா, சுற்றுலா என, வீணாக இப்பணத்தை செலவிடுகின்றனர்.
சிறு வயதில் மாணவ, மாணவியர் மத்தியில் சிக்கனம், சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். பள்ளிகளில், 'சஞ்சாயிகா' சிறுசேமிப்பு திட்டத்துக்கு புத்துயிர் தந்து, தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
Monday, November 9, 2015
Sunday, November 8, 2015
Pallikudamnews
7ம் வகுப்பு முதல் மாணவியருக்கு 'சுடிதார்':
அடுத்த கல்வியாண்டில் இருந்து, ஏழாம் வகுப்பு முதல், மாணவியருக்கு, 'சுடிதார்' வழங்க, துவக்க கல்வித்துறை, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'சைக்கிள் பாக்யா, ஷிர பாக்யா, ஷூ பாக்யா' கொடுக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது, ஏழாம் வகுப்பு முதல், மாணவியருக்கு, 'ஸ்கர்ட் - சர்ட்'க்கு பதிலாக, 'சுடிதார்' கொடுக்க வேண்டும் என, துவக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை, அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
முதல்வருடன், துவக்க கல்வித்துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் பேச உள்ளார்.அரசு ஒப்புதல் அளித்தால், அடுத்த கல்வியாண்டு முதல் இத்திட்டம் அமலுக்கு வரும். இதன் மூலம், ஏழாம் முதல், 10 வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு, 'சுடிதார்' வழங்கப்படும். இதற்காக, அரசுக்கு, 85 கோடி ரூபாய் செலவாகும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
Pallikudamnews
திறனாய்வு தேர்வில் தவறான விடையால் குழப்பம்
தமிழகத்தில், 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற, தேசிய திறனாய்வு தேர்வில், ஒரு வினாவுக்கு, தவறான விடை கொடுத்திருந்ததால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு இரண்டு கட்ட தேசிய திறனாய்வுத் தேர்வை எழுத வேண்டும்.
மாநில அளவில் தேர்ச்சி பெறும், முதல், 300 மாணவர்கள், தேசிய தேர்வு எழுதலாம். இதில், முதல், 1,000 இடங்களுக்குள் வந்தால், உதவித்தொகை கிடைக்கும்.
மாநில அளவிலான முதற்கட்ட தேர்வு, நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதில், 6,766 பள்ளிகளைச் சேர்ந்த, 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். அறிவுத்திறன் தேர்வு, கல்வித்திறன் தேர்வு என, இரண்டு தாள்களுக்கு தலா, 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. முதல் தாளில், 50 மதிப்பெண்களுக்கு ஆங்கில இலக்கணத் தேர்வு உண்டு.
இதில், குறைந்தபட்சம், 20 மதிப்பெண்கள் பெற்றால் தான், மற்ற கேள்விகளுக்கு விடைகள் திருத்தப்படும்; தேர்விலிருந்து மாணவர் நீக்கப்படுவார். நேற்றைய தேர்வில், முதல் தாளில், சிந்தனை மற்றும் கணிதத் திறன் குறித்த, 25ம் எண் கேள்விக்கு, வினாத்தாளில் கொடுக்கப்பட்ட நான்கு விடைகளும் தவறாக இருந்தன.
அந்தக் கேள்விக்கு, 'ரூட்' அடையாளத்துடன், 90 (√90) என்பது விடையாக வர வேண்டும். ஆனால், அந்த விடை கொடுக்கப்படவில்லை. அதனால், மாணவர்கள் நீண்ட நேரம் குழப்பம் அடைந்தனர். இந்த கேள்விக்கு எப்படி மதிப்பெண் வழங்கப்படும் என, தேர்வு மையத்தில் எந்த அறிவிப்பும் வழங்கப்பவில்லை.
Pallikudamnews
மின் வாரியத்தில் 1,950 பேருக்கு வேலை விரைவில் வெளியாகிறது அறிவிப்பு
மின் வாரியத்தில், புதிதாக, 1,950 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், பொறியாளர் என, 1.38 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதையடுத்து, 1,950 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான, நிதி ஒதுக்கீடு குறித்து, உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தற்போது, அந்தப் பணியும் முடிவடைந்ததால், ஊழியர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.
இதுகுறித்து, வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர் என, 1,950 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு, தீபாவளி முடிந்த, 10 நாளில் வெளியிடப்படும். 2016 மார்ச்சில், ஊழியர்கள் தேர்வு முடிக்கப்பட்டு விடும்' என்றனர்.
Pallikudam
கனமழை :
இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
வேலூர்,
அரியலூர்,
தஞ்சை,
திருவாரூர், திருவண்ணாமலை
சென்னை
திருவள்ளூர்
கடலூர்
காஞ்சிபுரம்
காரைக்கால்
புதுச்சேரி
விழுப்புரம்
ஆகிய மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக
இன்று விடுமுறை அறிவிப்பு.
pallikudam
Tuesday, November 3, 2015
pallikudam
டெங்கு' பாதிப்பை கட்டுப்படுத்த புதிய கஷாயம் வழங்க அரசு முடிவு
pallikudam
பொதுத்தேர்வு வினாத்தாளில்புதிய மாற்றங்கள் அறிமுகம்
pallikudam
உங்களுடைய பழைய செல்போனை விற்பதற்கு முன் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டியவைகள்...!!
இதற்கு அந்த போனிலேயே ஆப்சன்கள் கொடுத்திருப்பார்கள். எனவே அதில் உள்ள inbox, outbox, draft, sent items போன்ற அனைத்து போல்டர்களிலும் உள்ள குறுந்தகவல்களை அழித்துவிடுங்கள்.
- உங்களுடைய செல்போன் செட்டிங்ஸ் மெனு செல்லுங்கள்..
- அதில் Data wipe, Memory, Clear, Master Reset போன்ற ஏதேனும் ஒரு மெனு இருக்கும்.
- அதில் தொடருங்கள்....
- பாஸ்வேர்ட் கேட்டதெனில் பொதுவாக 1234, 12345, அல்லது 00000 என்பவையே இருக்கும்.
- அதைப் பயன்படுத்தி தேவையான செல்பேசியில் உள்ள தகவல்களை நீக்கிவிடலாம்.
Saturday, October 31, 2015
Pallikudamnews
CTET - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி.) முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.ctet.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
CLICK HERE - CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) - SEP 2015 RESULTS
மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளுக்கு சி.டி.இ.டி. தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
2015-ஆம் ஆண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சேர்த்து மொத்தம் 959 மையங்களில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை 7.5 லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவை சி.பி.எஸ்.இ. வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
தேர்வில் பங்கேற்ற அனைவருக்குமான மதிப்பெண் பட்டியலும், தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான தகுதிச் சான்றிதழும் விரைவில் விநியோகிக்கப்படும் என சி.பி.எஎஸ்.இ. தெரிவித்துள்ளது.
அடுத்த தேர்வுகள்: 2016-ஆம் ஆண்டுக்கான சி.டி.இ.டி. தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதியன்றும், செப்டம்பர் 18-ஆம் தேதியன்றும் அடுத்தடுத்து நடத்தப்படும் எனவும் சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
